குண்டலினியும் அதன் இயக்கமும்

ஒவ்வொரு மனிதனிடமும் ஓர் அடிப்படையான உயிராற்றல் அல்லது உயிர்ச்சக்தி உள்ளது. இதற்கே 'குண்டலினி' என்று பெயர். இது அடிப்படை நிலையிலேயே இருக்கும்போது மனிதனுக்குத் தன்னிடம் அத்தகைய உயிராற்றல் இருப்பதே தெரியாது. அந்த சக்தி நகருகிறபோதுதான் அவனால் அதை உணர முடியும். எப்படி ஒரு பாம்பு அசையாமல் இருக்கும்போது தெரியாமல், நகரும்போது நன்றாக தெரிகிறதோ, அது போல.
.
எனவேதான், குண்டலினிக்கான குறியீடாக பாம்பு பெரும்பாலும் பயன்படுத்தப் படுகிறது. சிவபெருமானின் தலையின் மீது கூட பாம்பு ஏறி அமர்ந்திருப்பதைக் காணலாம். தன் ஆன்ம சக்தியை உச்ச நிலைக்குக் கொண்டு சென்றிருப்பவர் சிவன் என்பதற்கான அடையாளம் இது. ஒரு மனிதன் அடையக் கூடிய அதிகபட்சமான உயர்நிலையும் இதுதான் என்பதையும் அது உணர்த்துகிறது.
.
உச்சியை நோக்கிச் செல்லும் குண்டலினி பற்றிச் சொல்லும்பொழுது ராமக்ரிஷ்ணர் அடிக்கடி சொல்லியியுள்ளார் :-எது ஒன்று உங்கள் அறிவு மையத்தை நோக்கி சிலிர்க்க வைக்கும் ஓர் உணர்ச்சியுடன் செல்கின்றதோ, அது எல்லா நேரத்திலும் ஒரே வகையான நகர்தலைப் பின்பற்றுவதில்லை. நமது வேதங்கள் அதற்கு ஐந்து வகையான இயக்கங்கள் உள்ளன என்று கூறுகின்றன.
.
முதலாவது : எறும்பு-போன்ற இயக்கம்; ஒருவருக்கு ஒரு மெதுவான படர்ந்து போவதான உணர்ச்சி பாதத்திலிருந்து மேல் நோக்கி எழும். எப்படி ஒரு வரிசையில் எறும்புகள் வாயில் உணவு கொண்டு ஊர்ந்து செல்லுமோ அப்படி. அது தலையைச் சென்று அடையும்பொழுது, ஒருவர் சமாதியில் நுழைகின்றார்.
.
இரண்டாவது : தவளை-போன்ற இயக்கம்; எப்படி தவளைகள் இரண்டு மூன்று சிறிய குதிகள் அடுத்தடுத்து செய்து பின்பு சிறிது இடைவெளி விட்டு மீண்டும் அதே போல் குதித்து நகர்ந்து செல்கின் றனவோ, அதே போன்று, ஏதோ ஒன்று பாதத்திலிருந்து மூளையை நோக்கிச் செல்வது உணரப்படுகிறது. அது மூளையைச் சென்றடையும்பொழுது, ஒருவர் சமாதியில் மூழ்குகிறார்.
.
மூன்றாவது :பாம்பு போன்ற இயக்கம்; எப்படி பாம்புகள் அமைதியாகக் கிடந்து (நேராகவோ அல்ல சுருளாகச் சுற்றியோ), பின்பு ஓர் இரையை பார்த்தோ, அல்லது பயமுற்றோ, திடீரென்று வெகு வேகமாக வளைந்து வளைந்து (zigzag) ஓடுகின்றனவோ, அதே போல், நம் உடலில் உள்ள சுருண்டேறிய' (coiled-up) சக்தி தலையை நோக்கி மின்னல் வேகத்தில் பாய்ந்து செல்கிறது. அது சமாதியைத் தருகிறது.
.
நான்காவது :பறவை-போன்ற இயக்கம்; எப்படி பறவைகள் அவற்றின் பறத்தலின்போது (ஒரு இடம் விட்டு மற்றொரு இடம் செல்லும்பொழுது) தங்கள் இறக்கைகளை அசைத்து, சில சமயம் சிறிது உயர் வாகவும், சில சமயம் தாழ்வாகவும், ஆனால் தங்கள் இலக்கை அடையும் வரை விடாமல் பறக்கின்றனவோ, அதே போல் சக்தி மூளையைச் சென்றடைந்து, சமாதி விளைவுறுகிறது.
.
ஐந்தாவது, கடைசியானது :குரங்கு-போன்ற இயக்கம்; எப்படி மரம் விட்டு மரம் தாவும் குரங்குகள், ஒரு கிளையிலிருந்து மற்றொரு கிளைக்கு ஒரே தாவாக தாவிச் சென்று இரண்டு மூன்று தாவல்களிலேயே, தூரத்தைக் கடக்கின்றனவோ, அதே போலவே, ஒரு யோகியும் குண்டலினி மூளையைச் சென்று மெய் மறந்த நிலை உருவாக்குவதை உணர்கிறார்.
.
ஆதாரம்: "Life of Sri Ramakrishna", an 'Advaita Ashrama' (Calcutta) Publication

ஊனினைச் சுருக்க எட்டு கட்டுப்பிடிகள்

"பால் நினைந்து ஊட்டும் தாயினும்
சாலப்பரிந்து பாவியேனுடைய
ஊனினை சுருக்கி உள்ளொளி பெருக்கு"
என்ற பாடலை நாளும் நூறு முறை பாடலாம்.


மு.கு:(வெப்பம்: Heat வெம்மை: temperature, வேது: Calorie

கொழுப்பு நிணம் இரண்டும் ஒரு பொருள். நிணம் என்பது கொழுப்பு என்று நாம் பயன் படுத்துவது போன்ற பொருள். கொழுப்பு என்பது நம் தோலின் அடியில் சேர்வது. கொழுத்து காண்பவருக்கு அது கூடுதலாக இருக்கும்.
கட்டுப்பிடி 1:
ஒன்றா இரண்டா....நாம் உட்கொள்ளும் உணவினால் விளையும் வேதுக்களின் எண்ணிக்கையை குறைக்கவேண்டும். ஆனால் அதே நேரம் நம் உடம்பில் நிகழும் வளர்சிதை மாற்றம் தங்கு, தடையில்லாமல் தொடர, ஒரு மனிதனுக்கு நாளும் 1600 முதல் 1800 வரை வேதுக்கள் பெறும் வண்ணம் உண்ண வேண்டும். நீங்கள் 200 பவுண்டு இடிச்ச புளியன் என்றால் உங்கள் தசைகளை வலுப்படுத்த நாளும் 75 கிராம் புரதம் தேவைப்படும்.

நீங்கள் எடை தூக்கும் மல்லர் என்றால் இதன் இரண்டு மடங்கு உட்கொள்ள வேண்டும். மற்ற உடற்பயிற்சியாளர்கள் இரண்டும் இடைப்பட்ட ஒரு எண்ணை பிடித்துக் கொள்ளுங்கள்.
எந்துகொண்டு?:
ஒரேயடியாக வேதுக்களை, அதூஉம் புரதம் வாயிலாகக் கிடைக்கும் வேதுக்களைக், குறைத்தால், அது உங்கள் உடம்பை, வேதுக்களை எரிப்பதற்கு மாறாகச், சிக்கனமாக்கிக் கொள்ளப் பழக்கிவிடும். மேலும் உயிரூட்டம் தொடர்ந்து செயல்படுத்த தசை நார்களையே அறுக்கத் தொடங்கிவிடும். ஆனால் இந்தத் தசைகள்தான் வளர்சிதை மாற்றத்துக்கு, அதாவது வேதுக்களை ஒரே கதியில் எரிப்பதற்கு, வேர் போன்றவை. எனவே பெரிய தசை என்றால் பெருகிய வளர்சிதை மாற்றம் அல்லது அருகிய கொழுப்பு.
(தசை இல்லாமல் தொப்பை மட்டும் இருந்தால் இரை விழுங்கிய மலைப்பாம்பு போல்; மயிலிறகே! மயிலிறகே வருடுகிறாய் என் அழகை என்று வருடிக் கொண்டு இருக்கலாம்.)
கட்டுப்பிடி 2:
மெதுவா மெதுவா ஒரு.... ஒரு பயிற்சி மேற்கொள்ளுங்கள். உண்ணுகையில் கொஞ்சமாக வாயில் இட்டு நன்றாக மென்று கூழாக்கி விழுங்குங்கள். பின் ஒரு வாய் நீரை உறுஞ்சுங்கள். ஒரு வேளை உண்டிக்கு எவ்வளவு நேரம் எடுக்கிறது என்று கணக்கிட்டுக் கொள்ளுங்கள். அடுத்த முறை உண்ணும்போது இதே அளவில் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சாப்பிடும்போது நிறையவே பேசுங்கள். (ஆயின், வாயில் உணவு இருக்கும்போது பேச வேண்டாம்.) "சாப்பிடும்போது என்ன பேச்சு" என்று யாரையும் வையாதீர்கள்.
எந்துகொண்டு?:
நாம் வேகமாகச் சாப்பிடுகையில், நம் வயிறு 'நான் நிறைந்துவிட்டேன்' என்ற சேதியை மூளைக்கு உணர்த்த நேரம் எடுத்துக்கொள்வதால், வயிறு முட்டி கொள்வதற்குள 'மூடிக்கொள்' என்ற வாய்க்கு ஆணையை எப்போது பிறப்பிக்க வேண்டும் என்று மூளைக்கும் தெரிவதில்லை.
கட்டுப்பிடி 3:
அறுத்த கோழி மிளகு போட்டு..... கிழங்கு வகைகளைக், குறிப்பாக வறுத்தவற்றைக், கூடிய வரையில் தவிர்க்கலாம். கிழங்குகள் குருதியில் சர்க்கரை அளவை விரைவாக உயர்த்துவதாக வல்லுநர்கள் சொல்லுகிறார்கள். வெள்ளை ரொட்டி, வறுத்த சீவல்கள், விடியல் உண்டிகளான நார்சத்து குறைந்த சில அவல்கள் போன்றனவும் இதே தன்மையனவாம்.
எந்துகொண்டு?:
முன்கூட்டி அடப்பட்ட ரொட்டி, அவல் போன்றவைகளில் நார் சத்துக்கள் குறைவாக இருப்பதே. இவைகள் வயிற்றை நிறைக்கலாம் ஆனால் வயிற்றைக் கழிக்காது. மேலும் நார் சத்துக்கள் மிகுந்த உணவுகளே குருதில் இன்சுலின் அளவையும் சக்கரையின் அளைவையும் கட்டுப்படுத்த உதவுகிறது.
கட்டுப்பிடி 4?:
தூங்காத கண் என்று ஒன்று...........ஒவ்வொரு இரவும், எல்லா இரவிலும் மஞ்சத்தில் எட்டு மணி நேரம் துஞ்சவும். அதுவும் வைகலும் ஒரே நேரத்தில், சரியாக சன் செய்திகள் முடிந்த உடனே கட்டிலுக்கு தாவவும். காலையில் எந்த நேரத்துக்கு துயிலுணர வேண்டுமோ அதற்கு எட்டு மணிகளுக்கு முன்னர் பாயலுக்கு பாய வேண்டும். கட்டில் உறவு தனிக்கணக்கு.
எந்துகொண்டு?:
தூக்கம் தவிர்த்தல் நம் உடலின் நிணத்தைத் தகர்ப்பதற்கு மாறாகத் தக்க வைத்துக்கொள்கிறது. நல்ல உடல்நலத்தோடு உள்ள ஆண்களுக்குத் தொடர்ந்து இரவுவேளையில் நான்கு மணி முதல் ஏழுமணி வரையில் உறக்கம் கொண்டிருந்தால் அவர்தம் குருதியில் சக்கரை இன்சுலின் அளவுகள் கூடி இருந்ததாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
கட்டுப்பிடி 5:
கல்யாண சமையல் சாதம்... உடல் எடையை கட்டுப்படுத்த நாம் எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பதையும் , எத்தனை முறை வெளியே/ உணவகங்களில் சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்து! எவ்வளவு உள்ளே செல்கிறது என்பதும் சாரும். அளவு சாப்பாடு என்றால் பரவாயில்லை. காசு கொடுத்தோம், மொய் வைத்தோம் என்று ஒரு வெட்டு வெட்டினால்? சில பறவைகள் உண்ட உணவை அதன் பார்ப்புகள் தொண்டைக்குள் அலகை செலுத்தி எடுத்துக்கொள்ளும். நம்மால், முடியுமா? ஓய்.
எந்துகொண்டு?:
உடற்பயிற்சி மட்டுமே ஒருவனை ஒல்லியனாக மாற்றாது. ஒரு ஆய்வில் படைவீரர்களை மூன்று ஆண்டுகள் கண்காணித்ததில் அவர்களது வழக்கமான உடற்பயிற்சிகளுக்கு மேலாகக் கூடுதல் பயிற்சி செய்தவர்கள் எடை கூடப்பெற்றார்களாம். ஏனென்றால் அவர்கள் எரிப்பதை காட்டிலும் அதிக உணவை உட்செலுத்தியதே என்கிறார்கள்.
கட்டுப்பிடி 6:
சமையல் அறையில், நீ உப்பா, சக்கரையா?......... இது ஒண்டிக்கட்டைகளுக்கு குறிப்பாக பொருந்தும். ஆம்பிள்ளை என்றால் கணினியை பிரித்துமேயத் தெரிந்தால் போதும்; அடுக்களைபற்றித் தெரியத் தேவையில்லை என்றெல்லாம் நினைக்கக்கூடாது. சமையல் குறிப்பை கையில் வைத்துக்கொண்டு சத்தான சாதம் படைத்து, நல்ல பழங்கள் துணை கொண்டு, அமுதம் உண்க.
எந்துகொண்டு?:
நமக்குத் தெரிந்த ஒரே சமையல், அன்னபூரணாவுக்கும் / சரவண பவனுக்கும் நடை கட்டுவதுதான் என்றால் நெய் தூங்கும் உணவு உண்டு நிணம் தூங்கும் மானுடர் ஆவது தவிர்க்க முடியாது தவிக்க வேண்டும்.
கட்டுப்பிடி 7:
தண்ணித் தொட்டித் தேடி வந்த கன்னுக்குட்டி.....: குடி, குடித்துக்கொண்டே இரு. நீங்கள் எடை குறைக்கும் முயற்சியில் ஈடு பட்டவரானால் தண்ணீர் உங்கள் உற்ற துணை. ஆம். உங்கள் உடலில் கொழுப்பு எரிந்து ஆற்றலாக மாறுகையில், அல்லது புரதத்தை பயனாக்கையில், கழிவாகும் வீண்பொருட்களை விரட்டுவதற்கு தண்ணீர் தேவை. மேலும் சத்துக்களை உடலின் எல்லா தசைகளுக்கும் கொண்டு செல்ல தண்ணீர் தேவை. உண்ட உணவு செரித்து, வளர்சிதை மாற்றத்தை சொடுக்கிக்கொண்டே இருக்கவும் தண்ணீர் நமக்கு தேவை. உடற்பயிற்சியாலும் கால நிலையாலும் உடல் வெப்பம் உறும்போது அதன் வெம்மையை தணிக்கவும் தண்ணீர் தேவை.
எந்துகொண்டு?:
எல்லாத்துக்கும் கேள்வி கேட்கப்படாது. சொன்னால் கேட்டுக்கணும்.
கட்டுப்பிடி 8:
யூத நாட்டைபார். ஒரு பத்து பவுண்டை நீங்கள் இழந்து விட்டால் அதை கைப்பற்றிய அயல்நாடுபோல காத்துக்கொள்ள வேண்டும். விட்டு விட்டால் மீண்டும் படை நடத்தி கைப்பற்ற வேண்டும். எனவே ஒவ்வொரு பத்து பவுண்டு எடை குறைப்புக்கு பின்னரும் அடுத்து என்ன மாதிரி உணவு பழக்கம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆராய்ச்சியில் தொடர வேண்டும்.
எந்துகொண்டு?:
ஒரு சிலர் ஒரு 10 அல்லது 20 பவுண்டுகளை இழப்பார்கள். தான் நினைத்தால் அதை மீண்டும் செய்து காட்ட முடியும் என்று பெருமிதம் கொள்வார்கள். உடனே காய்ந்த மாடு கம்பில் பாய்நது போல் பாய்வார்கள். பிறகு என்ன பழைய குருடி என் எடையை பாருடி கதைதான்.
ஊனினை சுருக்கும் வழிகளை சொன்னோம்.


உலக அரங்கில் தமிழின் பரவலாக்கம்

இந்திய அரசின் செம்மொழி அறிவிப்பும், உலக அரங்கில் தமிழின் பரவலாக்கமும்


"1918ஆம் ஆண்டு முதல் முன்வைக்கப்பட்ட தமிழ் செம்மொழி அங்கீகாரம் பெற வேண்டும் என்ற கோக்கை 2004இல் நிறைவேறும் தருணத்தில் இது தொடர்பாகச் சிலவற்றைப் பொறுப்புடன் விவாதிப்பது தமிழர்கள் அனைவரது கடமை." -என்னும் முனைவர் துரையின் எதிர்பார்ப்புகளுடன் இக்கட்டுரையத் தொடங்கலாம். (காலச்சுவடு)


"உயிர் உன்னதமானது உயிரினும் மேலானது எமது தாய்மொழி. ஒரு மொழி, ஒரு நாடு என மக்கள் வாழும் இந்த உலகில் நாடு ஒன்று இல்லாமல் பல நாடுகளிலும் வாழுகின்ற துர்ப்பாக்கியநிலை தமிழர்களுக்கு மட்டுமே இருந்து வருகின்றது. தமிழனுக்கென்று சுதந்திர நாடு ஒன்று இல்லாமல் இருப்பது கவலைக்குரிய விடயமாகும். இன்று 200 இற்கும் மேற்பட்ட நாடுகளில் 600 கோடி மக்கள் பேசும் மொழி பத்தாயிரத்துக்கும் மேலுள்ளன. 23 நாகரிகங்கள் இருந்துள்ள உலகில் 21 நாகரிகங்கள் அழிந்துபோயுள்ளன. ஆனால், இன்றும் உலகில் இரண்டு நாகரிகங்கள் மட்டும் அழியாமல் நிலைத்துள்ளன. அவற்றில் ஒன்று சீனம். அடுத்தது எமது தமிழ்.இன்று தமிழ்மொழி உலகில் 24 மணித்தியாலயங்கள் தொடர்ச்சியாகப் பேசப்பட்டுவருகிறது. மொழிக்குப் பேச்சும் சொல்லும் அவசியமானது. தமிழ்மொழிக்கு இவற்றுடன் பொருள் மொழி என்ற சிறப்பும் உள்ளது." -என்றார் யாழ்.திருமறைக் கலாமன்றம் நடத்திய இசைநாடக விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரைநிகழ்த்திய யாழ்.வெகு சன அமைப்புகளின் ஒன்றியத் தலைவர் சொ.சூ. சிறில் (உதயன்)


தமிழ் ஒரு செம்மொழி என்பதை வலியுறுத்திக் கூறும் கட்டுரையை எழுதவேண்டியுள்ள நிலையே தனக்கு வினோதமாகத் தோன்றுவதாகக் காலச்சுவடில் குறிப்பிடும் ஜார்ஜ் எல் ஹார்ட் பின்வரும் நான்கு விடயங்களை வலியுறுத்துகிறார்.


1. தமிழ் குறிப்பிடத்தக்க தொன்மை வாய்ந்தது. தற்கால இந்திய மொழி இலக்கியங்களுக்கெல்லாம் ஓராயிரம் வருடம் முந்தையது. அதன் மிகப் பழமையான நூலாகிய தொல்காப்பியம், தொடக்க காலத் தமிழ்க் கல்வெட்டுகளை வைத்து நிர்ணயிக்கும் போது, கி. மு. 200க்கு முந்தி எழுதப்பட்ட பகுதிகளைக் கொண்டது


2. இந்தியாவுக்கே உரிய அதே சமயத்தில் சமஸ்கிருதத்தினடியாக வராத இலக்கியப் பாரம்பரியத்தைத் தமிழ் மட்டுமே கொண்டிருக்கிறது. உண்மையில் தென்னகத்தில் சமஸ்கிருதம் செல்வாக்குப் பெறுவதற்கு முன்னரே, தமிழ் இலக்கியம் எழுச்சியடைந்துவிட்டது.


3. சமஸ்கிரும், கிரேக்கம், லத்தீன், சீனம், பாரசீகம், அரபு ஆகிய மொழிகளின் பெரும் இலக்கியங்களுக்கு ஒப்ப நிற்கும் தகுதி தமிழின் செவ்விலக்கியங்களுக்கு இருக்கிறது. இம்மொழியிலுள்ள படைப்புகளின் நுட்பமும் ஆழமும் (இந்தியாவின் நவீன இலக்கியத்துக்கு முந்தைய காலகட்டத்தில் அடித்தள மக்களைப் பற்றிப் பேசியவை தமிழ் இலக்கியங்கள் மட்டுமே) உலகளாவிய தன்மையும் உலகச் செவ்விலக்கியங்கள் மற்றும் பாரம் பயங்களில் ஒன்றாகும் தகுதியைத் தமிழுக்குத் தருகின்றன. உலக அளவில் அறவியலைப் பற்றிய பெரும்நூல்களில் ஒன்றாகத் திருக்குறளை அனைவரும் அறிவார்கள்.


4. நவீன இந்தியாவின் கலை மற்றும் மரபு பற்றி அறியத் தற்சார்புடைய முதன்மை ஆதாரங்களுள் தமிழ் ஒன்று. சமஸ்கிருதக் கவிதை மரபின்மீது தென்னக மரபின் செல்வாக்குப் பற்றி நான் விரிவாக எழுதியிருக்கிறேன். இதற்குச் சமமான முக்கியத்துவத்துடன் கவனிக்கப்பட வேண்டியது சங்க காலத்திலிருந்து தொடங்குகிற தமிழிலுள்ள இந்துமத நூல்களாகும்.


இதே சமயத்தில் இயல்பாக எழும் வினாவையும் முன்மொழிகிறார்:தமிழ் ஏன் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதைப் புந்துகொள்ள முயலும்போது, அரசியல் காரணத்தை மட்டுமே என்னால் உணரமுடிகிறது. செம்மொழியாகத் தமிழ் அறிவிக்கப்பட்டால் பிற இந்திய மொழிகளும் அதே அந்தஸ்துக்கு உமை எழுப்பும் என்னும் அச்சம். இது தேவையற்ற கவலை. தற்கால இந்திய மொழிகளின் செழுமை குறித்த புரிதல் எனக்கு உண்டு. இன்று பேசப்படுகிற மிகவும் வளமான, தொன்மை வாய்ந்த, படைப்பாற்றல் மிக்க மொழிகளில் அவையும் அடங்கும்.


«நாம் தமிழுக்குச் செம்மொழி என்னும் தகுதி வேண்டுமென்று கேட்கும்போது கொஞ்சம் எச்சக்கையாக இருக்க வேண்டும். தமிழ் செம்மொழி மட்டுமல்ல, நவீன மொழியும்கூட. செம்மொழி என்கிற தகுதி வரும்போது, நவீனமொழி என்கிற தகுதி போய்விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்திய அரசைப் பொறுத்த வரையில், செம்மொழிகளுக்குப் பணம் ஒதுக்கும் முறையே வேறு. நவீன மொழிகளுக்கு ஒதுக்கப்பட்ட பணம் முத்தமிழுக்குத் தேவையென்றால், தமிழ் நவீன மொழி என்ற தகுதியையும் காத்துக்கொள்ள வேண்டும். சுமார் 120 ஆண்டுகளுக்கு முன், சமஸ்கிருதம் கல்லூரியில் தாய்மொழிக் கல்விக்குப் பதிலாக ஒரு பாடமாகக் கற்பிக்கப்பட்டால் காஷ்மீர் முதல் கன்னியாக்குமரி வரை வாழும் மக்கள் ஒரே விதப் பண்பாடு கலை, சிந்தனைப்போக்கு உருவாகி, அனைவரும் பாரத மக்கள் எனும் உணர்வைப் பெறுவர். இதனால் மக்களிடையே ஒருங்கிணைவும், ஒற்றுமையும் உருவாக்கமுடியும் என்றெல்லாம் கூறிய அதிகார வர்க்கம், கல்லூரிகளில் தாய்மொழிக் கல்வியைத் தொடர முனைந்த வைராசியர் கர்சான் பிரபுவை திக்குமுக்காட்டுவித்தனர். அத்துடன் இந்தியப் பாரம்பரியத்திற்கு செம்மொழி தகுதி சமஸ்கிருதத்திற்கு மட்டுமே உண்டு என்பதால், சமஸ்கிருதத்தையே பாடமொழியாக்க வேண்டும் என்று வாதிட்டனர்.


.இதைக்கேட்டு வெகுண்டெழுந்த வடமொழி வல்லுநரும் தமிழ்ப் பேராசிரியருமான சூரியநாராயண சாஸ்திரிகள், சமஸ்கிரகத்தைவிட பன்மடங்கு தகுதிபடைத்த செம்மொழி தமிழ் என வாதிட்டார். இதற்கு தகுந்த உறுதுணையாக இருந்தவர் மு.சு. பூரணம்பிள்ளை. இத்தகைய முனைப்பால் அன்று பாடமொழியாகியது தமிழ். அன்றுதொட்டு நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த கோரிக்கைதான் தமிழ் செம்மொழி என்ற கோரிக்கை.» -என்ற வரலாறை ஞாபகமூட்டுகிறார் தமிழுக்காகவென்றே வாழும் தமிழ்ப்பற்றாளர் மணவை முஸ்தாபா.


« தமிழ்மொழி செம்மொழியென்று ஆகிவிட்டால், அரசியல் சட்டம் எட்டாம் பிரிவின்படி நவீன இந்தியமொழி என்று அதற்குக் கிடைத்துவரும் உரிமைகளும், சலுககைகளும் பாதிக்கப்பட மாட்டா என்பது என்ன நிச்சயம்? ஒரே மொழி இரண்டு தகுதிகளுக்கும் உரியது ஆகாதென்று மனிதவள மேம்பாட்டுத்துறை கூறாது என்பது உறுதியா?» -என உரத்துக் கேள்வி எழுப்புகிறார் தமிழ்நாட்டு எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி.


மேலும், தமிழ் ஆங்கிலத்தைப்போல், பிரெஞ்சைப்போல், ஸ்பானிசைப்போல், அரபினைப்போல் ஐநாவில் ஒலிக்கப்போகும் காலம் வந்துவிட்டதென ஒரு இலண்டன் தமிழர் ஹிந்து நாளிதழில் எழுதுகிறார் - கேட்க இனிமையாக இருக்கிறது. ஆனால் ஐநா அரசியல் என்பது வேறு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசியல் வேறு என்பது அவருக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை என்று மேலும் பரிதாபப்படுகிறார் இந்திரா பார்த்தசாரதி.


"ஐந்நூறு அல்லது ஆயிரம் சின்னக்கிளிகள் தொடர்ந்து ஒரு மனிதனை நச்சப்பது - கண் காதினுள் நுழைவது, கழுத்தில் ஊர்வது - மூலம் அவனைச் சிந்திக்க, எழுத, வாசிக்க, தூங்கவிடாமல் செய்யமுடியும். மூளை குழம்பிய நிலைக்கு அவனைத் தள்ளமுடியும் இதுதான் இப்போது நடந்துவருகிறது.''


மீடியா ஒரு ஜனநாயக அமைப்பின் நான்காம் தூண் என்ற ஒரு மூடநம்பிக்கை உண்டு. அரசின் வரம்பு மீறல்களை மக்கள் கவனத்திற்குக் கொண்டுவந்து, மக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வை உருவாக்கி ஜனநாயகத்தைப் பேணுவது மீடியாவின் கடமையாகக் கருதப்பட்டது. ஆனால் இன்று ஊடகங்கள் அந்தக் கடமையை ஆற்றுகின்றனவா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இன்று அத்தகைய எந்தக் கடமையையும் மீடியா பொதுவாகப் பேணுவது இல்லை…. தனது வன்முறையை மறைக்க அதிகாரவர்க்கம் செய்யும் பல தந்திரங்களில் ஒன்று சொற்களைச் சாதுர்யமாகப் பயன்படுத்துவது. இந்தத் தந்திரத்திற்கு மீடியா முழு ஆதரவு வழங்குகிறது…… -என்று இடித்துரைக்கிறார் பதிப்பாளரும் ஆசிரியருமான கண்ணன்.


21ம் நூற்றாண்டில், தாயகத்துக்கும் அப்பால்… வாழும் மொழியாய் விரிகின்றது தமிழ்!தயக்கமாய் "செம்மொழி" பட்டம் பெறுகிறது இந்தியாவில்!

Tamil - a Classical Language

Tamil Translation of Professor Hart's Statement on Tamil - a Classical Language [source Thamizh Mann]முனைவர் ஜியார்ஜ் எல்.வறார்ட் அவர்கள் ஆங்கிலக் கட்டுரையின் தமிழாக்கம்
தமிழ் ஒரு செம்மொழி என்ற தகுநிலை பற்றிய ஒரு விளக்கவுரை வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதற்கிணங்க, பெருமகிழ்ச்சியுடன் ஏற்று இதனை எழுதுகிறேன்.1975-ம் ஆண்டு முதல் பெர்க்ளி கலிபோர்னியா பல்கலைக் கழகத்தில் நான் ஒரு பேராசிரியராக உள்ளேன் தற்சமயம் அங்கு தமிழ்த்துறை தலைவன். 1970 ஆம் ஆண்டு ஃகார்வடு பல்கலைக் கழகத்தில் வடமொழி (சமசுகிரித)ப் பட்டம் பெற்றேன். எனது முதல் அனுபவம் 1969ல் மேடிசன், விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் வடமொழிப் பேராசிரியர் வேலை ஏற்றது. தமிழ், வடமொழி தவிர இலத்தீன், கிரேக்கச் செம்மொழி களை அறிந்து அவற்றின் மூலம் அந்த இலக்கியங்களையும், மொழி ஒப்பியல் ஆய்வு நூல்களையும் விரிவாக படித்துள்ளேன்.

அவற்றுடன் உருசியன், செர்மன், ஃபிரென்சு ஆகிய தற்கால ஐரேப்பிய மொழிகளிரும் நல்ல பரிச்சயம் உண்டு. அம்மொழி இலக்கியங்களையும் விரிவாகக் கற்றுள்ளேன். இவை தவிர இந்திய இலக்கியங்களில், தமிழ் மலையாள நு}ல்களை அம்மொழிகள் வாயிலாகவும், பிற மொழி நு}ல்களை ஆங்கில மொழியாக்கங்களின் வழியும் படித்துள்ளேன். தெலுங்கு மொழியின் தலையாய் அறிஞர்களுள்; ஒருவரான திரு வி.நாராயணராவ் அவர்களுடன் நெடிது உரையாடப்பெற்ற வாய்ப்புக்கள் வழி அம்மொழி யின் பாரம்பரியத்தையும் நன்கு அறிவேன். கிழக்காசிய மொழிகள் துறையின் நீண்ட நாள் உறுப்பினன் என்ற முறையில் இந்திமொழி இலக்கியச் செழிப்பை அறிந்துணரும் வாய்ப்பும் பெற்றேன்;. துளசி, கபீர், மகாதேவ வர்மா நூல்களை ஆழமாகப் பயின்றுள் ளேன்.நான் பல ஆண்டுகளை உண்மையில் 1969 முதல் என் வாழ்வின் பெரும்பகுதியை வடமொழிக் கல்வி ஃ ஆய்வில் பயன்படுத்தியுள்ளேன். காளிதாசர் மகா படைப்புக்களை முழுமையாகவும், பவாரி, சிறீஃகர்சா நூல்களில் பல பகுதிகளையும் வடமொழி மூலத்தில் படித்துள்ளேன். இவை தவிர இருக்வேத ஐந்தாவது மூலப் பொத்தகத்தையும், பல உபனிசத்துக்களையும் மாபாரதம், கதா சரிதசாகரம், ஆதிசங்கரர் நூல்களில் பெரும் பகுதிகளையும், மற்றும் பல மொழி வடமொழி நூல்களையும் கற்றுள்ளேன்.நான் இவற்றை யெல்லாம் இங்கு சொல்வது, எனது அறிவாற்றலை வெளிப்படுத்தும் நோக்கத்தில் அன்று. ஒரு இலக்கியத்தில் செம்மொழிப் பாங்கைச் சீர்தூக்கும் தகுதி எனக்கு உண்டு என்பதைத் தெளிவுபடுத்த மட்டுமே. எவ்வகையான அளவைக் கோட்பாடுகளைத் தேர்ந்து நோக்கினாலும், மேலான உலக பாரம்பரியங்கள், செம்மொழி இலக்கியங்களைக் கொண்ட மொழிகளில், நிச்சயமாகத் தமிழ் ஒரு சிறப்பான இடம் பெற்றுள்ளது என்பதை எந்தத் தயக்கமுமின்றி உறுதியாகச் சொல்ல முடியும்.இதற்கான காரணங்கள் பல, அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்: முதன்மையாக, தமிழ் மிகத் தொன்மையான மொழி. பிற இந்திய மொழிகளின் தற்கால இலக்கியங்களை விடத் தமிழ் ஆயிரம் ஆண்டுகளுக்குமேல் காலத்தால் முற்பட்டது.
தமிழின் பழமையான நூலான தொல்காப்பியத்தின் பகுதிகள், பழைய கல்வெட்டு களையும், செப்பேடுகளையும் வைத்து நோக்கும்போது கி.மு. 200 ஆண்டிற்கு முற்பட்ட தாகத் தெரிகிறது. பழந்தமிழின் பெருமை போற்றும் சங்ககாலத் தனிப்பாடல் திரட்டுக்கள், பத்துப்பாட்டு போன்றவை கி.பி. முதல் இரண்டு நு}ற்றாண்டுகளைச் சேர்ந்தவை. அவை இந்தியாவில் முதல்முதலான, சமயங்களுக்கு அப்பாற்பட்ட, உலகியல் வாழ்வு தழுவிய சிறப்புடைய பாடல் தொகுதிகளாகும்.இரண்டாவதாக, இந்திய மண்ணின் மணம் கமழும் இலக்கியப் பாரம்பரியமாக, வடமொழித் தொடர்பில்லாது தோன்றிச் செழித்தது தமிழ் மட்டுமேயாகும். வடமொழியின் தாக்கம் தெற்கே பரவி வலுப்பெறுவதற்கு மிக முன்னதாகத் தோன்றியவை தமிழ் இலக்கியங்கள.; அவை பண்பில் தரத்தில் வடமொழி, பிற இந்திய மொழி இலக்கியங்களிலிருந்து வேறுபட்டு நிற்க்கின்றன. தனக்கே உரிய செய்யுள் அமைப்பு முறைகள், இலக்கணப் பாரம்பரியம், தமிழ் மண்ணில் தோன்றிய நுண்ணறி விய லின் எழில், தன்னேரில்லாது பரந்து விரிந்து இலக்கியச் செழிப்பும், தனித்தன்மையும் கொண்டது.

ஒப்புவமையற்ற இந்தியப் பண்பாட்டு உணர்வுகளை தமக்கே உரிய முறையில் தமிழ் இலக்கிங்கள் வெளிக்கொணர்ந்துள்ளன. விரிந்த பரந்த, மிகச் செழிப்பான, நுண்மாண் நுழைபுலன் விளைச்சலைக் கொண்ட பெட்டகங்கள் அவை. வடமொழி, மற்ற இந்திய மொழிகளில் உள்ளதைவிட பெரிதும் மாறுபட்ட, இந்திய அறிவுணர்வை உள்ளடக்கியவை. மூன்றாவதாக, உலகப் புகழ்பெற்ற சமசுகிருத, கிரேக்க, இலத்தீன், பார்சி, அரபியப் பேரிலக்கியங்களுடன் ஒப்பிடும்போது, தரத்தில் முன்னணியில் நிற்கும் தகுதியுடையவை தமிழிலக்கியங்கள். அவற்றின் நுட்பமும், முழுமையும,; திண்மையும், உலகளாவிய பல்நோக்குப் பார்வையும், தமிழை உலகின் சிறந்த பண்பாட்டுப் பாரம்பரியங்கள், இலக்கியங்களின் வரிசையில் அமர்த்தும் தகுதியைத் தந்துள்ளன.
முதன்மையான, முதன்மைக்கு அடுத்த நிலையினரல்லாது பொதுமக்களைப் பற்றியும் விரிவாகப் பேசும் முற்கால இந்திய இலக்கியம் தமிழ் ஒன்றே. அறம்பாடும் உலகின் முதன்மையான நு}ல்களில் பொதுவானது திருக்குறள் என்பது யாவரும் அறிந்ததே.திருக்குறள் தமிழின் இலக்கியப் பாரம்பரியத்தைப் பறைசாற்றத் தோன்றிய பல பன்முக, பல்வகை துறை முதன்மை நூல்களில் ஒன்றேயாம். மாந்தர் வாழ்வியலை அகழ்ந்தாய்ந்து அதன் பன்முகத் தோற்றங்களுக்கு ஒளியேற்றியதில் தமிழ் இலக்கியம் ஈடுஇணையற்றது.முத்தாய்ப்பாக, தமிழ் தற்கால இந்தியக் கலாசாரத்திற்கும் பாரம்பரியத் திற்கும் ஊற்றுக்கண்ணாக விளங்கும் ஒரு முதன்மையான தன்னிலை, தற்சார்புள்ள (சுதந்திரமான) மொழி. தெற்கத்திய பாரம்பரியத்தின் தாக்கம் வடமொழி செய்யுள் பாரம்பரியத்தில் பரவியுள்ளது பற்றி ஏற்கனவே விரிவாக எழுதியுள்ளேன்.

அதேபோல் சிறப்புடையவை. சங்ககாலம் தொடங்கிய பாடல் தொகுதிகள், தமிழர் இந்து சமயத்தின் புனிதமிக்க பேரிலக்கியங்கள் அவை தற்கால இந்துக் கோட்பாடுகளுக்கு அடித்தள அதார உறுதி தருபவை. அவற்றினுடைய கருத்துக்கள் சமசுகிருத, தெலுங்கு, கன்னட மொழிகளில் பகவத புராணம், மற்ற நூல்களில் ஏற்றொழுகப்பட்டு, மேல் இந்தியா முழுதும் பரவியுள்ளன. புனிதத்தில் வடக்கின் நான்கு வேதங்களுக்கு இணையாகக் கருதப்படும் நூல்கள் தமிழில் உள்ளன. அத்திருமறைகள் வேத மந்திரங்களோடு, திருப்பதி போன்ற வைணவத் தலங்களில் ஓதப்படுகின்றன. தற்கால ஆரிய - இந்திய மொழிகளுக்கு வடமொழி ஊற்றுக்கண்ணாக இருப்பதைப்போலவே, தற்காலத் தமிழ், மலையாளம் போன்ற மொழிகளுக்குச் செந்தமிழ் அடிப்படை. இந்திய ஆரிய மொழிகளில் சமசுகிருதம் மாற்றங்களை ஏற்காத, பழமை பேணும் மொழியாக இருப்பதைப் போலவே, திராவிட மொழிகளில் பழமை போற்றும் மொழி தமிழ், திராவிடரின் இயல்பு. முன்னேற்றம் பற்றி அறிய விரும்பும் மொழியியலார் நாடும் உரைகல்.
தமிழ் ஏன் இன்னும் செம்மொழியாகக் கண்டு ஏற்கப்படவில்லை என்பதைப் புரிந்துகொள்ள முனையும்போது, நான் ஒரு அரசியல் காரணத்தையே காணுகிறேன். தமிழ் செம்மொழியாகத் தேர்வு செய்யப்பட்டால், மற்ற இந்திய மொழிகளும் அந்த நிலைக்கு உரிமை கொண்டாக்கூடும் என்ற அச்சமே. இது தேவையற்ற கவலை. தற்கால இந்திய மொழிகளின் சிறப்பையும் நான் அறிவேன் - அவை உலக மொழிகள் பலவற்றுடன் ஒப்பிடும்போது செழிப்பும், ஆக்கத்திறனும் கொண்டவை.

அவை ஒவ்வொன்றும் உலக மொழி இலக்கியங்களுக்கு இணையான இடைக்கால, தற்கால இலக்கியங்களைக் கொண்டவை. ஆனாலும் அவற்றில் எதுவும் செம்மொழியன்று. ஆங்கிலம் போன்ற தற்கால ஐரோப்பிய மொழிகள் (கிரேக்கம் தவிர) ஏற்கனவே இருந்த செம்மொழிகளின் பாரம்பரியத்தைத் தழுவிப் பின்னால் கி.பி. இரண்டாயிரத்தாணடில் வளர்ந்தவை. ஐரோப்பாவின் செம்மொழியாக உலகமுழுதும் கிரேக்கம் அறியப்பட்டுள்ளது என்றாலும் அதனால் ஃபிரென்சும், ஆங்கிலமும் செம்மொழிகளுக்கான நிலையைக் கோர முடியும்.செம்மொழிப் பாரம்பரியத் தகுதிபெற, ஒரு மொழி பல சீர்நிலைக் கோட்பாடு களுக்குப் பொருந்தவேண்டும். அதற்குப் பழந்தொன்மை, வேறொரு பாரம்பரியத்தின் கிளையாக அமையாத தற்சார்பு வளர்ச்சிப் பாரம்பரியம் இவற்றுடன் செல்வச் செழிப்பு மிகுந்த பழம் இலக்கியத் தொகுப்புக்களைக் கணிசமான அளவு பெற்றிருக்கவேண்டும்.
பிற தற்கால இந்திய மொழிகளைப் போலல்லாது தமிழ் மேற்சொன்ன எல்லாத் தகுதிகளையும் தன்னகத்தே கொண்டது. தமிழ், இலத்தீன் மொழிபோல் மிகமிகப் பழமையானது, அரபி மொழிக்கு மூத்தது. வடமொழி அல்லது வேற்றுமொழித் தாக்கங்கள் இல்லாமல், முழுமையான தன்னிலைத் தோற்றம். வளர்ச்சிப் பாரம்பரியங்களுடையது. அதன் பழம்பெரும் இலக்கியங்கள் சொல்லில் விரிக்கவியலாப் பரப்பும், செல்வச் செழிப்பும் கொண்டவை.தமிழ் செம்மொழி இலக்கியச் சிறப்புக்கள் உடையது என்ற உரிமையை நிலைநாட்ட,நான் இதுபோல் ஒரு உரையை எழுதவேண்டும் என்பது, விந்தையாகத் தோன்றுகிறது. இது இந்தியா பெருமைமிக்க நாடு, இந்துசமயம் உலக மதங்களில் சிறந்த ஒன்று என்று வாதாடுவதைப்போன்றது. உலகில் சிறந்து விளங்கும் செம்மொழிகளில் தமிழ் ஒன்று என்ற மேலான தகுதி, மொழியியல் அறிந்தவர்களுக்கு வெள்ளிடை மலை, உள்ளங்கை நெல்லிக்கனி. தமிழின் செம்மொழித் தகுதியை ஏற்க மறுப்பது, இந்திய நாகரிகத்தின் பெருமைக்குக் கருவான மையப் பகுதியைக் காண மறுப்பதாகும்.

தமிழ் ஒரு செம்மொழி - முனைவர் வா.செ. குழந்தைசாமி
எந்த ஓர் இனமும் சமுதாயமும் தனது பண்டைப் பெருமைபற்றிப் பெருமிதத்துடன் எண்ணுவதும் பேசுவதும் இயல்பு. பாரம்பரியம் என்பது மரத்துக்கு ஆணி வேர் போல. அசையாது நிலைத்து நிற்கும் தன்மைக்கு அதுதான் அடீப்படை. பாரம்பரியம் என்பது பழைமை என்பதும் கழிந்த நாள்களின் கணக்கன்று. அது முன்னோர் அனுபவங்களின் தொகுப்பு. இந்த அனுபவங்களெனும் செல்வத்தை, அது சேரச் சேர தொகுத்துப் பாது காத்து வைத்திருக்கும் கொள்கலன் (container) ஓர் இனத்தின் மொழிதான்.

தான். தாங்கி நிற்கும் கருவுலத்தை அது தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்து வருகிற தலைமுறைக்கு விட்டுச் செல்கிறது.
ஓர் இனத்தின் பெருமையை அந்த இனத்தின் மொழி பிரதிபலிக்கிறது. மாபெரும் நாகரிகங்கள் மகத்தான மொழியை உருவாக்கத் தவறியதுமில்லை. வரலாற்றுப் பெருமை இல்லாத மக்கள் வளம் மிக்க மொழியை உருவாக்கத் தவறியதுமில்லை. வரலாற்றுப் பெருமை இல்லாத மக்கள் வளம் மிக்க மொழியை உருவாக்கியதுமில்லை.

மூவாயிரம் ஆண்டுப் பாரம்பரியம் உள்ள இந்திய நாகரிகம் கண்ட இரு மொழிகள்தாம் தமிழும் வட மொழியும். இவை இரண்டுமே வரலாற்றுக் காலத்துக்கு முந்திய வாழ்வுடையவை. மறைந்துபோன வரலாறுடையவை. இது தனிப்பட்டவர் அபிப்பிராயம் அன்று. அறிஞர்கள் ஒப்பிய உண்மை. ஆவணப்படுத்தப்பட்ட வரலாறு.தமிழ், வடமொழி ஆகிய இரு மொழிகட்கும் தொன்மைச் சிறப்புண்டு. இரண்டாயிரம் ஆண்டுகட்கு முந்திய இலக்கணம் உண்டு. பழைமை வாய்ந்தவை என்று பாராட்டத்தக்க கவிதை இலக்கியங்கள் உண்டு.
இலக்கிய உலகங்கள் போற்றும் காப்பியங்கள் உண்டு. உலகில் இந்த அளவுக்குப் பெருமையுடைய மொழிகள் ஆறு. அவற்றுள் இரண்டு மொழிகளின் தாயகம் இந்தியா. இரண்டும் செம்மொழிகளின் வரிசையில் இடம் பெறுபவை. இந்தப் பெருமை Nவுறு எந்த நாட்டுக்கும் இல்லை. வடமொழியை அதன் இலக்கியத்தின் அகலத்தை, ஆழத்தை அடையாளம் கண்டு அதை இலத்தின்போல கிரேக்கம் போல ஒரு செம்மொழி எனக் கூறியவர்கள் நாம் அல்லர். மேலை நாட்டினர். அதேபோல ஐரோப்பிய நாடுகள் முதல் இங்கிலாந்து. அமெரிக்க வரையுள்ள மொழி வல்லுநர்கள் இந்திய அயல் நிபுணர்கள் விவாதத்திற்கிடமின்றி ஏற்கப்பட்ட உண்மையாகும். இயல்பாகத் தமிழைச் செம்மொழி என்று தங்கள் பேச்சில் எழுத்தில் குறிப்பிடுகிறார்கள்.
இது விவாதத்திற்காகவோ இனிமேல் நிறுவப்பட வேண்டிய தகுதிக்காகவோ எண்ணப்படவில்லை.
இன்று இந்தியப் பண்பாட்டை இந்தியச் சிந்தனை மரபை முழுமையாக அறிந்துகொள்ள இந்த இரண்டு மொழிகளின் துணை தேவை என்பதை வலியுறுத்தாத மேலை நாட்டு இந்தியவியல் (Indology) அறிஞர்கள் யாரமில்லை. ஐரோப்பிய நாகரிகத்திற்கு இலத்தினும் கிரேக்கமும் போல இந்திய நாகரிகத்திற்குத் தமிழும் வடமொழியும் என்ற கருத்து பரவலாக ஏற்கப்பட்ட ஒன்று. அது நாளுக்கு நாள் வலிமைபெற்றும் வருகிறது.ஏதோ வாலாற்று நிகழ்வுகள் காரணமாக இந்திய அரசு தயாரித்த செம்மொழிகள் பட்டியலில் வடமொழியோடு பாரசீகம் அராபியம் ஆகியனவும் இடம்பெற்றிருக்க தமிழ் விடுபட்டு விட்டது.
இந்தக் குறையை நீக்குதல் வேண்டுமென்பதுதான் இன்றைய தமிழ்றிஞர்களின் வேண்டுகோள். தமிழகத்தலைவர்களின் வேண்டுகோளும் இதுவே. இது ஏதோ தமிழுக்காகப் புதிதாக ஒரு மகுடம் சூட்டும் முயற்சி அன்று.பரிதிமாற் கலைஞர் இராமானுசம் போன்ற இந்திய அறிஞர்கள் எமனனோவ் கதில்பெல் போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் எழுதியது, பேசியது ஒருபுறம் இருக்க. அமெரிக்காவில் பெர்க்லி (Berkeley)வளாகத்தில் இருக்கும் புகழ் வாய்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் (University of California) பேராசிரியரான டாக்டர் ஜார்ஜ் வறார்ட் அண்மையில் எழுதிய ஒரு கட்டுரையை இங்கே குறிப்பிடுவது பொருந்தும்.
அவருடைய பின்னணி பற்றிய சுருக்கமான தகவல் பின்வருமாறு.அவர் வறார்வர்டு பல்கலைக் கழகத்தில் வடமொழி படித்துப் பட்டம் பெற்றவர். 1969 முதல் 1975 வரை அமெரிக்காவில் மேடிசன் நகரில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் (University of Wisconsin) வட மொழிப் பேராசிரியராக இருந்தவர். 1963இல் தொடங்கி வடமொழி இலக்கியங்களை விரிவாக்கக் கற்று வந்தவர். காளிதாசன் மாகன் (ஆயபாய) பாரவி வறர்சூன் (Sri Harsha) போன்றோர் படைப்பின் மூலத்தை ஆழ்ந்து படித்தவர். ரிக் வேதத்தின் ஐந்தாவது பகுதி பெரும்பாலான உபநிடங்கள் ஆகியவற்றை அவற்றின் மூலமொழியிலேயே கற்றவர்.

அவருக்கு இலத்தின் கிரெக்கம் ஆகிய இரு மொழிகளிலும் நல்ல புலமை உண்டு. அவற்றிலுள்ள இலக்கியங்களை அந்தந்த மொழிகளில் விரிவாகப் படித்தவர். மேலும் நவீன் மொழிகளான இரசூ;;யா, ஜெர்மன் பிரஞ் ஆகிய மொழிகளிலும் புலமை உள்ளவர்.
அவற்றிலுள்ள இலக்கியங்களையும் பரவலாகப் படித்தவர். 1975 முதல் பெர்க்லி வளாகத்தில் உள்ள கலிபோர்னியா பல்கலைக் கழகத்தின் தமிழ்ப் பேராசிரியராகப் பணி புரிகிறார். நாம் அவரைப்பற்றி இவ்வளவும் கூறுவது அவருடைய பெருமைக்காக அல்ல. ஒரு மொழியின் செம்மொழித் தகுதியைத் தீர்மானிக்கும் வளமான பின்னணி அவருக்கண்டு என்பதை எடுத்துக் காட்டவே ஆகும்.
ஏனெனில் செம்மொழித் தகுதி என்பது பொதுக்கூட்டத்தில் முடிவு செய்வதன்று. அரசின் ஆணையால் உருவாக்கப்படுவதும் அன்று. அது அறிஞர்களின் ஏற்பால் ஒரு மொழிக்கு வருவது. தமிழில் செம்மொழி;த் தகுதிக்கான அடிப்படைகள் பற்றி விரிவாக்க கூறிவிட்டு அவர் பின்வருமாறு முடிக்கிறார். தமிழ் ஒரு செம்மொழி என நிறுவ நான் ஒரு கட்டுரை எழுத வேண்டியிருப்பது எனக்கு விந்தையாக இருக்கிறது. இது இந்தியா ஒரு நாடு என்பதையும் இந்து மதம் உலகின் மாபெரும் சமயங்களில் ஒன்று என்பதையும் நிரூபிக்க வேண்டும் என்பதுபோல் இருக்கிறது. ("It seems strange to me that I should have to write an essay such as this claiming that the Tamil is a Classical Language - It is akin to claiming that India is a great country or Hindustan is one of the world's great religions)
"உலகின் பெருமை வாய்ந்த செவ்வியல் மொழி தமிழ் என்பது இத்துறையில் ஞானம் உள்ளவர்கட்கு ஐயம் திரிபற வெளிப்படை. தமிழின் செம்மொழித் தகுதியைப் புறக்கணிப்பது இந்தியப் பண்பாட்டுப் பெருமையின் அதன் வளத்தின் சக்தி வாய்ந்ததும் மையமெனத் தக்கதுமான சிறப்பை இழப்பதுமாகும். (The Status of Tamil as one of the great classical languages of the world is something that patently obvious to any one who knows the subject. To deny that Tamil is a classical Language is to deny a vital and central part of the greatness and richness of Indian Culture.")
தமிழின் செம்மொழித் தகுதி என்பது தமிழின் பெருமையொட நிற்பதன்று: அது மொழி வளர்ச்சியில் இந்தியப் பண்பாடு எட்டியுளள உச்சியின் இன்னொரு சிகரம். நமது பாரத அரசு நிலை நிறுத்த முயலும் இந்தியத்துவத்தின் பெருமைக்கு இன்னொரு மகுடம்.முக்கியமானது என நான் கருதுகிற இன்னொரு கருத்தையும் இங்குப் பதிவு செய்தல் வேண்டும். தமிழ் மொழியின் வரலாறு சற்று அசாதாரணமானது. ஆயிரம் கண்டங்களை தாண்டி வந்தது. தமிழர்கள் தங்கள் மொழியைப்;
படையெடுப்புத் தீயிலிருந்தும் காத்தார்கள்.
மேலும் மேலும் வந்த பண்பாட்டு வெள்ளத்திலிருந்தும் காத்தாத்கள்.
படை வலிமை கொண்டும் பாதுகாத்தார்கள்.
பக்தி மார்க்கத் துணையுடனும் பாதுகாத்தார்கள்.
பகுத்தறிவு இயக்கத்தின் வழியும் பாதுகாத்தார்கள்.
இந்தப் பின்னணியில் சுதந்தர இந்தியாவில் கொங்கனி டோகிரி 19 மாநில மொழிகளில் ஒன்றாக மட்டுமே தமிழ் பெற்றுள்ள இடம் அதன் பழைமைக்கும் உலக அளவில் ஒப்புகொள்ளப்பட்டிருக்கும் அதன் தகுதிக்கும் இந்தியப் பண்பாட்டுக்கு அது வழங்கியிருக்கும் பங்களிப்புக்கும் ஏற்ற ஒன்றாக இல்லையே என்ற நியாயமான ஆதங்கம் தமிழர்களிடம் ஆழ்மனத்தில் கனன்று கொண்டிருந்தது. தமிழின் செம்மொழித் தகுதிக்கு இந்திய அரசு அங்கீகாரம் வழங்கியதால் இக்கனலைத் தணித்திருக்கும். இந்தியத் தேசிய நீரோட்டத்தில் தமிழர் இதயபூர்வமாகப் பங்கேற்பதை வலப்படுத்தும்.

செம்மொழியான தமிழை, இந்திய அரசு உடனே அங்கீகாரம்.
தமிழ் செம்மொழி போராட்டக் குழு, August 2003 [source - Thamizh Mann]கிரேக்கம், இலத்தீன், சீனம், சமஸ்கிருதம் முதலிய உலகளவில் தொன்மையும், மேன்மையும் உடைய மொழி தமிழ்மொழி. இந்த உண்மையை தமிழகத்திலும் சரி, வெளி உலகிலும் சரி, மொழியியல் அறிஞர்கள் எந்தத் தடங்களும் இல்லாமல் ஒப்புக் கொள்கின்றனர்.

ஐரோப்பா அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழகங்கள் சமஸ்கிருத மொழியோடு தமிழையும் ஏற்று ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கின்றனர். இந்தியாவின் வரலாற்றை வடக்கிலிருந்து தொடங்குவதற்கு மாறாகத் தெற்கிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்ற பேருண்மையையும் அறிஞர்கள் இன்று ஒப்புக் கொள்கின்றனர்.

இந்திய நாகரிகத்தின் மேலாக ஆரிய நாகரிகம் என்பதாக அமர்ந்த போதிலும், அடித்தளம் திராவிட நாகரிகம் தான் என்பதையும் அறிஞர்கள் மறுக்கவில்லை. தமிழ் மொழியின் தொன்மை, மேன்மை இலக்கிய இலக்கணத் திறன் நவீன காலத்திற்கும் ஒத்த முறையில் எல்லா வகைகளிலும் தனக்குள் வளர்த்துக் கொண்ட ஆக்கத்திறன் முதலிய பல்வேறு பண்புகளையும் வைத்துப் பார்க்கும் பொழுது தமிழ் செவ்வியல்மொழி தான் என்பதை ஆயிரம் கோவில்களில் நாம் அடித்துச் சொல்ல முடியும்.ஒரு நூறாண்டுகளுக்கு மேலாகத் தமிழ் அறிஞர்கள், தமிழ் பல்கலைக் கழகங்கள், தமிழ் செவ்வியல் மொழிதான் என்பதற்குத் தேலையான ஆதாரங்களைத் தேடித் தேடி நிறுவியுள்ளனர். மைய அரசே சமஸ்கிருதம் மட்டுமல்லாமல் அரபு, பாரசீகம் ஆகிய அந்நிய மொழிகளைக் கூட செவ்வியல் மொழி என அறிவித்து தற்காலச் சூழலிலும் அவற்றை வாழ்விப்பதற்கும், வளர்ப்பதற்கும் தேவையான நிதி உதவிகள் முதலியவற்றை வழங்கிவருகிறது.

ஆனால் தமிழைப் பார்த்துத் தன்னைத் திருத்தம் செய்து கொண்ட சமஸ்கிருதமொழிக்கு நிகராக தமிழை ஒப்புக் கொள்ள மறுக்கின்றது.
தமிழக முதல்வர்கள் பல முறை மைய அரசுக்கு கோரிக்கைகள் விருத்துள்ளனர். திராவிடமொழி அறிஞர்களும் தமிழைச் செவ்வியல் மொழி என ஏற்பதை ஒப்புக் கொள்கிள்றனர். மைய அரசுக்கு இது வரை மனம் வரவில்லை. சமஸ்கிருதம் தான் இந்திய மொழிகளுக்கு எல்லாம் மூல மொழி என்றும், தெய்வ மொழி என்றும் நம்புகிற இந்துமத வாதிகள் மைய அரசில் ஆதிக்கம் பெற்றுள்ள சூழலில் தமிழின் மேன்மையை இன்றுவரை ஒப்புக் கொள்ள மறுப்பதை, மொழிச் சார்ந்த சிக்கல் என்பதைக் காட்டிலும், இந்தச் சிக்கலை அரசியல் சிக்கல், அதுவும் இந்துமதம் ஃ இந்துக்குலம் சார்ந்த அரசியல் என்றே நம்மால் கருத முடியும். தமிழையும், தமிழ் மக்களையும் ஆயிரம் ஆண்டு களுக்கு மேலாகத் தொடர்ந்து பலவகைகளிலும் ஒடுக்கி வருவது இந்திய நாகரிகம். விடுதலைக்குப் பின்னரும் இந்த ஒடுக்கு முறை குறைவில்லாமல் நடந்து வருகிறது.
அரசியல், பொருளியல், கல்வி, பண்பாடு முதலிய பல களங்களிலும் தொடர்ந்து இந்த ஒடுக்குமுறையின் இன்னொரு கூறுதான் தமிழின் மீதான ஒடுக்கு முறை.

சமத்துவமும், சமதர்மமும் தமிழர்களின் அறம். அறிவுத்தரத்தில், பண்பாட்டுச் செழமையில் தமிழர் உலகளவில் மரியாதைக்குரியவர்கள். தமிழைச் செவ்வியல் மொழி என ஏற்றுக் கொண்டால், இத்தகைய உண்மைகளையும் ஏற்க வேண்டிவரும்.

தமிழைச் செவ்வியல் மொழி என மைய அரசு உடனடியாக ஒப்புக் கொள்ளும் என்று யாரும் நம்புவதற்கு ஆதாரம் இல்லை. எனினும் தமிழகத்ததைச் சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர் அனைவரும் ஏற்கனவே பிரதமரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வற்புறுத்தினர். தமிழின் ஆக்கத்திற்கான இந்தக் கோரிக்ககையை டெல்லிவரை கொண்டு சென்ற தமிழ் அறிஞர்களை நாம் மனமாற வாழ்த்துகிறோம்.

"விண்டோஸ் விஸ்டா"


"விண்டோஸ் விஸ்டா"
மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம்
மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண் டோஸ் வரிசையில் தன் அடுத்த தொகுப்பிற்கான புதிய பெயரை விண்டோஸ் விஸ்டா' என வெளியிட்டுள் ளது. "லாங்ஹார்ன்' என்ற குறியீட்டுப் பெயருடன் புதிய இயக்கத் தொகுப்பு தயாரிக்கும் பணியினை நான்கு ஆண்டுகளுக்கு முன் மைக்ரோ சாப்ட் தொடங்கியது. பல சோதனை ஓட்டங்களுக்குப் பின் தற்போது அடுத்த ஆண்டு மத்தியில் புதிய தொகுப்பினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது.

முதலில் குறியீட்டுப் பெயராக "லாங்ஹார்ன்' என்று பெயர் கொண்ட இந்த தொகுப்பிற்கு விண்டோஸ் விஸ்டா என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்க்கு எட்டு மாதங்கள் பிடித்தது. பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர்களில் எண்கள் இருக்கும். (விண்டோஸ் 95, 97, 98, 2000) அல்லது சொற்களின் சுருக்கப் பெயர் இருக்கும். (விண்டோஸ் எக்ஸ்பியில் எக்ஸ்பி என்பது எக்ஸ்பீரியன்ஸ் என்பதின் சுருக்க மாகும். மி (எம் இ) என்பது மில்லினம் எடிசன் என்பதன் சுருக்கமாகும்.)

ஆனால் இந்த வழக்கம் தற்போது உடைக்கப்பட்டுள்ளது. உலகில் இயங்கும் பத்து கம்ப் யூட்டர்களில் ஒன்பதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இயக்கத் தொகுப்புகள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. மிகப் பெரிய அளவில் கம்ப்யூட்டருக்கான சாப்ட்வேர் தொகுப்புகளைத் தயாரிக்கும் நிறுவனமாக மைக்ரோசாப்ட் விளங்குகிறது. விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்பு தான் இதற்கு முன் மைக்ரோசாப்ட் தந்த தொகுப்பாகும்.

இத்தொகுப்பு வந்தபின் ஐந்து ஆண்டுகளுக்குப் பின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. இந்த அளவிலான கால இடைவெளி இதுவரை இயக்கத் தொகுப்பு வெளியிடுவதில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஏற்பட்ட தில்லை. விண்டோஸ் விஸ்டா தொகுப்பில் பல மாற்றங்களையும் முன்னேறிய வசதிகளையும் தர இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகில் மனிதர்களின் வாழ்க்கை இப்போது டிஜிட்டல் மயமாகி வருகிறது. இதனால் பெர்சனல் கம்ப்யூட்டரையே மக்கள் சார்ந்து இயங்கி வருகின்றனர். அவர்களுக்கு அதிக நம்பிக் கையை ஊட்டும் வண்ணம் இந்த தொகுப்பு இருக்கும்.

தினசரி வாழ்க்கை தொடர்பான தகவல்களைப் புதிய முறையில் தொகுத்து இயக்கும் பல வசதிகள் இத் தொகுப்பில் தரப்படும். மேலும் தேவைப்படும் தகவல்களுடன் கம்ப்யூட்டரை இயக்குபவரை இணைக்கும் புதிய வழிகள் இத்தொகுப்பின் மூலம் வழங்கப்படும். அத்துடன் வாழ்க்கைய பொருள் உள்ளதாக ஆக்கிடும் சாதனங் களுடன் கம்ப்யூட்டரை இணைக்கும் வழிகளையும் இது கொண்டிடும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித் துள்ளது. புதிதாய் வர இருக்கும் விண்டோஸ் விஸ்டாவின் முக்கிய இலக்குகளாக மைக்ரோசாப்ட் அறிவித் திருப்பது –– மிகச் சிறந்த பாதுகாப்பு, தகவல்களை வகைப்படுத்த புதிய வழிகள் மற்றும் அதிகமான தொடர்பு சாதனங்களை கம்ப்யூட்டருடன் இணைக்கும் வசதி.

"தெளிவானது, நம்பிக்கைக்குரியது மற்றும் இணைத்துவிட்டால் இது உங்கள் உலகத்திற்கு அதிக தெளிவைக் கொண்டு வரும்" –– என

விண்டோஸ் விஸ்டாவிற்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
இவை பற்றிய கூடுதல் தகவல்களும் முதல் சோதனைப் பதிப்பும் வரும் ஆகஸ்ட் 3 அன்று வெளியிடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதன் முதலில் 2001 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் நிறுவனம் லாங்க் ஹார்ன் குறித்து அறிவிப்பு வெளியிட்டது. அப்போது 2004 ஆம் ஆண்டில் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வெளியிட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் இலக்குகள் புதுப்பிக்கப்பட்டதால் வெளியிடப்படும் தேதியும் மீன்டும் மீண்டும் மாற்றி மாற்றி அமைக்கப்பட்டது. இதற்கென தான் புதிதாய் வடிவமைத்த விண் எப்.எஸ். பைல் (*WinFS*) சிஸ்டத்தினை முற்றிலுமாக மைக்ரோசாப்ட் கைவிட்டுவிட்டது. இண்டிகோ (*Indigo*) என்ற பெயரில் இணைய சேவை வழங்கிட தான் உருவாக்கிய கட்டமைப்பிலும், அவலான் (*Avalon*) எனப் பெயரிடப்பட்ட புதிய கிராபிக்ஸ் தொகுப்பிலும் பல மாற்றங்களை மேற்கொண்டுள்ளது. விண்டோஸ் விஸ்டா வின் வசதிகள் முற்றிலும் புதிய வசதிகள் என்றால் தேடுதல் செயல்பாட்டில் தரப்பட இருக்கும் புதிய தொழில் நுட்பத்தினையும் புதிய லேப்டாப் இயக்க தொழில் நுட்பத்தினையும் கூறலாம். "அவலான்' என அழைக்கப்பட இருக்கும் புதிய தொழில் நுட்பத்தின் அடிப்படையில் ஒளிச் சிதறலுடன் கூடிய விண்டோஸ் மற்றும் டாகு மெண்ட்டுகளுக்கேற்ற வகையில் உருவாக்கப்படும் ஐகான்களையும் கூறலாம். புதிய தேடும் வசதி: வேகமாகத் தேடும் பாளம் ("*quick search pane*,") என அழைக்கப்படும் பகுதியில் கேள்விகளை டைப் செய்து அதனுடன் தொடர்பான பைல்களின் பெயர்களைப் பெறலாம். இது மேக் கம்ப்யூட்டரின் எக்ஸ் டைகர் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள ஸ்பாட்லைட் வசதிக்கு இணையானது. தேடுதலில் கிடைக்கும் முடிவுகளை போல்டர் களாகச் சேமிக்கலாம். தேடுதல் கேள்விகள் எப்போதும் நினைவில் வைக்கப்பட்டு அது தொடர்பான தகவல் கள் கிடைக்கையில் இந்த போல்டர்கள் அப்டேட் செய்யப்படும். எடுத்துக் காட்டாக இளையராஜா என நீங்கள் ஒரு முறை தேடி போல்டரை உருவாக்கினால் அவர் குறித்த தகவல்கள் இணையத்தில் அல்லது கம்ப்யூட்டரில் பதிக்கப்படுகையில் அவை அந்த போல்டரில் சேர்க்கப்படும். ஐகான் : புதிய பொருள் இனி ஐகான்கள் பைல் வகையைக் குறிக்காது; ஒவ்வொரு பைலின் டெக்ஸ்ட்டைக் குறிக்கும். எடுத்துக் காட்டாக ஒரு வேர்ட் டாகுமெண்ட்டின் ஐகான் முதல் பக்கத்தில் உள்ளதைக் காட்டும் வகையில் இருக்கும். இந்த ஐகான் படங்கள் சிறியனவாக இருந்தாலும் அவை பைலில் உள்ள தகவல்களை எடுத்து காட்டும் காட்சிப் படமாக அமையும். லேப் டாப் கம்ப்யூட்டரில் புதுமை: விண்டோஸ் விஸ்டா லேப் டாப் கம்ப்யூட்டர் இயக்கத் திலும் மாறுதல்களைக் கொண்டு வர இருக்கிறது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை இயக்காமல் கூட ஒரு லேப் டாப் கம்ப்யூட்டர் செட் அப் செய்த தகவல்களைக் காட்டும்; இசையை முழங்கும். நெட்வொர்க்கில் இணைக் கப்படுகையில் அதனுடன் இணைந்த கம்ப்யூட்டர்களின் அனைத்து பைல்களையும் ஒரு தொகுப்பாகக் காட்டும். எடுத்துக் காட்டாக ஒரு கம்ப்யூட்டரில் மட்டுமின்றி இணைந்துள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும் உள்ள மியூசிக் பைல்களையும் ஒரு தொகுப்பில் இணைத்துக் காட்டும். விஸ்டா இயக்குவதற்கு இன்றைய திறன் உள்ள மைக்ரோ பிராசசர் போதும். ஆனால் 512 எம்பி ராம் நினைவகம் தேவைப்படலாம். ஒரு மானிட் டரில் பல காட்சிகளையும் ஒரே காட்சியை பல மானிட்டர்களிலும் காட்டக்கூடிய திறனை விஸ்டா கொண்டி ருக்கும். லேப் டாப் கம்ப்யூட்டரைத் திறக்காமலேயே வெளியே காலண்டர் தகவல், பேட்டரி நிலை மற்றும் நெட்வொர்க் நிலை ஆகியவற்றைக் காட்டும் திறன் கொண்டதாக விஸ்டா லேப்டாப் கம்ப்யூட்டரில் இயங்கும். மொத்தத்தில் லேப்டாப் கம்ப்யூட்டர் இன்னும் அதிகத்திறன் கொண்டதாகவும் எளிதாகப் பயன் படுத்தக் கூடிய ஒரு நுகர்வோர் சாதனமாகவும் விஸ்டாவால் மாற்றப்படும். விண்டோஸ் விஸ்டாவின் அடிப் படையில் சர்வர்களுக்கான ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் சோதனைத் தொகுப்பும் வரும் ஆகஸ்ட் 3 அன்று அறிமுகப்படுத்தப் படும். இதன் முழுமையான தொகுப்பு 2007 ஆம் ஆண்டு வெளியிடப்படும். ஆனால் இதில் விஸ்டாவின் பெயர் இருக்காது. வெளியிடப்படும் ஆண்டின் எண்ணையே தற்போது விண்டோஸ் சர்வர் தொகுப்புகள் கொண்டுள்ளன. எனவே 2007ல் வெளியிடப்பட்டால் அந்த தொகுப்பு விண்டோஸ் சர்வர் 2007 என்றே அழைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1.(அ) விஸ்டா என்பது எதைக் குறிக்கிறது? "விஸ்டா" என்றால் ஆங்கிலத்தில் பரந்து விரிந்த காட்சி என்று பொருள். அல்லது தூரத் தோற்றம் என்றும் எடுத்துக் கொள்ளலாம். எதிர்காலத்தில் கணிப்பொறியின் பயன்பாடுகளைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டதால் இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு இந்த பெயர் பொருத்தம் தான் எனப் பலரும் எண்ணுகின்றனர். விஸ்டா – ஒரு வேடிக்கைப் பெயர் தான் வழக்கம்போல மைக்ரோசாப்ட் நிறுவனத்தை இந்த பெயர் வைத்து கேலி செய்வோரும் உண்டு.

"*VISTA*" என்பது மைக்ரோசாப்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் வழக்கமான தடங்கல் களான *viruses, Infections, Spyware, Trojans and Adware *ஆகியவற்றின் சுருக்கப் பெயர் என்றும் பலர் இதனைக் கேலி செய்கின்றனர்.

1.(ஆ) விண்டோஸ் தொகுப்பின் வரலாறு விண்டோஸ் – 1983
விண்டோஸ் 1 – 1985
விண்டோஸ் – 2- 1987
விண்டோஸ் 3 – 22 மே 1990
விண்டோஸ் (மல்டி மீடியாவுடன்) – அக்டோபர் 1991
விண்டோஸ் 3.1 – ஏப்ரல் 1992
( வெளியான இரண்டு மாதங்களில் உலகம் முழுவதும் பத்து லட்சம் ஒரிஜினல் தொகுப்புகளுக்கு மேலாக விற்பனையாகி சரித்திரம் படைத்தது)
விண்டோஸ் ஒர்க் குரூப்ஸ் 3.1 – அக்டோபர் 1992
விண்டோஸ் என்.டி. 3.1 – ஆகஸ்ட் 1993
இந்த தொகுப்புடன் லைசென்ஸ் பெற்று விண்டோஸ் பயன்படுத் தியவர்களின் எண்ணிக்கை 2.5கோடியைத் தாண்டியது.
விண்டோஸ் ஒர்க் குரூப்ஸ் 3.11 – பிப்ரவரி 1994
விண்டோஸ் என்.டி. 3.51 – ஜூன் 1995
விண்டோஸ் 95 – ஆகஸ்ட் 1995.
மிகப் பெரிய அளவிலான விளம்பரத் துடனும் ஆரவாரத்துடனும் வெளியிடப்பட்டு வெளியாகி நான்கு நாட்களில் பத்து லட்சம் தொகுப்புகள் விற்பனை செய்யப்பட்டு சாதனை படைக்கப்பட்டது.
விண்டோஸ் என்.டி. 4 – ஆகஸ்ட் 1996
விண்டோஸ் சி.இ. – நவம்பர் 1996
விண்டோஸ் சி.இ. 2 – நவம்பர் 1997
விண்டோஸ் 98 – ஜூன் 1998
விண்டோஸ் சி.இ. 2.1 – ஜூலை 1998
விண்டோஸ் 98 எஸ்.இ. – மே 1999
விண்டோஸ் சி.இ. 3 – 1999
விண்டோஸ் 2000 – பிப்ரவரி 2000
விண்டோஸ் மில்லினம் – ஜூன் 2000
விண்டோஸ் எக்ஸ்பி – அக்டோபர் 2001
விண்டோஸ் சர்வர் 2003 – 2003
விண்டோஸ் விஸ்டா – ஜூன் 2006 ( வர உள்ளது)
--------------------------------------------------------------------------------

விஸ்டா – புதிய விஷயங்கள் விஸ்டா தொகுப்பின் புதிய விஷயங்கள் ஒவ்வொன்றாக வெளி வந்து கொண்டிருக் கின்றன. விண்டோஸ் விஸ்டா இரு தொகுப்பாக வெளி வர இருக்கிறது. 32 பிட் மற்றும் 64 பிட் என இரு வகை தரப்படும். 64 பிட் வேகத்தில் செயல்படும் பிராசசர்கள் கொண்டகம்ப்யூட்டர்கள் 64 பிட் இயக்க விஸ்டா தொகுப்பைப் பயன்படுத்தலாம். விண்டோஸ் தொகுப்பு பூட் ஆகி கம்ப்யூட்டர் நம் வசத்திற்கு வருவதற்கு நம் பொறுமையைச் சோதிக்கும் அளவிற்கு இப்போது நேரம் எடுத்துக் கொள்கிறது. இந்த நேரம் விஸ்டாவில் குறைக்கப்படுகிறது. விஸ்டாவை நம்பிக்கைத் தூண் என மைக்ரோசாப்ட் அழைக்கிறது. நம்பிக்கையும் பாதுகாப்பும் நிலைத்த தன்மையும் கொண்டு விஸ்டா இயங்கும் என்று உறுதியாக மைக்ரோ சாப்ட் கூறுகிறது.

உங்களிடம் முப்பரிமாணத்தைக் காட்டும் திறன் கொண்ட மானிட்டர் அல்லது சாப்ட்வேர் இருக்கிறதா? விஸ்டா உங்களுக்கு ஜொலிக்கும் படங்களைக் காட்ட இருக்கிறது. விண்டோஸ் விஸ்டா ஜனவரி 2007 வரை தள்ளிப் போகும் எப்படியும் வரும் ஆகஸ்ட் மாதம் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப் பட்ட விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் அடுத்த தொகுப்பான விண்டோஸ் விஸ்டா அடுத்த ஜனவரி வரை தள்ளிப் போகும் எனத் தெரிகிறது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு ஏற்ற வகையில் மற்ற பயன் பாட்டு சாப்ட்வேர் தொகுப்புகளும் புதிய முறையில் எழுதப்பட வேண்டும் என்பதால் இந்த கால தாமதம் ஏற்படுகிறது என மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

இருப்பினும் ஒரு சில நிறுவனங்கள் மட்டும் விண்டோஸ் விஸ்டாவைக் கொண்டு தங்கள் பெர்சனல் கம்ப்யூட் டர்களை வெளியிடும் வாய்ப்புகள் உள்ளதாகவும் மைக்ரோசாப்ட் கூறுகிறது. ஆனால் தாமதத்திற்கு இன்னொரு முக்கிய காரணமும் கூறப்படுகிறது. இந்த ஆப்பரேட்டிங் சிஸ்டமாவது எந்த விதமான செக்யூ ரிட்டி பிரச்னையும் இன்றி இருக்க வேண்டும் என மைக்ரோசாப்ட் திட்டமிடுவதாகவும் அதனை நன்றாக உறுதி செய்வதற்கு சில வாரங்கள் தேவைப்படுவதாகவும் மைக்ரோசாப்ட் நிர்வாகி தெரிவித்துள்ளார். இதற்கிடையே விஸ்டா சோதனைத் தொகுப்பு இன்னும் விஸ்தாரமாக அமைக்கப்பட்டு 20 லட்சம் பேருக்கு வழங்கப்படும். இது குறைகளை நிவர்த்தி செய்வதற்கான வாய்ப்புகளை வழங்கும். இந்த ஆண்டின் இரண்டாவது பகுதியில் விஸ்டா மற்றும் ஆபீஸ் 2007 ஆகிய இரண்டினையும் பெரிய அளவில் வெளியிட மைக்ரோசாப்ட் திட்டமிட்டிருந்தது.

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் தாமதம் இந்த திட்டத்தினைப் பாதிக்குமா என்று இனி தெரிய வரும்.

நன்றி: கம்ப்யூட்டர் மலர் மற்றும் எழில்நிலா.காம்

நன்றி : சிவா தமிழ்சத்திரம்

--~--~---------~முத்தமிழ் குழுமம்


"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு."
-- பாவேந்தர். -~--

சிவன் வணக்கம்

சிவன் வணக்கம் சிவலிங்க வணக்கமாக மாறுதல்:

பழங்காலத்தில் மக்கள் சிவன் என்னும் ஞாயிற்றுக் கடவுளை மலைமுகடுகளில் கண்டு வணங்கினார்கள். ஆகவே மலை முகடுகள் கடவுளின் உறைவிடம் என்று கருதினர். மலை இலாத நாடுகளில் மலைபோன்ற முக்கோண செய்குன்றுகளை எழுப்பி அவை மீது ஞாயிற்றைப் போன்ற வட்ட வடிவான வடிவத்தை வைத்து வழிபட்டார்கள். எகிப்தியரின் “கூர்நுதி”ச் சமாதிகள் ஞாயிற்றுக் கடவுளின் கோயில்களே யாகும். எல்லா இடங்களிலும் செய்குன்றுகளளை எழுப்புதல் எளிதன்று. ஆதலின், செய்குன்று வடிவான முக்கோணக் கற்கள் ஞாயிற்றின் குறிகளாக வைத்து வழிபடப்பட்டன. இலிங்கம் என்பதற்கு அடை யாளம் என்பது பொருள். (sanchi and its Remain – p.50 General F.C.Maisey) முக்கோண வடிவான கற்கள் பின்பு அடி அகன்று நுனி ஒடுங்கிய கற்களாக மாறின. ஒபிலிஸ்க் (Obelisk) எனப்படும் சதுரவடிவான தூண்களும் ஞாயிற்றின் வடிவங்களாகும்.

விவிலிய மறையில் பீதெல் என்று சொல்லபடுவன மரங்களின் கீழ் நிறுத்தப்பட்ட சிவலிங்கங்களேயாகும்.

கைலை, என்பது பழங்காலத்தில் சிவன், கோயில் கொண்டிருந்த மலைகளைப் பொதுவில் குறிக்க வழங்கிய பெயர் எனத்தெரிகிறது. இலங்கையிலுள்ள திருக்கோணமலையே எல் தொடர்பான பெயரைப் பெற்றிருப்பதற்குக் காரணம் அது, தென் கைலை என வழங்கப்படுகிறது.

கைலை மலை, திருக்கோணமலை முதலிய மலைகளைப் பார்க்கும் போது சிவலிங்கள் வடிவம் போன்று தோற்றம் அமைந்திருப்பதனாலேயே அவை சிவனின் இருப்பிடங்கள் எனக் கருதப்பட்டிருக்கின்றன. வடக்கேயுள்ள சிவன் மலை வட கைலை என்றும், தெற்கேயுள்ள அவ்வகை மலை தென் கைலை என்றும் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆதியில்,

இவ்விடங்களின் பெயர்கள் ‘எல் + ஐ + அம் = எல்ஐஅம் என்று இருத்தல் கூடும். பின்பு பிரித்தறியும் பொருட்டு வடகை ( வடக்குப் பக்கத்திலுள்ள) இடகை (இடப் பக்கத்திலுள்ள) என்னும் சொற்கள் சேர்ந்து வழங்கப்பட்டனவாகலாம். அப்பொழுது வடகை எல்லை அம், தென்கை எல்லை அம் என்று ஆகிய பெயர்கள் வடகைலாயம், தென்கைலாயம் என்று வழங்கலாயின என்று கருதலாம்.

இலிங்க வணக்கம் இந்தியாவில் மட்டும் காணப்படுவதன்று. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் அகிப்திலும் காணப்படுகிறது. உரோமர் சிவலிங்கங்களைப் பிரியாபஸ் எனப் பெயரிட்டு வணங்கினார்கள். கிரேக்கர்களின் இலிங்கக் கடவுள் இதுவே. உரோமரும், கிரேக்கரும், எகிப்தியரும் சிவலிங்கங்களை நாட்டிக் கோயில்கள் அமைத்தார்கள். பிரியாபஸ் என்பது இந்தியாவில் காணப்படும் சிவலிங்கங்கள் போன்றது. இஸ்ரவேலர் சிவலிங்கங்களை வழிபட்டார்கள். விவிலிய மறை (I King XV) அசா (Asa) என்பவன் தன் தாயைச் சிவலிங்கத்துக்குப் பலி செலுத்தாதபடி தடுத்து அதனை அடைத்தெரிந்தானென்று கூறுகிறது. (A Dictionary of Religious Ceremonies of the Eastern Nation)


சிவம்பொருள் விளக்கம்:

‘சிவம் என்ற சொல் தமிழ்ச் சொல் என்று டாக்டர் கிரையர்சன் கூறுகின்றார் “The term’ Siva is Tamil in its origin; the conception of Rudra-Siva has a tinge of Dravidian influence on the Aryans not only philosophically but on their whole mode of thought” வேத இந்தியா (Vedic India) என்னும் நூலில் ரகோசின் என்பவர் சிவ வழிபாடு ஆரியர் வந்தபோது இந்த நாட்டில் வாழ்ந்த ஆதிமக்களில் ஒரு வகையாளர் வழிபாடென்று குறிப்பிட்டுள்ளார். சிவ என்ற சொல்லிலுள்ள சகர ஓசை ஆதியில் ஆரிய மொழியிற் கிடையாத கபால ஒலி (Cerebral) எனப்படும். அத்தகைய ஒலிகள் திராவிடச் சார்பால் ஆரிய மொழியில் புகுந்தன என்று ஆசிரியர் ராப்சன் கூறுகின்றார். சிவ என்ற சொல் செம்மை என்பதன் அடிப்படையாகப் பிறந்தது. அது சிவப்பு என்றும் நன்மை, மங்களம் என்றும் பொருள்படும். தமிழ் மக்கள் வேட்டுவ வாழ்க்கை நிலையிலிருந்த போது சிவனை வழிபட்டமையால் தமக்குள் அரிய செயலாய் மதிக்கப்பட்ட புலிக் கொலையையும் பாம்பு வசியத்தையும் அப்பெருமானுக்கு ஏற்றி வணங்கினர் போலும். புலித் தோலாடையும் பாம்பு நகையும் சிவபெருமானுக்கு உரியன வாயின1 என கா. சு. பிள்ளை விளக்குவதினின்று சிவம், ஆதிதிராவிட பழங்குடியினரின் வழிபாட்டில் இருந்தாகவும் அது மொழி வழியாகவும் பண்பாட்டின் வழியாகவும் தமிழர்க்கு உரியதென விளங்குகிறது.

சதாசிவம்:

ஆனந்த மார்க்கத்தின் தலைவரான ஆனந்த மூர்த்தி ஆய்வுக் கட்டுரையின் மூலம் மனிதனாகத் தோன்றி, மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து உயிரினங்களின் நல வாழ்விற்காகவும் அருந்தொண்டாற்றியவர் ‘சதாசிவம்’ என்றழைக்கப் பெற்றவர் என அறிகின்றோம்.2

வழிபாட்டில் சிவன்:

இராமன் சீதையை இராவணனிடமிருந்து மீட்டு வரும் போது சிவனை வழிபட்ட இடத்தைக் காட்டியதாக இராமயணம் மூலம் அறிகிறோம். கிருஷ்ணன் மகாபாரதப் போரின் போது 12ஆம் நாள் இரவு அருச்சுனனிடம் சிவனை நோக்கி வேள்விச் செய்யச் சொன்னான் என்பதாலும், இராமனுக்கும் கிருஷ்ணனுக்கும் காலத்தால் முற்பட்டவன் சிவன்3 என்னுங்கருத்தால் காலத்தைத் தெளிவாக வரையறை செய்ய முடியாத பழமை மரபிற்குரிய பெயரே ‘சிவன்’ எனத் தெரிகிறது.

பழமைச் சிறப்புடைய சிவன், காலத்தால் பழைய சங்க இலக்கியங்களிலும் குறிக்கப் பெறவில்லை என்பது வியப்பிற்குரியது. ஆனால், குறிப்பாக உணர்த்தும் மரபினைப் பரவலாகக் காணமுடிகிறது.

இலக்கியங்களில் சிவன்,

முக்கண் செல்வன்4
கரை மிடற்றண்ணல்5
காரி உண்டிக் கடவுள்6
தாழ் சடையன்7
புரமெரித்தோன்8
கொன்றை மாலையன்9
ஆலமர் கடவுள்10

1. கா.சு. பிள்ளை, தமிழர் மதம். சென்னை. பக். 6869
2. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். திருநெல்வேலி. 1999. பக். 65
Sadasiva who was born into this world about 7000 years ago and who by his holy birth consecreated as it were, each and every dust particle of this earth and utilized this whole life for the sole purpose of advancing the course of universal welfare Remember I have not said ‘human welfare’ because in our world not only are there humans, there are also birds and animals, trees and plants. Siva belongs to all and for all living beings. He gave His all, Hence the people called him Sadasiva- Sadasiva means ‘always’ and siva- as a I have said earlier means ‘welfare’ so Sada Siva means one whose only vow of existance is to promote the all round welfare of all living beings. (Sri Sri, Namah Shivaya Shamtaya, Ananda marga prachara sangam, Calcutta. 1985, p.5)
3. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 6869
4. புறம். 6, 55, அகம்181, முருகு153, கலி2:104
5. புறம் 1, 6, 55
6. மலைபடு கடாம் 82, 83
7. புறம்1
8. புறம்55
9. புறம்1, கலித்தொகை150
10. புறம்198

மேலே குறிக்கப் பெற்ற அத்தனையும் சிவனைக் குறிப்பனவே. என்ன காரணத்தினாலேயோ ‘சிவன்’ என்னும் பெயரால் குறிக்காமல் இத்தகைய குறிப்பால் குறிக்கும் மரபினைப் புலவர் கையாண்டனர் என்பது வியப்பளிப்ப தாகும்11 என்பர்.

மேற்கண்ட அனைத்தும் சிவனின் செயல்தான் என்பதற்கான எந்தச்சான்றினையும் காட்டவில்லை. முக்கண் செல்வன், கரை மிடற்றண்ணல், காரி உண்டிக் கடவுள், தாழ் சடையன், புரமெரித்தோன், கொன்றை மாலையன், ஆலமர் கடவுள் என்பன வெல்லாம் சிவனுக்கு மட்டுமே உரியதெனக் கருதுவதில் எந்த நியாமும் இருப்பதாகத் தோன்றவில்லை.

“சேயோன் மேய மைவரை யுலகம்”12 எனத் தொல்காப்பியம் குறிப்பது சிவனையேயாதல் வேண்டும்.13 என்பதும் சரியாகத் தோன்றவில்லை.

புராணம் குறிப்பிடும் சிவனும், இலக்கண இலக்கியம் காட்டும் குறிப்புகளும் ஒருவரையே குறிப்பிடுகின்றன என்பது பொருந்தாது. புராணங் குறித்த காலமும் இலக்கண இலக்கிய காலமும் வேறு வேறானவை. நீண்ட இடைவெளியைக் கொண்டவை என்பதால் இவ்வாறு கருதத் தோன்றுகிறது.
சிவன் பண்டு தியானம் கருதி மலையைத் தேர்ந்தவன். தென்னகத்தின் பொதியமும், வடக்கில் கயிலையும் அவன் சேர்ந்த மலைகள். சிவன் புலித் தோலையும் யானைத் தோலையும் உடுத்தியவன் என்பதிலிருந்து பனிக்காக இவ்வாடைகளைத் தேர்ந்தான் என அறிகின்றோம். சாம்பலைத் தண்ணீரில் குழைத்து உடம்பெல்லாம் பூசிக் கொள்ள எப்படிப் பட்ட குளிர் பாதிப்பும் ஏற்படாது. சிவன் இப்பழக்கம் மேற் கொண்டவன். காலப்போக்கில் சாம்பல் சமயச் சின்னமாகிய திருநீறாகியது. தியானம் யோகம் கற்பம் போன்ற முறைகளைக் கையாள சாத்வீக உணவையே கொள்ளுதல் வேண்டும். சிவன் மேற் கொண்ட உணவுமுறை இதுவே. சிவனை வழிபடு வோர் சைவர் எனப்பட்டது போல, உணவில் சிவன் கண்ட முறையும் காலப் போக்கில் சைவம் ஆனது14 என்பர்.

சிவன் தியானத்திற்காக மலையைத் தேர்ந்து, பொதிகைக்கும் கயிலைக்கும் சென்றான் என்பது பொருந் தாது. சிவன், கடல் கொண்ட குமரி நாட்டில் பஃறுளி ஆற்றங் கரையில் இருந்த தென் மதுரையில் நடைபெற்ற முதற் தமிழ்ச் சங்கத்தின் தலைவன். இது கி.மு. 10490 என்று கருதுவர் என்றால் கி.மு. 10490இல் குமரிக்கண்டத்திற்கும் கயிலைக்கும் ஒருவன் சென்று வருவதென்பது வெறுங் கற்பனையே. சாலை வசதியோ வாகன வசதியோ இல்லாத அக்காலத்தில் தமிழ்ச் சங்கத்தின் தலைவனாக இருந்த புலவரும், யோக நெறியைப் பின்பற்றுபவருமான ஒருவர் இவ்வளவு தூரம் நெடும் பயணம் மேற்கொண்டிருந்தால், அவர் மேற்கொண்டிருந்த புலமையும் யோக நெறியும் மேலோங்கியிருக்காது. கயிலை என்பதும் பொதிகை என்பதும் வேறு பொருளை உணர்த்தும் குறியீடாக இருக்கலாம்.

11. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 69
12. தொல்காப்பியம், அகத்தினை. இயல். 5
13. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 69
14. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 70
15. ஆறுமுக சாமிகள், தமிழ் ஆய்வுக் களங்கள். பக். 6869

முதல் சித்தன் சிவன்:

“சிவனைப் புராண நாயகனாகக் கொள்வதைக் காட்டிலும் வரலாற்று நாயகனாகக் கொள்வது பொருந்தும்.
சித்தர் இலக்கியங்கள் மூலம் சிவனே முதல் சித்தன் என்பதற்கான சான்றுகளைக் காணலாம்.

“பொதிகையிலே எனைப் பார்க்க சிவனும் வந்தார்
பூரணனே தெய்வமென்று போற்றிச் செய்து
இதமாகக் கற்பமுறை யாவும் கேட்டேன்”16

“சுகமாக நாகமது தரித்த ஈசன்
சுந்தரிக்குச் சொல்ல என்பால்
சூட்டினான்பார்”17

“நீ கேளு புலத்தியனே கற்ப மார்க்கம்
நின்மலமாம் சதாசிவனார் எனக்குச் சொன்னார்”18

“சாரித்த நாற்பத்து முக்கோ ணத்தைச்
சதாசிவனார் வகுத்தபடி சாற்றி னேனே”19

“சருகுமுனி எனும்பேர் சிவன் தந்தார் பாரே”20

“நாரிமுனி பாகனார் அருளால் சொன்னார்”21

“சிவனார் உரைத்தமொழி பரிவாய்ச் சொன்னார்”22

“பாதிமதி அணிந்தவர்தான் சொன்னதிது”23

“சொல்லவே தேவிக்குச் சதாசிவன்தான்
சொல்லிடவே தேவியும் நந்திக்குச் சொல்ல”24

“தாரணிந்த ஈசனன்று ஆயிக்குச் சொல்ல
தாயான ஈஸ்வரியும் நந்திக்குச் சொல்ல”25

என்பன போன்ற ஒத்த கருத்துகள் சித்தர் இலக்கியங்களில் காணமுடிகிறது.மருத்துவ நூல்களில் சிவன் மரபு தமிழில் காணப்பெறும் நூல்களில் பெரும்பாலும் பரமசிவன் தேவிக்கும், தேவி நந்திக்கும், நந்தி அகத்தியர் க்கும், அகத்தியர் புலத்தியர்க்கும் புலத்தியர் ஏனைய சித்தர் களுக்கும் சரியை, கிரியை, யோகம், ஞானம், மருத்துவம் ஆகிய அனைத்தையும் கூறியதாகக் காணப்படுகிறது. (இதே கருத்து சித்த மருத்துவப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது.) ஆகவே அக்காலத்தில் சிறப்புற்று வாழ்ந்த மருத்துவப் பெரியார்களைப் போற்றுகின்ற வகையில் இவ்வாறு கூறப் பட்டதாகக் கொள்வதே சான்றோர்களுக்குச் சிறப்பெனத் தோன்றுகிறது.

சிவனின் வழிவந்த அகத்தியர் மருத்துவ மரபிரைக் குறிக்கும் முனைவர். ஆ. தசரதன், புலத்தியர்க்குப் பின், பரிபூரணம், முப்பு, சூத்திரம், வாகடம், வைத்தியம், கர்மம், கலைஞானம், தீட்டை, பூசை, இரசம், ஞானம்... .... .... என தற்போது

16. அகத்தியர் கற்ப முப்பு குறுநூல். பா. 48 17. அகத்தியன் வைத்திய வல்லாதி 600, பா.385 18. அகத்தியர் தீட்சா விதி200. பா. 50 19. அகத்தியர் பரிபூரணம்400. பா. 69 20. அகத்தியர் சௌமிய சாகரம்1200. பா. 77 21. யாகோப் வைத்திய வாத சுருக்கம்400. பா. 37 22. தேரையர்1001. பா. 653 23. யூகி வாதாங்க தீட்சை300. பா. 260 24. தன்வந்திரி வைத்திய சிந்தாமணி150. பா. 3 25. போகர் புவன கோசரம். பா. 1

வழங்கி வருகின்ற நூலின் பெயரோடு அர்/ஆர் விகுதிகளைச் சேர்த்துக் காரணப் பெயராக்கிப் பட்டிலிடு கின்றார். இது, படிக்கவும் கேட்கவும் சிறப்பாகத் தோன்றினாலும், ஆராய்ந்து பார்த்தால் அவ்வளவும் நூலின் பெயராகவும் மருந்தின் பெயராகவும் இருக்கக் காணலாம்.
இவையெல்லாம் ஆய்வாளர்களிடையே ஏற்படுகின்ற மயக்கங்கள் எனலாம்.

சிவன் சக்திகுறியீடு:

“கருவான எட்டிரண்டும் நாதம் விந்து
பேணப்பா நாதவிந்து சக்திசிவ மாச்சு
பெருகிநின்ற சத்திசிவம் தான்தான் என்று
பூணப்பா அறிவதனால் மனமே பூண்டு”26

என்பவற்றால், சத்தி என்பதும் சிவம் என்பதும் எட்டு, இரண்டு எனக்குறிப்பிடப்படுவது நாதம், விந்து ஆகிய இரண்டையேயாகும். அது வெளியிலுள்ளதல்ல. தான்தான் அது. அறிவினைக் கொண்டு மனதால் அறிய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

“தானான சூட்சமது என்ன வென்றால்
தன்மையுடன் போம்வாய்வு சிவம தாகும்
ஊனான உட்புகுதல் சத்தி யாகும்”27

மூக்கின் வழியே உள்ளே போகும் காற்று சத்தி என்றும், வெளியே போகும் காற்று சிவம் என்று அகத்தியரும், உள்ளே வெளியே உள்ள காற்று தெய்வமென்று, காகப் புசுண்டரும் குறியீடாகக் குறிப்பிடுகின்றனர். இவற்றால், சிவம் என்பதும் தெய்வம் என்பதும் குறியீடாகத் தோன்றுவது புலப்படும்.

“திரிந்து பார் தவாரங்கள் செடிபூ டெல்லாம்
சீவசந்து ஊர்வினங்கள் நடப்பினங்கள்
விரிந்துபார் பறப்பினங்கள் விலங்கி னங்கள்
வெறும் பாழென் றெண்ணாதே சிவமென்றெண்ணு”28

காற்றைச் சிவமென்ற அகத்தியரே, தாவரங்கள், செடி, பூண்டு, சீவசந்து, ஊர்வன, நடப்பன, பறப்பன, விலங்கு ஆகிய அனைத்துமே ‘சிவம்’ என்பது குறியீடல்ல. சிவப்பிரச்சாரமாகத் தோன்றுகிறது. (சிவம் என்றால் ‘அ’ ஆகிய உயிர் என்பதால் எல்லாவிடங்களிலும் அது இருக்கிறது எனுங் கருத்தில் இவ்வாறு கூறியிருக்கலாம்)

“மூன்றுக்கும் பேரேது முக்கண் ணென்பார்
மூவரென்பார் மூலமென்பார் மூர்த்தி யென்பார்
மூன்றுக்கும் பொருளறிந்தால் அவனே வாதி
முப்பாழு மிதுக்கொப்பு முடிவு மொப்பு”29

26. அகத்தியர் சௌமிய சாகரம். பா. 336
27. அகத்தியர் சௌமிய சாகரம். பா. 337
28. அகத்தியர் வைத்திய வல்லாதி600. பா. 285
29. கொங்கணர் முதற்காண்டம்1000. பா. 671

தங்கச் சுண்ணத்துள்ளே லிங்கம், பூரம், காரமிட்டு ஆட்ட செந்தூரம் ஆயிற்று. தங்கத்தாலான குருவுக்கு இம் மூன்றும் பச்சை வெட்டாகும் (கூட்டுப் பொருள்) இக் கூட்டுப் பொருளில்லா விட்டால் வேதையில்லை (வாத வித்தை) இத்தங்கக் குருவின் கிடையும் பச்சை மூன்றும் சிவனின் கண்கள் மூன்றுமாம். இறைவன் கண்கள் மூன்றுக்கும் ஒரே பெயராக முக்கண் என்பர்; அவன் செய்யும் தொழில்களை ஏதுவாகக் கொண்டு மும்மூர்த்தி என்பர் மூலக் காரணன் என்பர்; மூன்றுக்குமுள்ள பொருளறிந்தால் அவனே வாதியாம்.30 என்பவற்றிலிருந்து வாதத்திற்கு வேண்டிய மூலப் பொருள் இறைவன் என்றும், அதில் சேரும் மூன்று பொருள் இறைவனின் மூன்று கண்கள் அல்லது முக்கண் என்றும், அப்பொருள்கள் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு மும்மூர்த்தி என்றும் மூலக்காரணன் என்றும் குறியீட்டு முறையால் மறை மொழிகள் வழங்கக் காணலாம்.

சிவன் சித்தர்:

“சித்தராய்ப் போகுமென்று பேசிக் கொண்டு
சிவனவனும் யோசனையே செய்தார் பின்பு”31
மருந்துப் பொருளைச் சிவன் என்று சொன்ன கொங்கணர் வேறொரு நூலில் சிவனைச் சித்தர் என்று கூறுகின்றதைக் காண்கிறோம்.
“தானான சிவன்தன்னைப் பாலில் போட்டுத்
தனித்துமே அடுப்பேற்றி எரித்துக் கொண்டு
ஊனான துலர்த்தியே யிடித்து நைய்ய
உருசிலை வடிகொண்டு சூரணமே செய்து”32

சிவனைப் பாலில் போட்டு அடுப்பேற்றி எரித்து நைய இடித்து உலர்த்திச் சூரணஞ் செய்து என்று போகர் உரைப்பகுதிலிருந்து சிவன் இறைவனாகவோ, சித்தனாகவோ தோன்ற நியாயமில்லை. சிவன் என்பது ஒரு பொருளின் பெயர் என்பது தெளியும்.

“தானென்ற மூவருக்கும் வயது இந்தத்
தகைமையுள்ள கலியுகந்தான் கடாசி தன்னில்
நானென்ற இவர்களுமே மாண்டே போவார்
நன்மையென்ற அடுத்தோர்கள் வீணாய்ப் போவார்
வானென்ற சதாசிவனும் மகேஸ் பரன்றான்
வண்மையுள்ள யுகநூறில் மாண்டே போவார்
தேனென்ற சிவன்மனையாள் பராப ரையும்
தேகம்விட்டு மாண்டிடுவாள் கேளு கேளு
மாண்டிடுவாள் நானுமந்த யுகத்திற் தானும்
மாண்டிடுவேன் சித்தரெல்லாம் மாண்டே போயி
ஆண்ட குரு பராபரத்திற் சேர்ந்தே கொள்வார்
அப்பனே இல்வாழ்க்கை சொற்ப மாகும்”33

சுப்பிரமணியர் அகத்தியர்க்கு உரைப்பதாக வரும் ஞான உபதேசத்தில், இக் கலியுக இறுதியில் சிவன், சிவனின் மனைவி, ஆகியோர் முதலிலும் பின்னர் தானும் மாண்டு போவோம் என உரைக்கக் காண்கிறோம்.

30. கொங்கணர் முதற்காண்டம்1000. பா. 66971 31. கொங்கணர் கற்பம்100. பா. 76 32. போகர் கற்ப விதி. பா. 36 33. சுப்பிரமணியர் ஞானம்25. பா.810

இந்த உலகில் இறைவனாக இருந்தாலும் சித்தனாக இருந்தாலும் ஒரு நாளில் மரணமடைவதற்கு உரியவர்கள் என்பதனால், புராணங்கள் கூறுவது போலும் பக்திநூல்கள் கூறுவது போலும் சிவன் எந்தக் காலத்திலும் அழியாமல் இருப்பவனல்ல என்பது விளங்கும்

சிவன் என்னும் சொல் பல்வேறு பொருளில் பல நிலைகளில் பயன்படுத்தப் படுகின்ற சொல்லாக மருத்துவ நூல்களில் காணப்பகின்றன. என்றாலும், சித்தர்களில் ஒருவன் சிவன் என்னும் பெயரில் இருந்து வந்ததாகவும் அவனின் நினைவாக அவனுரைத்த மருந்து, ஞானம் ஆகியவற்றிற்கு அவனின் பெயர் விளங்க வழங்கி வருவதாகவும் கருத நேர்கிறது. சித்த மருத்துவத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு குழம்பிற்கு அகத்தியர் குழம்பு எனும் பெயர் வழங்கப் படுகிறது. அந்த மருந்து ஏனைய மருந்துகளிலிருந்து மாறுபட்ட மருந்தாகவும் எல்லா நோயையும் போக்கக் கூடிய மருந்தாகவும் உரைக்கப்படுவது நினைவிற் கொள்ளத் தக்கது.

பழந்தமிழ் நூல்களுள் மிகப் பழமைவாய்ந்தது, தொல்காப்பியம். அதன்கண் சேயோன், மாயோன், கொற்றவை என்பவையாகும். சேயோன் சிவந்த நிறமுடையவன். மாயோன் கரிய நிறமுடையவ திருமால். கொற்றவை திரிபுர சுந்தரி அல்லது முப்புறம் எரித்த அம்மை ஆகிய தெய்வங்கள் வழிபடப்பாட்டிற்குரியன எனக் குறிக்கப் பட்டுள்ளது.

குமரி நாட்டில் பஃறுளியாறு கடல்வாய்ப்படுமுன் இயற்றப்பட்டதுமான ‘காரிக்கிழாரின் புறப்பாட்டில்,
‘வடாஅது பனிபடு நெடுவரை வடக்குந்
தெனாஅ துருகெழு குமரியின் றெற்கும்’

என்று, தமிழகத்தின் எல்லையைக் குறிப்பிடுவதுடன்,

‘பணியிய ரத்தை நின் குடையே முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலஞ் செயற்கே’

என்று, சிவனுக்குத் திருக்கோயில் இருந்தது என்பதுடன், வழிபாட்டிற்குரிய தெய்வம் என்றும், நகரில் ஊர்வலமாகவும் எடுத்துவரப் பட்டது! என்றும், குறிப்பிடுகிறார்.
இச்செய்யுள் இன்றைக்கு ஏறத்தாழ 5000 ஆண்டிற்கு முற்பட்டது.

பெருங்கடுங்கோன், பாலைகலியில்,

‘முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்’

என்று, சிவன் முப்புறம் எரித்ததைக் கூறுவதையும் காண்க.

‘இமயவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்’

என்று, குறிஞ்சிக்கலியும்,

‘மணிமிடற் றண்ணற்கு மதியாரற் பிறந்தோய் நீ’

என்று, பரிபாடலும் கூறுகிறது.

‘புனையிழாய் ஈங்குநாம் புலம்புறப் பொருள்வெஃகி
முனை என்னார் காதலர் முன்னிய ஆரிடைச்
சினைவாடச் சிறக்குநின் சினம் தணிந்து ஈக எனக்
கனைகதிர்க் கனலியைக் காமுறல் இயைவதோ?’

என்று, கலித்தொகை (16: 9-12) கூறுகிறது.

புகைக்கப் பழகுகிறேன்!

புகைக்கப் பழகுகிறேன்!
~~~~~~~~~~~~~~~~~~

என்றோ ஒரு நாள்
எரியத்தான் போகின்ற
இவ்வுடம்பை வைத்துகொண்டு
என்னசெய்ய போகிறேன்?

கசந்து போகாமல்
கானல் நீராகப்
புகைந்து போகட்டும்
புகையாகிப் போகட்டும்!

சிறுகச் சிறுகவே
தீ மூட்டி எரியிட்டால்
சிதைக்குப் போகாத
சீமானாய்ப் போயிடலாம்!

திண்ணை கிடைக்காமல்
தெருவோரம் கிடக்கின்றேன்!
எவர் வந்து தீ வைப்பார்?
எவர் வந்து கொள்ளி வைப்பார்?

பாழாய்ப் போனவனைப்
பார்த்துத் துடிப்பதற்கு,
அழுது புலம்புதற்கு
அன்னை வரமாட்டாள்!

சிதையில் எரியாமல்
சீக்குப் பிடிகாமல்
சிறுகச் சிறுகவே
தீயாய்ப் போகட்டும்!

புகழ் மாலை சூடுதற்குப்
புகைக்கப் போகிறேன்!

சிதைக்குச் செலவு செய்ய
செல்லாக் காசில்லை!
செலவு மிஞ்சுமென்று
சிக்கனமாய்த் தீயிடுவேன்!

இறந்து எரிவதையும்
எவரும் காணாரே!
இருந்து எரிவதை நான்
இருந்திருந்து காண்பேனே!

எறும்பூறக் கல் மலையும்
இறந்து படுமென்ற
சொல்லும் பழுதில்லை!

என்பதுவும் உண்மையானால்,

சிறுகச் சிறுகவே
என் சிதைக்குத்
தீயூட்டப் போகிறேன்!

சொல்லாக் காசாகிச்
சீழ்பிடித்துச் சாகாமல்
சீக்காளிப் போலாகிச்
சீச்சீ என்றாரும்
சொல்லிச் சலிக்காமல்

எரியப் போகிறேன்!
பிகைப் பிடித்து
எரியப் போகிறேன்!

நானே
என்னுடலை
நன்றாய் எரியூட்டி

மரண வாசலையும்
நான்
மிதிக்காமல் எரிவேனே!

- இரவா - கபிலன்




"உடை, நகை, சிகை அலங்காரம்"








"உடல் சோதனை" 'Muscle testing'


*************************************************************************************
ஒவ்வொரு மனிதனின் உடலும் அவன் வாழ்க்கை குறித்த பல அரிய தகவல்களை சேகரித்து வைத்திருக்கிறது என்கிறார்கள் வல்லுனர்கள். இத்தகவல்களைச் சரியாகப் பயன்படுத்தி குணப்படுத்துவது எளிது என்கிறது applied kinesiology.

தசை சோதனை எனப்படும் muscle testing இத்தகவல்களைத் திரட்ட பயன்படுகிறது. இந்த சோதனை மிக எளிதானது. நமக்கு நாமே இந்த சோதனையை செய்துகொள்ளலாம் என்பது இதன் விசேஷம். ஒரு வாக்கியத்தை வாய்விட்டுச் சொல்லி அல்லது மனதில் நினைத்துக் கொண்டு குறிப்பிட்ட தசையின் பலத்தை சோதிக்கவேண்டும். நம் எண்ணம் சரி என்றால் தசைகள் பலமாகவும் தவறு என்றால் பல்வீனமாகவும் எதிர்வினை காட்டும்.

இந்த சோதனையின் மூலம் உடலுக்கு எத்தகைய சிகிச்சை தேவை என்பதையும் அலர்ஜி விளைவிக்கும் பொருட்களையும் அறிந்து தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அதே போல ஆழ்மனதிலுள்ள பிரச்சனைகளை இந்த muscle testing மூலம் கண்டறிந்து
மன அழுத்தத்தையும் குணமாக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த செயல்முறை அறிவியல் பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை எனினும் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது (மாற்று சிகிச்சை எதையுமே இன்னும் அறிவியல் ஒப்புக் கொள்ளவில்லை)

தசை சோதனை நடத்த பல வழிமுறைகள் இருந்தாலும் எளிதான ஒன்றை இங்கு பார்க்கலாம். இதனை நம்பாதவர்கள் இதனை ஒரு விளையாட்டாக செய்துபாருங்கள். நம்புகிறவர்கள் தயவு செய்து உங்கள் மருத்துவ சிகிச்சையைக் கைவிட்டுவிடாதீர்கள்.

இனி சோதனையின் செயல் முறை இங்கே:

இந்த சோதனை நம்பகரமாக அமைய உடலில் நல்ல நீரோட்டம் இருக்கவேண்டும். ஒரு கிளாஸ் நீரைக் குடித்துவிட்டு ஆரம்பிக்கலாம். உண்மையான சோதனைக்குச் செல்வதற்கு முன் சோதனை முன்னோட்டம் செய்து உடலின் நீரோட்டம் ஏதுவானதாக இருக்கிறதா என உறுதி செய்து கொள்ளுதல் அவசியம்.

சோதனை முன்னோட்டம்:

1. வடக்கே பார்த்து நில்லுங்கள். உடம்பை நன்கு ஓய்வாகவும் தளர்வாகவும் வைத்துக் கொள்ளுங்கள். கண்களை மூடிக் கொள்ளுங்கள்

2. வாய்விட்டு 'என் முடியின் நிறம் பச்சை' என்று சொல்லுங்கள். (அதாவது ஏதாவது ஒரு பொய்யான கூற்றை வாய்விட்டு சொல்லுங்கள்)

3. உடல் முன் பக்கம் நகர்ந்தால்(சாய்ந்தால்) நீங்கள் முன்பு சொன்ன வாக்கியம் சரி என்கிறது உங்கள் உடல். பின்புறம் நகர்ந்தால் தவறு என்கிறது. எந்தப்பக்கம் நகர்கிறது என்று கவனியுங்கள்.

4. உங்கள் முடியின் நிறம் பச்சை இல்லை என்பதால் உங்கள் உடலில் சோதனைக்கு ஏதுவான சூழல் இருந்தால் உடல் பின்புறம் சாய்ந்திருக்கவேண்டும். அப்படி சாய்ந்திருந்தால் அதனை மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள இதே போல மற்றொரு வாக்கியத்தைச் சொல்லி சோதித்துக் கொண்டு உண்மையான சோதனைக்கு முன்னேறுங்கள்

5. உங்கள் உடல் தவறாக எதிர்வினை காட்டியிருந்தாலோ அல்லது எந்த வித அசைவும் இல்லாதிருந்தாலோ நீங்கள் கீழ்க்கண்ட ஏதாவது ஒரு முறையில் உடலின் நீரோட்டத்தை அதிகரிக்கலாம்:

1. நீர் அருந்துதல்
2. கீழ் முதுகில் முதுகுத்தண்டின் இருபுறமும் நன்கு மசாஜ் செய்தல்
3. சிறிது உப்பைச் சுவைத்தல்
4. வாழைப்பழம் சாப்பிடுதல்

இவற்றைச் செய்துவிட்டு மீண்டும் முன்னோட்டச் சோதனையை நடத்துங்கள்

சோதனையின் பயன்பாடு:

நன்கு தெரிந்த விடைகளுக்கு உடல் சரியான எதிர்வினையை உருவாக்கி இருந்ததென்றால், உங்கள் உடல் மற்றும் வாழ்க்கை முறை குறித்த சோதனைகளை இப்போது நீங்கள் செய்து பதில்களை அறியலாம். உதாரணமாக,

1. உங்களுக்கு அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களைக் கண்டறிய '.------- என் உடலுக்கு நல்லது' என்ற வாக்கியத்தை உபயோகிக்கலாம். உடல் முன்னே நகர்ந்தால் அந்தப் பொருள் நல்லது எனவும் பின்னே நகர்ந்தால் அது ஒவ்வாது எனவும் அறியலாம். '..... என் உடலுக்கு நல்லதல்ல' போன்ற எதிர்மறை வாக்கியங்களை உபயோகித்தல் குழப்பத்தை விளைவிக்கும் என்கிறார்கள் வல்லுனர்கள். அதனால் நேர்மறை வாக்கியங்களையே உபயோகியுங்கள்

2. உங்கள் 3 வயதுக் குழந்தைக்கு தனக்கு என்ன செய்கிறதென்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை என்று வைத்துக் கொள்வோம். அதனை 'எனக்குத் தலை வலிக்கிறது' போன்ற வாசகங்கள் சொல்லச் சொல்லி சோதனை செய்யலாம்

3. ஆழ்மனதிலுள்ள எண்ணங்களை அறிய, 'நான் என்னை நேசிக்கிறேன்' போன்ற வாசகங்களை பயன்படுத்தலாம். உங்களை நீங்கள் நேசிக்கவில்லை என்று அறிந்தால் உங்களை நீங்கள் ஏற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதையும் இந்த முறையின் மூலம் அறியலாம்.

செய்து பாருங்கள். பயனளித்தால் லாபம். இல்லாவிட்டால் ஒன்றும் நஷ்டமில்லை.

ஒன்றை நினைவில் கொள்ளுங்கள் - இது உங்கள் ஆழ்மனத்தோடு உரையாடும் ஒரு முறையே. எதிர்காலம் பற்றியோ அடுத்தவர் எண்ணங்கள் பற்றியோ இந்த முறை மூலம் அறிய முற்படுதல் தவறான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

மிக முக்கியமாக, தசை சோதனை காரணமாக மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் முறையான சிகிச்சை எதையும் கைவிட்டுவிடாதீர்கள்.

*************************************************************************

அழகுக் குறிப்புகள்

வெய்யில் காலங்களில் நம் முகம் சோர்ந்தும், எண்ணெய்ப் பசையோடும் காணப்படும். அதற்காக எல்லோரும் Beauty parlour போகமுடியுமா? இதோ எல்லா வயதினருக்கும் உச்சி முதல் பாதம் வரைக்கும் ஏற்ற டிப்ஸ்.

கண்:

நம் முகத்தைப் பிரகாசமாகக் காட்டுவது நமது கண்களே. அக்கண்கள், பளிச்செனவிருக்க தினமும் இரவில் விளகெண்ணெயை கண்ணிமையின் மேலேயும், கண்ணின் கீழ்ப் பகுதி களில் உருளைக்கிழங்குச் சாரையும் தடவவேண்டும். அப்படித் தடவிவந்தால் காலையில் கண்கள் பளிச்சென இருக்கும். கருவளையங்கள் போக, துளசியும் புதினாவும் அரைத்து பன்னீர் (rosewater) சேர்த்துத் தடவவேண்டும்.

உதடு:

உதட்டில் வெண்ணெயுடன், தேங்காய் எண்ணெயைத் தடவி வந்தால் உதடு காய்ந்து போகாமல் இருக்கும்.

முகம்:

வெய்யில் காலங்களில் எண்¨ணெய்ப் பசை இல்லாமல் சருமம் பளிச்சென இருக்க இதோ சில குறிப்புகள்:

நிலை 1: முதலில் பால் ஏட்டை முகத்தில் தடவி, பஞ்சு மூலம் முகத்தில் உள்ள அழுக்கை எடுக்க வேண்டும்.

நிலை 2: பப்பாளி, ஆப்பிள் கலந்து முகத்துக்கு 10 நிமிடங்கள் மசாஜ் கொடுக்கவும்.

நிலை 3: பிறகு துளசி, புதினா இலைகளுடன் தண்ணீரைக் கொதிக்கவைத்து முகத்துக்கு ஆவி பிடிக்கவும். (ஆவி பிடித்தால் முகத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறும்.)

நிலை 4: ஒரு முட்டைக் கரு, எலுமிச்சம்பழச் சாறு, தயிர், கடலை மாவு, எல்லாவற்றையும் கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்.

நிலை 5: கடைசியாக குளிர்ந்த நீரால் முகத்தைச் சுத்தப்படுத்தவும் இப்படி வாரம் ஒரு முறை செய்து வந்தால், முகம் பொலிவுடன் காணப்படும்.

தலைமுடி:

1. பேபி ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயைப் பஞ்சில் எடுத்துத் தலையில் தேய்க்கவும்.(பொடுகுத் தொல்லை இருப்பவர்கள் இரவே வெந்தயத்தை ஊற வைத்து பிறகு காலையில் தேங்காய் எண்ணெய்யில் கலந்து உச்சந்தலையில் தேய்க்கவும்.)

2. பின் தலையை மசாஜ் செய்யவும்

3. 10 நிமிடங்கள் ஊறிய பிறகு, மருதாணி, டீ-டிக்காஷன் இரண்டையும் தயிரில் கலந்து தலை முடிக்கு pack-ஆகப் போடவும்.(மருதாணி போடுவதால் முடியின் கலர் மாறாது. மருதாணி, டீ-டிகாஷன், தயிர் சேர்ந்த கலவையை இரவே ஊற வைத்துப் போட்டால்தான் முடி கலர் மாறும்.)

4. மருதாணி ஒத்துக் கொள்ளாதவர்கள் செம்பருத்தி இலையை உபயோகப் படுத்தலாம்.
இவ்வாறு வாரம் ஒரு முறை செய்து வந்தால், தலை முடி ஆரோக்கியமாகவும், மிருது வாகவும் இருக்கும்.

பாதம்:

பாதம் சுத்தமாகவும், மிருதுவாகவும் இருக்க தினமும் வெதுவெதுப்பான நீரில் உப்பு, எலுமிச்சம் பழச்சாறு கலந்து, குளிக்குமுன் 15 நிமிடங்கள் பாதத்தை அதில் ஊற வைத்து, பிறகு குளிர்ந்த தண்ணீரீல் சுத்தப்படுத்தவும்.

உடல் ஆரோக்கியத்திற்கு சில பொதுவான யோசனைகள்:

1. தினமும் நிறைய சீரகத் தண்ணீர் அருந்துங்கள்.

2. பச்சைக் காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

3. பருத்தி ஆடையை அணியுங்கள்.

4. வெயிலில் வெளியில் செல்லும் போது sun screen லோஷன் உபயோகப்
படுத்துங்கள்.

5. மனதை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ளுங்கள்.

தேனீர் அருந்த வாருங்கள்

துளசி இலை டீ:

சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும்.

ஆவாரம்பூ டீ:

காம்பு நீக்கிய ஆவாரம்பூக்களை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சை பழச்சாறு வெல்லம் கலந்து வாரம் டீ சாப்பிடலாம். இது உடலின் வெப்பத்தை தணிக்கும்.

செம்பருத்திப்பூ டீ:

ஒற்றை செம்பருத்திப் பூக்களின் இதழ்களை மட்டும் பிரித்தெடுத்து நீரில் போட்டுக் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் கலந்து டீயாகச் சுவைக்கலாம்.

கொத்தமல்லி டீ:

கொத்தமல்லித் தழையைச் சிறிதளவு நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சுக்குத்தூள் வெல்லம் கலந்து பருகவேண்டும்.

புதினா இலை டீ:

புதினா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி எலுமிச்சைப் பழச்சாறு, வெல்லம் சேர்த்து குடிக்கலாம்.

கொய்யா இலை டீ:

கொய்ய இலைகளை நீரில் கொதிக்க வைத்து ஏலக்காய், வெல்லம் சேர்க்க வேண்டும்.

முருங்கைக் கீரை டீ:

முருங்கை இலை, எலுமிச்சை இலை இரண்டையும் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து வெல்லம் சேர்த்தால் மணமிக்க முருங்கைக் கீரை டீ ரெடி.

குறிப்பு:

டீ வாசம் வேண்டும் என்றால் சிறிது டீ துளை சேர்த்துக் கொள்ளலாம். பனைவெல்லம், நாட்டுச் சக்கரை சேர்ப்பது தான் மிக நல்லது. மேற்கண்ட இலைகள் மருத்துவக் குணம் கொண்டதால், அவற்றைத் தேனீராகப் பருகினாலும் அதன் மருத்துவக் குணம் மாறாமல் உடலுக்கு நன்மையைச் செய்யும் என்பதை உணர்ந்து , அவற்றைப் பயன் படுத்தி பயன் பெற வேண்டுகிறோம்.

சமையல் குறிப்புகள்


குழிப்பணியாரம்

செட்டிநாட்டு பலகாரங்களில் குழிப்பணியாரத்திற்கு தனி இடம் உண்டு. குழிப்பணியாரம் செய்பவர்கள் பொதுவாக இனிப்பு அல்லது காரம் இரண்டில் ஒன்றை மட்டுமே செய்வர். ஒருமுறை அரைத்த மாவிலேயே இனிப்பு, காரம் இரண்டையும் செய்தால், இரண்டு சுவைகளில் பலகாரம் கிடைப்பதுடன் வேலையும் எளிதாக இருக்கும். இரண்டு சுவையில் குழிப்பணியாரத்தை எப்படி செய்யலாம் என உங்களுக்கு படங்களுடன் விளக்குகின்றார் செட்டிநாட்டு மண்ணில் பிறந்து வளர்ந்து, தற்போது குவைத்தில் வசிக்கும் திருமதி. சித்ரா செல்லதுரை.

தேவையானப் பொருட்கள்

புழுங்கல் அரிசி - இரண்டு ஆழாக்கு
பச்சை அரிசி - இரண்டு ஆழாக்கு
உளுந்து - ஒரு ஆழாக்கு
வெந்தயம் - பத்து கிராம்
வெல்லம் - கால் கிலோ
ஏலக்காய் - ஐந்து
எண்ணை - ஐம்பது மி.லி
உப்பு - இரண்டு டீ ஸ்பூன்
வெங்காயம் - ஐந்து
ப. மிளகாய் - இரண்டு
கறிவேப்பிலை - இரண்டு கொத்து

தேவையானப் பொருட்களை தயாராய் எடுத்துக் கொள்ளவும். பணியாரம் சுடுவதற்கு சற்று முன்பு வெங்காயம், மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும்.

புழுங்கல் அரிசி, பச்சை அரிசி, உளுந்து, வெந்தயம் நான்கையும் ஐந்து மணி நேரம் ஊற வைத்து, அதிகம் தண்ணீர் விடாமல் உப்பு சேர்த்து கெட்டியாக அரைத்து, சுமார் ஆறு மணி நேரம் புளிக்க வைக்கவும். இதற்கு காலையிலேயே அரிசி ஊற வைத்து, மதியம் எடுத்து அரைத்து வைத்தால் மாலையில் புளித்த பின்பு பணியாரம் சுட சரியாக இருக்கும்.

புளித்த மாவினை இரண்டு பாகமாகப் பிரித்து, தனித்தனி பாத்திரங்களில் எடுத்துக் கொள்ளவும். அடுப்பில் கடாயை வைத்து ஒரு டீ ஸ்பூன் எண்ணை ஊற்றி கடுகு & உளுந்து தாளிக்கவும். பின்னர் நறுக்கி வைத்துள்ள வற்றைப் போட்டு சிறிது நேரம் வதக்கி இறக்கவும்.

வெல்லத்தைப் பொடித்து ஐம்பது மில்லி தண்ணீர் விட்டு இளம்பாகு காய்ச்சவும். வெல்லம் முழுவதும் கரைந்து விட்டால் இறக்கி விடவும். அதில் ஏலக்காயை பொடித்து போடவும். புளித்த மாவை இரண்டு பாத்திரத்தில் பிரித்து வைத்து ஒன்றில் வெல்லப் பாகையும்,மற்றதில் வெங்காயக் கலவையையும் போட்டு நன்றாக கலக்கவும்.

அடுப்பில் குழிப்பணியாரச் சட்டியை வைத்து குழிகளில் லேசாக எண்ணை விட்டு முதலில் இனிப்பு மாவை முக்கால் குழி வரும் வரை ஊற்றவும்.

பிறகு மூடி வைத்து ஒருபுறம் வெந்ததும் திருப்பிப் போட்டு மறுபுறத்தையும் வேகவிட்டு எடுக்கவும்.

இதே போல் அடுத்து கார மாவை ஊற்றவும். சட்டியில் சிறிது எண்ணெய் தடவி விட்டால் எடுப்பதற்கு எளிதாக இருக்கும். நான் ஸ்டிக் பணியாரச் சட்டிகள் தற்போது கடைகளில் கிடைக்கின்றன.

இப்படி மாற்றி மாற்றி ஊற்றி எடுக்கவும். மிகவும் கருக விடாமல், பதமாக வெந்ததும் எடுத்துவிடவும்.
சூடாக இருக்கும் போதே தேங்காய்ச் சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.

இந்தக் குறிப்பினை அறுசுவை நேயர்களுக்காக வழங்கி, அதன் செய்முறையையும் படங்களுடன் விளக்கி யுள்ளவர், குவைத்தில் வசிக்கும் திருமதி. சித்ரா செல்லதுரை அவர்கள். அறுசுவை நேயர்களுக்காக நூற்றுக்கும் மேலான செட்டிநாடு மற்றும் பாரம்பரிய தமிழ் உணவுகளை வழங்கியுள்ள இவர், தொடர்ந்து ஏராளமான குறிப்புகளை படங்களுடன் உங்களுக்கு தர இருக்கின்றார்.

சமையல் குறிப்புகள்

அடை


தேவையானப் பொருள்கள்

ப. அரிசி - நூறு கிராம்
பு. அரிசி - நூறு கிராம்
பாசிப் பருப்பு - நூறு கிராம்
கடலை பருப்பு- நூறு கிராம்
துவரம் பருப்பு- நூறு கிராம்
உளுந்து - நூறு கிராம்
வர மிளகாய் - ஐந்து
பூண்டு - இரண்டு பல்
சோம்பு - ஒரு டேபிள் ஸ்பூன்
பெருங்காயம் - ஒரு டீ ஸ்பூன்
தேங்காய் துருவல் - இரண்டு டேபிள் ஸ்பூன்
உப்பு – இரண்டு டீ ஸ்பூன்
சி. வெங்காயம் - இருநூறு கிராம்


செய்முறை


முதலில் அரிசி வகைகளையும், பருப்பு வகைகளையும் ஒன்றாக அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
தனியாக ஒரு கிண்ணத்தில் வரமிளகாய், சோம்பு இரண்டையும் ஊற வைக்கவும். சி. வெங்காயத்தை மிக நைசாக நறுக்கவும். அரிசி, பருப்பு கலவை நன்கு ஊறியதும் நன்றாக கழுவி உப்பு, ஊற வைத்த மிளகாய், சோம்பு, பூண்டுப் பல் சேர்த்து கிரைண்டரில் போட்டு ஐந்து நிமிடம் அரைக்கவும். வழிக்கும் நேரத்தில் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு சுற்று சுற்றியதும் வழித்து எடுக்கவும். வெங்காயத்தை மாவுடன் நன்கு கலக்கவும் தோசைக் கல்லை சூடாக்கி ஒரு கரண்டி மாவை வைத்து தோசை போல் ஆனால் சிறிது கணமாக பரப்பி விடவும். சுற்றி எண்ணை ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.

குறிப்பு:

அடை மாவில் விரும்பினால் எதாவது ஒரு கீரை வகையை பொடியாக நறுக்கிப் போடலாம். இது தேங்காய் சட்னியுடனோ வெல்லத்துடனோ சாப்பிட மிக சுவையாக இருக்கும்.


தேங்காய் சட்னி

தேவையானப் பொருட்கள்

தேங்காய் - அரை மூடி
பொட்டுக் கடலை - இரண்டு டேபிள் ஸ்பூன்
ப. மிளகாய் - மூன்று
பூண்டு பல் - ஒன்று
சி. வெங்காயம் - ஒன்று
இஞ்சி - மிக சிறிய துண்டு
உப்பு - ஒரு டீ ஸ்பூன்
எண்ணை - ஒரு டீ ஸ்பூன்
கடுகு & உளுந்து - ஒரு டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - இரண்டு கொத்து

செய்முறை

முதலில் தேங்காயை துருவி, அந்த துருவலுடன் பொட்டுக் கடலை, ப. மிளகாய், இஞ்சி, சி. வெங்காயம், பூண்டுப் பல், உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும். ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை கொட்டி அரை டம்ளர் தண்ணிர் ஊற்றி நன்கு கலக்கவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணை ஊற்றி கடுகு, உளுந்து போட்டு வெடித்ததும் கறிவேப்பிலை போட்டு சட்னியில் கொட்டி இறுக மூடி வைத்து ஐந்து நிமிடம் கழித்துத் திறந்து பரிமாறவும்.