பெண் ஆண்மொழியில் படைப்பது இல்லை

முனைவர் மு, பழனியப்பன், தமிழ் விரிவுரையாளர்,
மா, மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
*******************************
சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களுள் பதிற்றுப்பத்து ஒரு குறிப்பிடத்தகுந்த நூல்.

இதனுள் அமைந்துள்ள ஆறாம் பத்து காக்கைப் பாடினி நச்செள்ளையாரால் பாடப் பெற்றது என்பது கருதி இத்தொகை நூலுக்கு மேலும் ஒரு பெருமை உண்டு. ஒன்பது ஆண்பால் புலவர்களின் வரிசையில் ஒரு பெண்பால் புலவர் இடம்பெற்றுள்ளார். இவர் பாடிய பத்துப்பாடல்களால் மகிழ்ந்த சேரன் இவரைத் தன் அவையில் அவைக்களப் புலவராக அமைத்துக் கொண்டான்.

மேலும் ஒன்பது கால் பொன்னும் பரிசாகத் தந்துள்ளான் என்ற குறிப்புகள் வழியாகப் பெண்பால் புலவர் ஒருவர் ஆண்பால் புலவர்களுக்கு ஈடான நிலையில் சங்க காலத்தில் அறிவாலும், ஆற்றலாலும், ஆளுமையாலும் சிறந்து விளங்கினார் என்பதற்குச் சரியான சான்று இவர் ஆவார்.

அறிவாலும், ஆற்றலாலும், ஆளுமையாலும் சிறந்தவள் பெண் என்பது ஆண்களுக்கு ஈடான நிலை தரும் என்றாலும்¢ அவள் தன் படைப்பு மொழியை, முயற்சியை ஆண்களுக்குச் சமமாக அல்லது ஆண்களை அடியொற்றிச் செய்து கொள்ளவில்லை என்பது பெண்ணின் படைப்பினை ஆராயும் பொழுது தெரியவருகிறது.

அவள் ஆணால் உருவாக்கப் பெற்ற மொழியை அதன் அமைப்பைத் தனக்கு ஏற்ற வகையில் தன் நடையில் மாற்றி அமைத்துக் கொண்டு படைக்கத் தொடங்கினாள்.

மொழி என்னும் கட்டமைப்பிற்குள் தனக்குச் சாதகமான ஓர் இடத்தை அவள் பெற்றுக் கொண்டு அவள் செயல்பட்டாள். இதன்மூலம் அவள் தன்னையும் தனித்து வெளிப்படுத்திக் கொள்ள முடிந்தது. தன்ஒத்த பாலினரின் இயல்பையும் அவளால் படைக்க முடிந்தது. இந்த வேறுபாடு கருதி தன் பாலினருடன் அவள் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணிக் கொள்ள முடிந்திருக்கிறது. இதன் காரணமாக அவளின் படைப்பு மொழியில் பல நுன்மையான வேறுபாடுகள் எழுந்தன.

மேற்சொன்ன ஆறாம் பத்து இதற்குச் சிறந்த காட்டு. இதில் உள்ள பத்துப் பாடல்களிலும் காக்கைப் பாடினி நச்செள்ளை என்ற பெண் தன்கருத்தை தனக்குச் சாதகமான ஆண் வயப்படாத பெண் மொழியில் எடுத்துரைத்துள்ளார். அவரின் மொழி பயன்பாடு மற்ற ஏழு அல்லது கிடைக்காத பத்துக்கள் இரண்டையும் சேர்த்து ஒன்பது பத்துக்கள் பாடிய ஆண்பால் புலவர்களின் படைப்பு அமைதியில் இருந்து வேறுபட்டு அமைகிறது.

ஆயிரத்து ஐநூற்று எண்பத்து இரண்டாம் ஆண்டிலேயே பெண் மொழி ஆளுமை ஆணின் மொழியாளுமையில் இருந்து வேறுபட்டது என்பது உலக அளவில் கண்டறியப் பட்ட போதிலும் அதனை மெய்ப்பிக்கும் சான்றுகளுக்கான முயற்சி தொடங்கப் படவில்லை.

ஆனால் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதாம் ஆண்டில் ராபின் லாக்ஆப், அன்னி பாடைன், ரூத் பெர்ன்டு, நான்சி கான்கிளின் (Robin Lakoff, Anne Bodine, Ruth Brend, and Nancy Conklin) என்போர் இ¢ம்முயற்சியில் தீவிரமாக இறங்கினர். அவர்கள் பெண்கள் பயன்படுத்திய அமெரிக்க ஆங்கில பெண் மொழியில் உள்ள தனித்தன்மைகளை எடுத்துக் காட்டினர்.

அது மெல்ல வளர்ந்து உலக மொழிகளில் உள்ள பெண்தன்மைக் கூறுகளின் பொதுமையை ஆராயத் தொடங்கியது. ''மொழியில் பால் வேறுபாடு என்பது உலகுதழுவிய ஒன்று'' என்ற கொள்கை ("Sex differentiation in language is universal . . .") இதன்வழி உருவானது. இதன் வளர்ச்சி நிலை பெண் மொழி என்பதற்கான வரையறையைத் தந்தது. மொழியில் பாலினக்கூறுகளை உள்ளடக்கிய ஒன்றாக இதன்பின் பெண் மொழி உணர்ப்பட்டது(''If, then, one uses the term loosely to cover those gender-preferred features, there is a "women's language.") இவ்வடிப்படையில் உணரத் தொடங்கப் பட்ட பெண்மொழி உலகின் அனைத்து மொழிகளிலும் உணரப்பட ஆய்வுகள் தொடங்கின.

அவ்வகையில் பெண்மொழி என்பது தமிழுலகிலும் உணரப் பட வேண்டிய ஒன்றே.பதிற்றுப் பத்து இவ்வகையில் ஆராயப் படத் தக்க ஒன்று. ஏனெனில் இத்தொகுப்பில் ஆண் படைப்பும் அமைந்துள்ளது. பெண்படைப்பும் அமைந்துள்ளது. இவையிரண்டிற்கும் ஒரே பின்புலம்.

ஒரே கொள்கை. ஒரே எல்லை என்ற பல ஒற்றுமைக் கூறுகள் கிடைத்திருப்பது ஆண்மொழியையும் பெண் மொழியையும் உற்று நோக்கி ஆராய உதவுகிறது.

காக்கைப் பாடினியின் பெண்மொழிக் கூற்றிற்கு முதலில் சான்று காண்போம்.''இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்தவளங்கெழு குடைச் சூலடங்கிய கொள்கைஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசைஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும்\ இரவலர் புண்கண் அஞ்சும்'' (காக்கைப் பாடினி 2ம் பத்து ஏழாம் பாடல் வரிகள் 10-15)இப்பாடலடிகளில் கவனிக்கத் தக்கவை இருகூறுகள்.

1. மகளிர் 2. வளங்கெழு குடைச்சூல்மகளிர் இளமையும் துணையாகும் தன்மையும் உடைய புதல்வரைப் பெற்று நல்வளம் பயந்தவர்கள். ஆன்ற அறிவினர். நல்ல புகழினர். ஒள்ளிய நெற்றியை உடையோர். புலவியின் காரணமாக கண்கள் கோபத்தை வெளிப்படுத்தும். இக்கருத்துகளில் புதல்வர் யாருக்கு நல்வளம் பயக்க இருக்கிறார்கள்? என்ற கருத்து சிந்திக்கத் தக்கது. ''கணவன் உவப்பப் புதல்வர் பயந்து'' (மதுரைக் காஞ்சி 600) என்பது மாங்குடி மருதனாரின் கூற்று.

கணவன் மகிழ்வு கொள்வதற்காக மகனைப் பெற்றாள் என்பது ஆணின் கூற்று. தனக்குத் துணையாகும் தன்மை உடைய மகனைப் பெற்றவள் என்பது பெண்மொழி. ஆண்மொழிக்கும் பெண் மொழிக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு இதுதான். பெண் தன் சொற்களுக்குள் அன்பை வைக்கிறாள். ஆண் தன் சொற்களுக்குள் காமத்தை வைக்கிறான். கணவனின் உவப்ப எதற்காக-? என்ற சிந்தனையை மேம்படுத்திப் பார்த்தால் இதன் உண்மை புரியும்.


அது மெல்ல வளர்ந்து உலக மொழிகளில் உள்ள பெண்தன்மைக் கூறுகளின் பொதுமையை ஆராயத் தொடங்கியது. ''மொழியில் பால் வேறுபாடு என்பது உலகுதழுவிய ஒன்று'' என்ற கொள்கை ("Sex differentiation in language is universal . . .") இதன்வழி உருவானது. இதன் வளர்ச்சி நிலை பெண் மொழி என்பதற்கான வரையறையைத் தந்தது.

மொழியில் பாலினக்கூறுகளை உள்ளடக்கிய ஒன்றாக இதன்பின் பெண் மொழி உணர்ப்பட்டது(''If, then, one uses the term loosely to cover those gender-preferred features, there is a "women's language.") இவ்வடிப்படையில் உணரத் தொடங்கப் பட்ட பெண்மொழி உலகின் அனைத்து மொழிகளிலும் உணரப்பட ஆய்வுகள் தொடங்கின. அவ்வகையில் பெண்மொழி என்பது தமிழுலகிலும் உணரப் பட வேண்டிய ஒன்றே.பதிற்றுப் பத்து இவ்வகையில் ஆராயப் படத் தக்க ஒன்று.

ஏனெனில் இத்தொகுப்பில் ஆண் படைப்பும் அமைந்துள்ளது. பெண்படைப்பும் அமைந்துள்ளது. இவையிரண்டிற்கும் ஒரே பின்புலம். ஒரே கொள்கை. ஒரே எல்லை என்ற பல ஒற்றுமைக் கூறுகள் கிடைத்திருப்பது ஆண்மொழியையும் பெண் மொழியையும் உற்று நோக்கி ஆராய உதவுகிறது.

காக்கைப் பாடினியின் பெண்மொழிக் கூற்றிற்கு முதலில் சான்று காண்போம்.

''இளந்துணைப் புதல்வர் நல்வளம் பயந்தவளங்கெழு குடைச் சூலடங்கிய கொள்கைஆன்ற அறிவின் தோன்றிய நல்லிசைஒண்ணுதல் மகளிர் துனித்த கண்ணினும்இரவலர் புண்கண் அஞ்சும்'' (காக்கைப் பாடினி 2ம் பத்து ஏழாம் பாடல் வரிகள் 10-15)இப்பாடலடிகளில் கவனிக்கத் தக்கவை

இருகூறுகள்.

1. மகளிர் 2. வளங்கெழு குடைச்சூல்மகளிர் இளமையும் துணையாகும் தன்மையும் உடைய புதல்வரைப் பெற்று நல்வளம் பயந்தவர்கள். ஆன்ற அறிவினர். நல்ல புகழினர். ஒள்ளிய நெற்றியை உடையோர். புலவியின் காரணமாக கண்கள் கோபத்தை வெளிப்படுத்தும். இக்கருத்துகளில் புதல்வர் யாருக்கு நல்வளம் பயக்க இருக்கிறார்கள்? என்ற கருத்து சிந்திக்கத் தக்கது.

''கணவன் உவப்பப் புதல்வர் பயந்து'' (மதுரைக் காஞ்சி 600) என்பது மாங்குடி மருதனாரின் கூற்று. கணவன் மகிழ்வு கொள்வதற்காக மகனைப் பெற்றாள் என்பது ஆணின் கூற்று. தனக்குத் துணையாகும் தன்மை உடைய மகனைப் பெற்றவள் என்பது பெண்மொழி. ஆண்மொழிக்கும் பெண் மொழிக்கும் உள்ள மிக முக்கியமான வேறுபாடு இதுதான். பெண் தன் சொற்களுக்குள் அன்பை வைக்கிறாள். ஆண் தன் சொற்களுக்குள் காமத்தை வைக்கிறான். கணவனின் உவப்ப எதற்காக-? என்ற சிந்தனையை மேம்படுத்திப் பார்த்தால் இதன் உண்மை புரியும்.

வளங்கெழு குடைச் சூல் இதற்கு உரையாசிரியர்கள் தருகிற விளக்கம் ''வளமை பொருந்திய சிலம்பையும், அடக்ககத்தால் உயர்ந்த ஒழுக்கத்தையும் உடைய'' ( ஒளவை துரைசாமிப்பிள்ளை உரை) என்பதாகும். வளங்கெழு கடைச் சூல் என்ற தொடரை ஏன் சிலம்பிற்குக் காட்டவேண்டும். உள்புறம் துளை வருமாறு கடையப் பட்ட சிலம்பை அணிந்த பெண் என்ற இந்த இந்த உரைக்குறிப்பு சிலம்பு கழி நோன்பை எல்லாம் கேள்விக்கு உள்ளாக்கி விடும்.

இதற்கு நேர் பொருளை உரையாசிரியர் தந்திருக்கலாம்.

அதாவது வளமை மிகுந்த உள்புறம் குடைவு பெற்ற கருப்பையை உடைய- அதன்வழியாக வளமை மிக்க மகனைப் பெற்றுத் தந்த மகளிர் என்ற பொருளில் பெண் படைத்துள்ளாள். இதனை உரையிட்ட ஆண்உலகம் செய்த மாற்றம் சிலம்பு என்பது.

பெண்ணின் வளமை கருப்பை கொண்டிருப்பது. அதனுள் மகவைத் தாங்குவது. அந்த மகவனுபவத்தை அவள் அவள் சொற்களில்தான் கூறமுடியும் என்பதற்க மேற்காண் வரிகள் சான்று.இவளின் துனித்த கண் என்பது இதே பத்தின் இரண்டாம் பாடலில் ஆடல் மகளிர்பால் ஈடுபட்ட ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை அவனின் மனைவி ஊடல் கொண்டமையால் கூறப்பட்டதாகும். அந்த கண்களை விட இரவலர் நோயுடைய கண்ணிற்கு இவன் அஞ்சுவான். பெண் தனக்குரிய இடத்தை முன் கண்ணில் பெற்றாள். எனவே பின்கண் இயல்பாய் எவ்விதப் புனைவும் தேவையாகாமல் வந்தது.

இவ்வாறு வரிக்கு வரி பெண் பெண்மொழியில் பேசிக் கொண்டே இருக்கிறாள். அதை அக்கண் நோக்கினால் அன்றி கிட்டாது.ஆண் சொல்லிற்கும் பெண் சொல்லிற்கும் உள்ள ஒரு சிறு வேறுபாட்டை இப்பகுதி கொண்டே விளக்கலாம்.விறலியை அழைக்க வேண்டும். அவளைப் பரிசு பெற ஆற்றுப் படுத்த வேண்டும். அவ்வகையில் காக்கைப் பாடினி '' ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் '' என்றழைக்கிறார்( 6ம் பத்து, எட்டாம் பாடல், அடி 1)

குமட்டூர் கண்ணனார் அழைக்கும் வகை பின்வருமாறு ''உண்மின் கள்ளே, அடுமின் சோறே, எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே, வருநர்க்கு வரையாது பொலங்கலந் தௌ¤ர்ப்ப இருள் வணரொலிவரும் புரியவிழைம்பால் ஏந்துகோட் அல்குல் முகிழ்நகை மடவரல் கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே'' (2ம் பத்து எட்டாம் பாடல் 1-6)

விறலியின் இயல்பு ஆடுதல். எனவே அவளை ஆடுக விறலியர் என்று இயல்பாய் எவ்வித அதிகார தோரணையும் இல்லாமல் அழைக்கிறார் காக்கைப் பாடினி. ஆடும் அவளை தன் வீட்டு ஏவல்காரியாய்ப் பார்க்கிறது குமட்டூர் கண்ணனார் பாடல். சமையல் காரியாய் சமைத்துப் போட வைக்கிறது.


வளங்கெழு குடைச் சூல் இதற்கு உரையாசிரியர்கள் தருகிற விளக்கம் ''வளமை பொருந்திய சிலம்பையும், அடக்ககத்தால் உயர்ந்த ஒழுக்கத்தையும் உடைய'' ( ஒளவை துரைசாமிப்பிள்ளை உரை) என்பதாகும். வளங்கெழு கடைச் சூல் என்ற தொடரை ஏன் சிலம்பிற்குக் காட்டவேண்டும்.

உள்புறம் துளை வருமாறு கடையப் பட்ட சிலம்பை அணிந்த பெண் என்ற இந்த இந்த உரைக்குறிப்பு சிலம்பு கழி நோன்பை எல்லாம் கேள்விக்கு உள்ளாக்கி விடும். இதற்கு நேர் பொருளை உரையாசிரியர் தந்திருக்கலாம். அதாவது வளமை மிகுந்த உள்புறம் குடைவு பெற்ற கருப்பையை உடைய- அதன்வழியாக வளமை மிக்க மகனைப் பெற்றுத் தந்த மகளிர் என்ற பொருளில் பெண் படைத்துள்ளாள்.

இதனை உரையிட்ட ஆண்உலகம் செய்த மாற்றம் சிலம்பு என்பது. பெண்ணின் வளமை கருப்பை கொண்டிருப்பது. அதனுள் மகவைத் தாங்குவது. அந்த மகவனுபவத்தை அவள் அவள் சொற்களில்தான் கூறமுடியும் என்பதற்க மேற்காண் வரிகள் சான்று.இவளின் துனித்த கண் என்பது இதே பத்தின் இரண்டாம் பாடலில் ஆடல் மகளிர்பால் ஈடுபட்ட ஆடுகோட்பாட்டுச் சேரலாதனை அவனின் மனைவி ஊடல் கொண்டமையால் கூறப்பட்டதாகும். அந்த கண்களை விட இரவலர் நோயுடைய கண்ணிற்கு இவன் அஞ்சுவான். பெண் தனக்குரிய இடத்தை முன் கண்ணில் பெற்றாள். எனவே பின்கண் இயல்பாய் எவ்விதப் புனைவும் தேவையாகாமல் வந்தது.

இவ்வாறு வரிக்கு வரி பெண் பெண்மொழியில் பேசிக் கொண்டே இருக்கிறாள். அதை அக்கண் நோக்கினால் அன்றி கிட்டாது.ஆண் சொல்லிற்கும் பெண் சொல்லிற்கும் உள்ள ஒரு சிறு வேறுபாட்டை இப்பகுதி கொண்டே விளக்கலாம்.

விறலியை அழைக்க வேண்டும். அவளைப் பரிசு பெற ஆற்றுப் படுத்த வேண்டும். அவ்வகையில் காக்கைப் பாடினி '' ஆடுக விறலியர் பாடுக பரிசிலர் '' என்றழைக்கிறார்( 6ம் பத்து, எட்டாம் பாடல், அடி 1)

குமட்டூர் கண்ணனார் அழைக்கும் வகை பின்வருமாறு ''உண்மின் கள்ளே, அடுமின் சோறே, எறிக திற்றி யேற்றுமின் புழுக்கே, வருநர்க்கு வரையாது பொலங்கலந் தௌ¤ர்ப்ப இருள் வணரொலிவரும் புரியவிழைம்பால் ஏந்துகோட் அல்குல் முகிழ்நகை மடவரல் கூந்தல் விறலியர் வழங்குக வடுப்பே'' (2ம் பத்து எட்டாம் பாடல் 1-6)

விறலியின் இயல்பு ஆடுதல். எனவே அவளை ஆடுக விறலியர் என்று இயல்பாய் எவ்வித அதிகார தோரணையும் இல்லாமல் அழைக்கிறார் காக்கைப் பாடினி. ஆடும் அவளை தன் வீட்டு ஏவல்காரியாய்ப் பார்க்கிறது குமட்டூர் கண்ணனார் பாடல். சமையல் காரியாய் சமைத்துப் போட வைக்கிறது.

காக்கைப் பாடினியைப் பொறுத்தவரையில் அவளும் விறலி அல்லது பாடினி என்ற வகைப் பெண்களுடன் ஒருவள் தான்.

குமட்டூராருக்கு அவள் ஒரு கற்பனைப் பாத்திரம். அவள் உணர்வோடு உயிரோடு அவர் ஒன்றுதல் இயலாது. எனவே அக் கற்பனைப் பாத்திரத்தை எதையும் செய்யக் கூறலாம்.

மாடு கன்று மேய்க்கச் சொல்லலாம். வீடு கூட்டச் சொல்லலாம். இவ்வகையில் சிந்தித்துக் கொண்டே போக நல்லகளம் பதிற்றுப்பத்து. இக்கட்டுரை வழி சில மட்டுமே காட்டப் பெற்றன. பல உள்ளன.
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

*சூடிக்கொடுத்த கோதை*


[ஆண்டாள் பாடிய திருப்பாவையால் சிறப்புப் பெற்ற மார்கழி வரும் கூடாரவல்லி ஜனவரி11-மார்கழி 27 தினம் விஷேமானது.கண்ணனை நினைந்து,தினமும் ஒரு பாடலாக பாடிவிரதம் இருந்த ஆண்டாள் 27வது நாள் தன் விரதத்தைப் பூர்த்தி செய்து, மறுநாள் அரங்கனை அடைந்தாக வரலாறு]

ஆண்டாள், நமது பக்தி இலக்கிய வாதிகளுள் ஒருதனிப் பெருங்கவி. பன்னிரண்டு ஆழ்வார்களுள் அவளும் ஒருத்தி கட்டக் கடைசி மட்டுமல்ல, அந்த வரிசையில் இடம் பெற்ற ஒரே ஒரு பெண்மணி அவள்தான்.

உலக வரலாற்றில் ஆண்டாளுக்கு இணையான காதல் கவிகள் வேறு யாரும் கிடையாது. இன்றுவரைக்கும் இல்லை எனலாம்.
ஆண்டாள்தான் காதலை கனிந்து உள்ளுருகி பாடிய பெண்கவிஞர்.தன் காதலை இனிய தமிழில் சொல்லோவியமாக, என்றும்வாடாத பாமாலையாகபாடி,சூடி மகிழ்ந்தாள்.காதல் வெள்ளம் சுழித்து கரைபுரண்டு ஓடியது.அந்த வெள்ளத்தில் சிக்கிக்கொண்டவளுக்கு, என்ன செய்வது என்று தெரியாது நோன்பு நோற்ற கோதை பரமனை சேர்ந்தாள்.பரந்தாமன் புருஷோத்தமனைக் காதலித்த தனிப் பெருங் காவியம் தான் ஆண்டாளின் வாழ்க்கை.

அந்தக் காலத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் விஷ்ணு சித்தர் என்கிறர் வசித்துவந்தார். அருமையானபுலவர். இந்த விஷ்ணு சித்தர்தான் பின்னாளில் பெரியாழ்வர் என்று அழைக்கப்பட்டவர். ஒருநாள் நந்தவன பெருமாளுக்குமாலை தெடுக்க மலர்களை கொய்து கொண்டிருந்தபோது துளசிச் செடிகளின் ஊடே இயற்கை அழகின் வடிவாக கிடந்த பெண்குழந்தையாக, தங்கக் கனியாக ஆண்டாள் கிடைக்கப் பெற்றார்.
விஷ்ணுசித்தருக்குக் குழந்தை இல்லை.
ஆண்டாளுக்கும் பொறுப்பாளர் இல்லை.
ஆக இது பொருத்தமான அமைப்பாக அமைந்திடவே அவர் குழந்தையை எடுத்து வளர்க்க ஆரம்பித்தார்.

குழந்தைகளுக்கு பயம் காட்ட சில சமயங்களில் நமது பெரிசுகள்பூச்சாண்டியிடம் பிடித்து கொடுத்து விடுவேன், அடம் பிடிக்காமல் இரு என்று கூறுவதுண்டு.
விஷ்ணு சித்தருக்கு பூச்சாண்டி தெரியாத காரணத்தால் ஒரு சமயம் வேடிக்கையாக அரங்கனுக்கு கல்யாணம் பண்ணிக் கொடுக்கப் போகிறேன் என்று ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லவே சிறுமியான ஆண்டாளுக்கு மனதில் பதிந்துவிட்டது.

சிறுமியான ஆண்டாள் அதையே உண்மை என்று நினைந்து விட்டாள். அன்று தெடங்கி திருவரங்கத்தில் இருக்கிற அரங்கன்தான் தன் புருஷன் என்று உளமாற நம்ப ஆரம்பித்துவிட்டாள். கோதைக்கு இயல்பிலேயே அரங்கன் மீது மாளாக் காதல் மலர்ந்திட, அவள்அரங்கனை அடையவே பிறவி எடுத்தவள் என்று திடமாக நம்பினாள்.நாளுக்கு நாள் கண்ணன்மீது ஆண்டாளுக்கு காதலும் வளர்ந்தது.பாவை நோன்பு நோற்றாள் அவ்வகையில் திருப்பாவை நாச்சியார் திருமொழி என்று இரு பிரபந்தங்களை அருளினாள். மகளுக்கு திருமண வயது வந்துவிட்டதே!அவள் விருப்பத்தை அறிய கேட்டபோது, அவளிடமிருந்து...,

மானிடவர் கென்று பேச்சுப்படில்
வாழகில் லேன் கண்டாய் மன்மதனே!

என்று பாட்டாய் பதிலாக வந்தது.
இறுதியாக,ஏழு கமலப் பூவழகுகளை யுடைய திருவரங்கத் தம்மானையே மணப்பேன் என்றாள் விஷ்ணு சித்தர் தினம் கோவிலுக்கு போவார். தன் கையால் தெடுத்த மாலைகளை வடபத்ரசாயிக்கு அணிவித்து அழகு பார்ப்பார். பாசுரங்கள் பாடுவார். இறை ஊழியம் செய்து விட்டு வீடு திரும்புவார்.அப்படி ஒரு நாள் இறைவனுக்குச் சூட மலர் மாலையை எடுத்த போது மாலையில் ஒரு பெண்ணின் தலை முடி இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனார் விஷ்ணு சித்தர்.

இறைவனுக்குச் சூட்டவேண்டிய மாலையை எந்தப் பெண் தன்தலையில் சூடி அழகு பார்த்திருக்க முடியும்? ஆண்டாளா? சந்தேகமே இல்லை. ஆண்டாள்தான்.அவள் தான் அதைச் செய்திருப்பாள். அவளால் மட்டும் தான் அப்படிச் செய்திருக்கவும் முடியும்!

இதிலென்னப்பா தப்பு இருக்கு?
இறைவன் யார்?

நான் கல்யாணம் செய்து கொள்ளப் போகிறவர்தானே?நான் முதலில் சூடிப் பார்த்து விட்டு அவருக்குச் சூட்டினால் என்ன குடி முழுகிப் போய் விடும்? என்று கேட்டாள் ஆண்டாள்.

ஆடிப்போய்விட்டார் விஷ்ணு சித்தர்.
அவர் பெரிய ஆசாரசீலர்.
கோயில் காரியங்களெல்லாம் ஆசாரமாக,முறைப்படி நடக்கவேண்டும் அவருக்கு ஆனால் தன் மகளே இப்படி ஒரு அபசாரத்தைச் செய்திருக்கிறாள்! கடவுளே, இதற்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ என்று பதைத்தது அவரது பக்தி மனம்.
அன்றைக்கு மட்டுமல்ல, பல நாட்களாவே ஆண்டாள் இறைவனுக்குக்காக தந்தை கட்டி வைக்கும் மாலைகளை முதலில் தான் சூடி ஒரு கிணற்றின் நீரில் அழகு பார்த்துவிட்டுதான் அதைக்கொண்டு போய் அப்பாவிடம் கொடுத்து வந்திருக்கிறாள்.காதல் என்று வந்து விட்டால் கடவுளாவது, புனிதமாவது! காதல்தானே ஆகப்பெரிய புனிதம்! பின்னால் இதுபற்றி விஷ்ணுசித்தர் அழுது அரற்றி இறைவனிடம் மன்னிப்புக் கேட்டபோது, பாமாலைப் பாடித்தரப் பிறந்தாள், பூமாலை சூடிக் கொடுக்கவும் பிறந்தாள் என்று கூறியது பெரியாழ்வருக்கு மிகுந்த ஆச்சரியமாக இருந்தது.அதன்படி பெருமாள் சொன்னபடி அவர் செய்து வந்தார்.
அன்று முதல்சூடிக் கொடுத்தவள் சூடிக் கொடுத்த சுடர்கொடி என்று எம்பிராணனையே ஆண்டு விட்டாள்என் பதால் ஆண்டாள் என்னும் பெயர் விளங்கிற்று.

கதைகள் எப்போதும் சுவார்சியமானவைதான்.
ஆனால் ஆண்டாள் விஷயத்தில் கதையைவிட அவளது பாடல்கள் ரொம்ப சுவாரிசியமானது,சுவையானது.அவள்தான் தமிழை முதல் நவீன பெண் கவிஞர்.அந்தக் காலத்துக்குச் சற்றும் ஒத்துவராத அதிநவீன சங்கதிகளை மட்டும்தான் அவள் தன்பாடல்களுக்குக் கருப்பொருளாகத் தேர்ந்தெடுத் திருக்கிறாள்.
ஒரு உதாரணம் சொன்னால் விளங்கும். ஆண்டாளுக்கு, அவளது காதலனான மகா விஷ்ணுவின் உதட்டில் முத்தமிடவேண்டும் என்று ஒரு ஆசை வந்துவிட்டது. அதுவும் உதட்டில்.எப்படி முத்தமிட வேண்டும்? அவர்க்கும் ஒரு அனுபவம் வேண்டுமல்லவா? ஏற்கனவே மணந்த மகா லட்சுமியை கேட்கலாம். அது பிரச்சனையாகி விடும்.
வேறு யாரிடம் கேட்கலாம்? சட்டென்று அவளுக்கொரு யோசனை உண்டானது.அட,என் காதலன் ஒரு சங்கு வைத்திருக்கிறானே!
அதை வைத்துதானே எப்போதும் வாயில்வைத்து ஊதுகிறான்!அந்தச் சங்கிடம் கேட்டால் அவனது உதட்டின் சுவைதெரிந்திருக்குமே!
இந்த யுக்தி உதயமானதுமே கவிதை பீறிட்டுக் கொண்டு புறப்பட்டு விடுகிறது.*
கற்பூரம் நாறுமே,
கமலப்பூ நாறுமோ,**
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ**
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச்சுவையும் நாற்றமே**
விருப்புற்று கேட்கின்றேன் சொல்லாழி வெண் சங்கே* !
கற்பூரம் என்றால் மகா விஷ்ணுவுக்கு உகந்த பச்சை கற்பூரம்.
கமலப்பூஎன்றால் கமலப்பூ தான்.
பவளச் செவ்வாய் தித்திப்பாக இருக்குமோ? என்று சங்கிடம்சந்தேகம் கேட்கிறாள்.
மாதவனின் வாய்ச்சுவைச் பற்றியும், வாசனை பற்றியும் ஆசைஆசையாக கேட்கிறேன், சொல்லித் தெலையேன் வெண்சங்கே என்று சங்கிடம் கேட்கிறாள் ஆண்டாள்!
இதைவிட சுவையான ஒரு காதல் பாட்டை எந்தக் கவிஞர் தரமுடியும்?
ஆண்டாள் அதிகம் பாடவில்லை தான்.
மொத்தம் 143 பாடல்தான்.
ஆனால்,நாச்சியார் திருமொழி என்றுவைவணவர்களின் நான்காவது வேதமான நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் அந்தப்பாசுரங்களுக்கு ஒரு நட்சத்திர அஸ்தஸ்து உண்டு.
எளிமையும் இனிமையுமான காதல்பாடல்தான் எல்லாமே.
பக்தியில் பல வகைகள் உண்டு. இறைவனை தாயாய், தந்தையாய், தோழனாய், தலைவனாய், தெண்டனாய் இன்னும் பலப்பல வடிவங்களில் கண்டு,பாடி பக்தி செய்தவர்கள் பலர் இருக்கிறார்கள்.
ஆனால் காதலனாக வரித்துக்கொண்டு கவிதை மழைபொழிந்தவள்.ஆண்டாள் தான்! வடதேசத்துக்கு ஒரு மீரா என்றால் நம்மூருக்கு ஆண்டாள்! மார்கழி மாதமானால் அதிகாலை பொங்கலுடன் உள்ளே நுழையும் திருபாவைதான் ஆண்டாள். இறைவனை மணப்பதற்காகப் பாவை நோன்பிருந்து அதிகாலை வேளையில் தினசரி ஒன்றாக ஆண்டாள் பாடியமுப்பது பாடல்கள் அவை.
என்ன இந்தப் பெண் இப்படி ஒரு அரங்கன் பித்து பிடித்து அலைகிறாளே என்று அவளது அப்பாவுக்கு ரொம்ப கஷ்டமாகப் போய்விட்டது.வில்லிபுத்தூர் இறைவனான வட பத்ரசாயிடம் போய்கதறி கண்ணீர் மல்க தன் மகளுக்கொரு வழி காட்டும்படிவேண்டினார்.
அவரால் வேறென்ன செய்ய முடியும்.
இறைவன் உத்தரவுப்படியே விஷ்ணு தன்மகளை ஸ்ரீரங்கத்திற்கு அழைத்துப் போனார்.

இப்படி ஒரு நிகழ்வு இவ்வையகத்தில் நிகழுமா என்ற ஆச்சிரிய ஆர்வத்துடன் ஊரேதிரண்டு ஊர்வலமாக கோதையின் பின்னால்சென்றது.
வல்லபதேவ பாண்டியனும் அந்தஊர்வலத்தில் முன் சென்றான்.
************************************

.**மார்கழி நோன்பு** **மார்கழி - தை.**

**15-12-06 -இல் மார்கழி நோன்பு தொடக்கம் **

**உலகின் வட முனையில் இருப்பவர்கள் நம்மைப் போல பகலெல்லாம் வெயிலிலும் ,
இரவெல்லாம் இருட்டிலும் வாழ்வதில்லை. **

**அவர்களுக்குப் பகலென்பது ஆறு மாதமாகவும்,**

**இரவென்பது ஆறுமாதமாகவும் நீண்டுடிருக்கும். **

**சூரியன் வடக்கிருந்து தெற்கேபோவது போலவும்,
பின் ஆறு திங்கள் ஆனதும் தெற்கே இருந்து வடக்கே
திரும்பிப் போவது போலவும் நமக்குத் தோன்றும்**

**வடக்கு நோக்கிப்போகும்
*ஆறு திங்களைத் தட்சணாயனம்
*எனவும் வழங்குகிறது.**

**வட முனையில் தட்சணாயனமே இரவுக் காலம் **

**உத்தராயணமே பகற்காலம்.**

**தை மாதத்திலிருந்து ஆறு திங்களை உத்தாரயணம் என்றும் ,
**ஆடியிலிருந்து ஆறு திங்களைத் தட்சணாயனம் என்றும்
**கூறுகிறோம்.**

**புராணங்கள் தேவர்களுக்கு ஓராண்டு ஒருநாள் என்றும் ,

**உத்தராயணமே பகல் என்றும்,தட்சணாயனமே இரவென்றும் கூறும்.

**இந்த நிலையில் தைமாதத்திற்கு முந்திய மாதம் செவ்வானக் காலமாகும்.

**அந்த நிலையில் மார்கழி மாதம்,
*இருளில் நீண்ட காலம் புழுங்கியவர்களுக்குத்
*துன்பமெல்லாம் நீங்கிப் பொழுது விடியும் காலமாக
*இன்பமூட்டுவது இயல்பே. **

^^வட முனையில் வாழ்ந்த வாழ்வின் நினைவே அந்த இனத்தின்^^
**நினைவில் தங்கிவிட அதனையே தேவ ஆண்டாகப் புராணம் பேசியிருக்கலாம்
**எனக் கருதுவாரும் உண்டு. நாள் விடிவதென்றால் நம் கணக்கில்
**ஆண்டு பிறப்பதேயாகும்.**

**திருவாதிரை ஒரு காலத்தில் சூரியராசியின் தொடக்கமாக இருந்ததாம்.**

**பூமியின் சுழற்சியின் பயனாக இவ்வாறு தொடங்குமிடம் பல நூற்றாண்டுகளில்
**மெல்ல மெல்ல மாறி வருமாம்.

திருவாதிரையிலிருந்து கார்த்திகை முதலாக **மாறியிருந்த காலமும்,
அசுவினி முதலாக மாறி இருந்த காலமும் உண்டு. **

**இப்போது பூரட்டாதி முதலாக உளது என்பர்.

திருவாதிரை முதலாக **இருந்த காலத்தில் வேதம் எழுதப்பட்டது என்பது திலகரது கொள்கை.

**கார்த்திகை மாதமே ஆண்டின் முதல் மாதமாக இருந்ததும் உண்டு.

**அது மாறிப்போன பின்னும் கூட மக்கள் அதனையே முதலாக **வைத்து எண்ணி வந்தனர்.**
** ஞான சம்பந்தரது கோளாறு பதிகத்தில் வழி நடைக்கு காத
நட்சத்திரங்களைக் குறிப்பிடும் போது :**

** '' ஒன்பதோடு ஒன்றோடு ஏழுபதினெட்டோடு**
ஆறும் உடனாய நாள்கள்..." **

என்று கிருத்திகையை முதலாக வைத்தே எண்ணுகிறார் என்பர்.**

**ஆனால் அவருக்கு முன் காலத்திலேயே அசுவனி முதலாக**எண்ணப்பட்டு விட்டது.

வட நாட்டில் வருடப்பிறப்பு தீபாவளியன்று **பிறப்பது இதனை ஒட்டியே என்று கூறப்படுகிறது.**

**<> மார்கழி பனி பொலிவு நாளையும் உண்டு <>**



**'' மார்கழி '' வட நூல் குறிப்பு"**.

*மார்கழித் திங்களைச் சிறப்பித்துப் பேசும் வழக்கத்தை வடமொழிநூல்களிலும் காணலாம்.

''மாதங்களில் நான் மார்கழி மாதம் ஆகின்றேன் ''

என்று கண்ணன் கீதையில்கூறுகிறான்.

வால்மீகியும்,

பஞ்சவடிவில் ராமர் இருக்கும்போது,இலக்குமணன்,
ராமனுக்குவிருப்பமான பனிக்காலம் வந்ததென்றும்,
இந்த மார்கழி மாதத்தினாலேயே ஆண்டுமுழுவதும்
அணி பெறுகிறதென்றும் ராமனிடம் கூறிகிறான்.

பெண்கள் அழகைப் பெற விரும்பினால் செய்யும்
நோன்பு ஒன்றை விஷ்ணுதருமோத்த புராணம் கூறுகிறது.

இந்த நோன்பு மார்கழி மாதத்தில் நடைபெறும் என்றும்,
அப்போது அவியுணவே கொள்ளுதல் வேண்டும் என்றும்
அந்தப் புராணம் கூறுகிறது.

அம்பா ஆடல் என்பதற்கும் உலகத் தாயின் வடிவைப் பாவையாக
அமைத்து வழிபடுவது என்று பொருள் கூறலாம் என்று காலம் சென்ற
மு. ராகவையங்கர் கூறுகிறார்.

பாகவதம் மார்கழி மாதத்தில்ஆயர் மகளிர் காத்தியாயினியை வழிபட்டு,
அவியுணவு உண்டு கண்ணனை அடைந்தார்கள்என்றும் கூறுகிறது.

இந்த வடநூற் குறிப்புகள் தென்னாட்டு தொடர்பால் எழுந்தன என்று கூறலாம்.



*பாவை நோன்பு :

*கார்த்தியானி விரதத்தைப் ''பாவை நோன்பு'' என்பதினால் ' எம்பாவாய் 'எனப் பாவையை நோக்கி முதலில் பாடிய பாடல்கள் 'ஏலோர் எம்பாவாய்'என்ற தொடர் ஒவ்வொரு பாட்டிலும் முடிவாக வருகிறது.

அவியுணவு உண்ணுதலைப்பற்றி வடமொழி நூல்கள் கூறுகிறது.

ஆண்டாளும் ,



'' பாலுண்ணோம் நெய்யுண்ணோம்
கோல அணிகலெல்லாம் பூணோம் ''

-- என்று கூறிகிறாள்.

இதிலிருந்து இந்த நோன்பின் கடுமை நமக்கு விளங்குகிறது.

அது மட்டுமல்லாது அறம்செய்தலையும் வலியுறுத்துகிறது.

ஐயமும் பிச்சையும் ஆந்துணையும் கைகாட்டவேண்டுமெனப் பாடுகிறார்.

நோன்பு முடிந்த பின் எல்லா அணிகளையும் அணிவதோடுநெய் ஒழுக சிறந்த உணவை உண்ணுவதனையும் குறிப்பிடுகிறது.


உ.வே. சாமிநாதய்யர் ஒரு பண்டிதர். ஆரம்ப முதலே தமிழ்ப் பெரியோரிடம் முறையாக முழு நேர மாணாக்கனாகக் கல்வி கற்றவர். அவருக்குத் தமிழைத் தவிர வேறெந்த மொழியும் தெரிந்திருக்க அவர் வாய்ப்பளிக்கவில்லை என்றே கூற வேண்டும்.

காலத்தால் குறைபட்ட, சிதையுண்ட பண்டைய தமிழ் இலக்கியப் பிரதிகள் அன்று அவரால் முடிந்த அளவு பூரணமாகவும் பொருள் பொதிந்ததாகவும் படிப்போர் ஓரளவு எளிதாக அணுகக்கூடிய முறையிலும் பதம் பிரித்தும் பதிப்பிக்கும் பணியே அவருக்கு முழு மனநிறைவு அளித்திருக்கிறது. அவருக்கிருந்த சிறு நண்பர் குழாமையும் அவருடைய பணியை ஒட்டியே அமைத்துக் கொண்டார்.
தமிழ் இலக்கிய ஆய்விலிருந்து வேறெந்த ஈடுபாடும் தன்னைப் பிரிப்பதற்கு அவர் இடம் தரவில்லை.

சாமிநாதய்யர் தன் வாழ்வின் இரண்டாம் பகுதியில்தான் சுயமாகப் படைக்கத் தொடங்குகிறார். மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வரலாறு அவருக்கு ஒரு திருப்புமுனை. உண்மையில் அவர் சுயமாக எழுதிய சிறிய மற்றும் பெரிய உரைநடைப் படைப்புகள்,அவர் சொல் சொல்லாகத் தேடி ஆராய்ந்து பொருள் அறிந்து பதிப்பித்த பண்டைய நூல்களைவிட ஏராளமானோர் அணுகி அனுபவிக்க வாய்ப்பளித்தன.
இரு பத்திரிகைகள் குறிப்பாக இத்துறையில் பங்கேற்றன.
ஒன்று கலைமகள். இன்னொன்று ஆனந்த விகடன். கலைமகள் அவரை ஆரம்ப முதலே சிறப்பாசிரியராகப் போற்றிப் பாராட்டியது.
தீவிர அறிவாளிகள், விஞ்ஞானிகள் அப்பத்திரிகையின் ஆலோசகர்களாக இருந்ததால் சாமிநாதய்யரின் பங்கு வியப்பளிக்கக்கூடியதல்ல. ஆனால் ஆனந்த விகடனின் இலக்கும் தன்மையும் கலைமகளிலிருந்து மாறுபட்டது. கலைமகள் மாத ஏடு. அது பிரசுரிக்கத் தேர்ந்தெடுத்த அனைத்துமே நிதானமாகவும் கவனமாகவும் படிக்க வேண்டியவை. ஆனால் ஆனந்த விகடன் வார இதழ் பரபரப்பு, அன்றாடக் கவலைகள், அக்கறைகள், பிரச்சினை களையே பிரதானமாகக் கொண்டது. பரவலான வாசகர்களை எட்டுவது அதன் முக்கிய இலக்காதலால் அது கொண்டிருக்கும் கதை,கட்டுரைகள் எளிமைப்படுத்தப்பட்டவை. ஆனால் அத்தகைய இதழும் சாமிநாதய்யரைப் பங்கு கொள்ளவைத்தது.
அவரும் எத்தரப்பினரும் மனத்தாங்கல் அடையாத விதத்திலும் அதே நேரத்தில் மொழி, பொருள் இரண்டும் உயர்ந்த மதிப்பீடுகளையே சார்ந்ததாகவும் இயங்கினார். இதை எழுதினோமே, இப்படி எழுதினோமே என்று அவர் சிறிதும் மனக் கிலேசம் அடைந் திருக்க வழியில்லை.

அய்யரவர்களுக்கு இரு ஆசான்கள்.
திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை. இரண்டாவது, வித்துவான் தியாகராசச் செட்டியார்.
செட்டியார் அவர்கள்தான் அய்யரவர்களைக் கல்லூரியாசிரியராகப் பணியாற்றப் பாதையும் ஊக்கமும் தந்தவர்.

தியாகராசச் செட்டியாரே திருமணத்திற்குப்பின் கல்விக்கூடங்களில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தவர். திரிசிரபுரத்தில் பட்டாளம் பகுதி என்று இன்றும் உள்ளது. திருச்சிக் கோட்டை அப்பகுதியைச் சேர்ந்ததுதான். பட்டாளத்தாருக்கு உள்ளூர் மொழிப் பரிச்சயம் ஏற்படத் தமிழ் கற்பிக்கப்பட்டது. தியாகராசச் செட்டியார் ஏற்றுக்கொண்ட மாதச் சம்பள ஆசிரியப் பணி அந்தப் பள்ளியில்தான். சம்பளம் மாதம் பத்து ரூபாய்.

சாமிநாதய்யர், தியாகராசச் செட்டியார் அவர்களின் வாழ்க்கை வரலாற்றைச் சிறு சிறு கோர்வையான கட்டுரைகளால் கலைமகள் மாத இதழில் வெளியிட்டிருக்கிறார். ஒவ்வொரு கட்டுரையும் எந்த இடத்திலும் தொய்வு தோன்றாதபடியும் கூறியதையே திரும்பக் கூறும் தவறு இல்லாதிருத்தலும் வியப்பளிக்கிறது. சாமிநாதய்யர் தன் மனத்தில் தன் ஆசானின் வாழ்க்கை வரலாற்றை எவ்வளவு தெளிவுடனும் கோர்வையுடனும் உருவகித்துக் கொண்டி ருந்தார் என்பதற்கு வித்துவான் தியாகராச செட்டியார் நூல் சிறந்த எடுத்துக் காட்டு.
இதே பண்பு பின்னர் அவர் ஆனந்த விகடனில் என் சரித்திரம் எழுதியபோதும் வெளிப்பட்டிருக்கிறது. முதிர்ந்த வயதில் காலம் மற்றும் காட்சிகள் கலைந்து, வரிசை மாறியும் தகவல்கள் மாறியும் மனத்தில் தோன்றும் என்பார்கள்.ஆனால் வித்துவான் தியாகராச செட்டியார், என் சரித்திரம் ஆகிய நூல்கள் இன்றைய கணிணிகள் உதவி யுடன் இயற்றியதுபோல அவ்வளவு சீராக உள்ளன.

வித்துவான் தியாகராச செட்டியார் நூலில் சாமிநாதய்யர் செட்டியார்பால் கொண்டிருந்த பெருமதிப்பு அவர் தகவல்கள் அடுக்கிக்கொண்டு செல்லும் விதத்தில் தெரிகிறது. அவர் மிகை என்று தோன்றக் கூடியது எதையும் பயன்படுத்தியதில்லை. ஆத்திகர்கள் உயர்வு நவிற்சியைப் பயன்படுத்தும் இடத்தில்கூடச் சாமிநாதய்யர், மேற்கத்திய மதசார் பற்றப் பார்வை,உரைநடையில் ஏற்படுத்தியிருந்த சிறு சிறு மாற்றங்களை, உலகத்து மொழி களில் மிகப் பழைமையானதாகிய தமிழில் அன்றே பயன்படுத்தியிருக்கிறார். இவ்வளவுக்கும் அவர் ஆங்கிலத்தில் தன் பெயர் எழுதக்கூடிய அளவுதான் பரிச்சயம் அடைந்திருந்தார்!

சாமிநாதய்யர் எழுதிய மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை சரித்திரம் இரு பாகங்களில் 1933-34இல் வெளிவந்தது. சாமிநாதய்யரின் உரைநடை, தொடக்கத்தி லிருந்தே நவீனமாகவும் எளிதாகவும் இருந்தாலும் மகாவித்துவான் வரலாறு எளிதான நூல் அல்ல. சாமிநாதய்யரின் குருபக்தி விசேஷமானது. நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஜாதி ஆசாரங்கள் எவ்வளவு கடுமையாக அனுசரிக்கப்பட்டிருக்க வேண்டும்! ஆனால் சாமிநாதய்யர் பிள்ளையவர்களின் முடிவுவரை பக்கத்திலேயே இருந்திருக்கிறார். நள்ளிரவுக்கு மேல் நெடுநேரம் நினைவிழந்த ஆசிரியர் பக்கத்திலேயே கண்விழித்தி ருக்கிறார். ஆசிரியர் கண்விழித்து ஏதோ சொல்ல வாயெடுத்திருக்கிறார்.
அது திருவாசகமென்று புரிந்து கொண்டு சாமிநாதய்யர் திருவாசகத்தில் அடைக்கலப் பகுதியை வாசித்தார்.
சவேரிநாதப் பிள்ளை மகாவித்துவானைத் தமது மார்பில் தாங்கிக்கொண்டார்.
அவர் நெற்றியில் விபூதி இடப்பட்டது.
சிறிது நேரத்தில் அவர் உயிர் ஸ்தூல உடலிலிருந்து விடுதலை பெற்றது.

சாமிநாதய்யர், மகாவித்துவான் சரித்திரத்தில் பயன்படுத்தியிருக்கும் உரைநடைக்கும் அதற்குப் பிந்தைய படைப்புகளில் உணரப்படும் உரைநடைக்கும் சில வேறுபாடுகள் உள்ளன. முந்தையதில் ஓர் இறுக்கம் காணப்படுகிறது. பல செய்யுள்கள் எடுத்துக் காட்டப்படுவதால் வாசிப்போர் தம் மனநிலையை அடிக்கடி மாற்றிக்கொள்ளத் தேவைப் படுகிறது.
வித்துவான் தியாகராச செட்டியார் நூலிலும் சில செய்யுட்பகுதிகள் நேர்ந்தாலும் பொதுவில் ஒரு சரளம் இருக்கிறது. இதை அவர் செட்டியார் அவர்களிடம் கொண்டிருந்த அந்நியோன்யம் சாத்தியமாக்கியது என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது.

சாமிநாதய்யரின் இரு ஆசான்களும் மகாவித்துவான்கள் என்றாலும் தியாகராசச் செட்டியார் அன்று நாட்டில் மாறிவந்த நாகரிகத்தின் சூழ்நிலைகளுக்கு ஈடுகொடுக்க வேண்டியிருந்தது.
ஓரிடத்தில் மாதச் சம்பளம் பெறுவதான நிலை பத்தொன்பதாம் நூற்றாண்டு ஆசிரியர்களுக்குப் புதிய அனுபவம்.
சீடர்கள் வரும் நேரத்தில் கற்பிப்பதும் சீடர்கள் பணிவிடை செய்துவரும்போது சூசகமாக அறிவூட்டுவதும்தான் நாட்டில் காலம் காலமாக இருந்துவருவது. குறித்த நேரத்தில் தனி உடை அணிந்துகொண்டு பள்ளிக்குச் சென்று, மணியடித்துத் தொடங்கி மணியடித்து முடிக்கும் வகுப்புகளை நடத்த ஒரு புது மனநிலை கொள்ள வேண்டியி ருத்தது.
தியாகராசச் செட்டியார் அவர்களுக்கு இது சாத்தியமான அளவுக்கு மகாவித்துவான் பிள்ளையவர்களால் முடிந்திருக்குமா என்பது உறுதியாகக் கூற முடியாது.
தியாகராசச் செட்டியார் காலத்தில் தமிழ் கற்பிக்கும் பாதை ஒரு புதிய திசையில் செல்ல நேர்ந்தது என்பதில் தவறில்லை.
இதைப் பின்னர் சாமிநாதய்யரும் இன்னும் ஏராளமான தமிழ் அறிஞர்களும் பின்பற்றி உலக மக்களிடையே தமிழ் அறிவைப் பரப்பினார்கள்.

சீடர்களோ நண்பர்களோ எந்த அளவுக்கு ஆசிரியரின் குடும்பத்திலும் இல்லத்திலும் பங்கு பெறலாம் என்பது கேள்விக்குரியது. என் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இந்த முரண்பாட்டை உணர வேண்டியிருந்தது. நான் பல மாதங்கள் குடும்பத்தைப் பிரிந்து கடல் கடந்து செல்லப்போகிறேன்; அப்போது நிறைய நண்பர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு அந்த நிகழ்ச்சியை அவர்களுக்கே கிடைத்த பெருமையாகக் கொண்டாடிக் கொண்டி ருந்தார்கள்.
அவர்களில் பெரும்பான்மையோர் என் மனைவிக்கோ என் குழந்தை களுக்கோ தெரிந்தவர்கள் அல்ல.
உண்மையில் அன்று என் குடும்பத்தாருக்கு நான் மிகவும் முக்கியமாகக் கூற வேண்டிய தகவல்கள் சொல்லப்படாமலேயே போய்விட்டன.

மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களின் இறுதிக் கணத்தில் அதே கூரையடியில் அவருடைய வாழ்க்கையே தன் வாழ்க்கையாகக் கொண்ட அவருடைய மனைவியாரும் மகனும் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் அவர்கள் பிள்ளையவர்களின் இறுதிக் கணங்களில் அவரை நெருங்க முடியாதபடிதான் இருந்திருக்கும் என்றே எண்ண வேண்டியிருக்கிறது.
கடைசிக் காலத்தில் சைவர்கள் நெற்றியில் விபூதி இடுவது ஆண்டாண்டுக் காலமாக இருந்து வரும் பழக்கம்.
ஆனால் அது பிள்ளையவர்களின் குடும்பத்தாருக்குக் கிட்டவில்லை.
சாமிநாதய்யர் எழுதியதில் பிள்ளையவர்களின் அந்தரங்க உறவுகள், தனிப்பட்ட செயல் கள் இடம் பெற வில்லை. அவருடைய புலமை, கவித்துவம், மாணாக்கர்பால் அவர் கொண்டிருந்த அன்பு, இவைதான் இடம் பெறுகின்றன.

தியாகராசச் செட்டியாரின் வாழ்க்கை நிகழ்ச்சிகள் எழுதப்பட்ட விரிவு அவருடைய மறைவு குறித்து அல்ல.
சாமிநாதய்யர் 'சரம தசை' என்று தலைப்பிடப்பட்ட அத்தியாயத்தில் இதை எழுதியி ருக்கிறார் (இறுதிச் சடங்குகளின்போது வடமொழியே பயன்படுத்துவோர்கூட 'சரம சுலோகம்' என்ற பதத்தைப் பயன்படுத்துகிறார்கள்.)
பத்து வரியில் முடிவு தெரிவிக்கப்படுகிறது. நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையான செட்டியார் அவர்களின் பேச்சும் மங்கிவிட்டது. முன்பே ஏற்பாடு செய்திருந்தபடி ஒருவர் தேவாரம் படிப்பதற்காக வந்திருந்தார். ஒரு கட்டத்தில் செட்டியார் கையைத் தட்டினார்.
அதன் குறிப்பு சிலருக்கே விளங்கியது.
வேறொரு அன்பர் சரியாகப் படிக்கத் தொடங்கினார்.
இறுதிக் கணத்தில்கூடச் செட்டியார் அவர்களுக்குத் தமிழ் பிழையாகப் படிக்கப்படுவதை உணர முடிந்து அதைத் தடுக்க முடிந்திருக்கிறது.

இங்கும் நாம் அக்காட்சியை முழுமையாக ஊகிக்க முடியவில்லை. ஆசான், சீடன் இருவருக்கும் தமிழ் ஒன்றுதான் அதிமுக்கியமாக இருந்திருக்கிறது. இந்த மொழிப் பற்று அவர்களை இன்னும் மேன்மையானவர்களாக்கியது என்பதில் ஐயமில்லை.

சாமிநாதய்யர், மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் அவர்களைத் தந்தையாகப் பாவித்தார் என்றால் தியாகராசச் செட்டியார் அவர்களை மூத்த அண்ணனாகக் கருதினார். "என் ஆசிரியரிடம் (மகாவித்துவான்) எனக்கு முன் படித்தவராதலின் இவர் எனக்கு முன்னவர்; என் பால் அன்பு வைத்துப் பழகியமையின் என் நண்பர்; இன்ன இன்னபடி மாணாக்கர் களிடம் நடந்துவர வேண்டுமென்பதையும் சில நூற்பொருள்களையும் வேறு விஷயங் களையும் எனக்கு அறிவுறுத்தியமையின் என் ஆசிரியர்களில் ஒருவர்; எனக்குத் தம் உத்தியோகத்தை அளித்துப் பிறர் கையை எதிர்பாராத நிலையைச் செய்வித்தமையின் ஒரு வள்ளல்."

(சாமிநாதய்யர் இதை ஒரே வாக்கியமாக எழுதியிருக்கிறார். ஹென்றி ஜேம்ஸ் என்ற ஆங்கில இலக்கிய நாவலாசிரியரை 'மாஸ்டர் ஆஃப் செமிகோலன்' என்பார்கள். அதாவது அரைப்புள்ளி பயன்படுத்துவதில் வல்லவர். சாமிநாதய்யரின் மேற்கண்ட வாக்கியத்திலும் இத்தேர்ச்சி காணப்படுகிறது. ஓலைச்சுவடி எழுத்திலிருந்து அச்சுச் சாதனத்துக்கு எவ்வளவு இயல்பாக மாறித் தேர்ச்சியும் அடைந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.)

அய்யரவர்களின் வாழ்க்கையில் சீவக சிந்தாமணி பதிப்பு பல்வேறு அனுபவங்களுக்கு உட்படுத்தியது. அது நச்சினார்க்கினியரது உரையுடன் வந்தால்தான் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று 1886இல் இந்து பத்திரிகையில் ஓர் அனாமதேயக் கடிதம் வெளியாயிற்று. சி.வை. தாமோதரம் பிள்ளையும் சீவக சிந்தாமணியைப் பதிப்பிக்கப் போவதாகச் செய்தி வெளியிட்டிருந்தார். அவர் புதுக்கோட்டையில் நீதிபதியாக நியமனம் பெற்றவர். அப்படிப்பட்ட பெரியோரிடம் மனவருத்தம் ஏற்படும்படியாகிவிட்டதே என்று சாமிநாதய்யர் வருந்தினார்.

சீவக சிந்தாமணி பதிப்பு சாமிநாதய்யருக்கு நிறையப் புகழ் கொணர்ந்தாலும் மனம் வருந்தும்படியாகவும் சில விளைவுகள் இருந்தன.
அவர் ஆயுள் பரியந்தம் வருந்தக்கூடியதொரு பிழைக்கு அவரே காரணமாகிவிட்டார்.

அச்சு வேலை முடிந்து முதலில் நூறு பிரதிகள் நூல் தயாராகி அய்யரிடம் கிடைத்தன. கும்ப கோணத்தில் நூலுக்காகக் கையொப்பம் செய்தவர்களுக்கு விநியோகம் செய்ய ஒரு நண்பரிடம் கொடுத்தார். பின்னர் திருவாவடுதுறை, தஞ்சாவூர் ஆகிய ஊர்களிலும் தானே விநியோகம் செய்து திருச்சிக்குச் சென்றார்.

திருச்சிராப்பள்ளி சென்று உறையூர் அடைய இரவு இரண்டு மணியாகியிருக்கிறது. அந்த நேரத்தில் செட்டியார் வீட்டுக் கதவைத் தட்டியிருக்கிறார் (அந்த அளவு இருவருக்கும் நெருக்கம் இருந்திருக்கிறது). செட்டியார் அதற்குள் நூலைப் பார்த்திருக்கிறார்.
"என்ன வேலை செய்திருக்கிறீர்கள்! . . . உங்களுக்கும் மகாவித்துவான் அவர்களுக்கும் திருவாவடுதுறை மடத்தாருக்கும் எனக்கும் பெரிய கீர்த்தியைச் சம்பாதித்து வைத்துவிட்டீர்கள்," என்று தியாகராசச் செட்டியார் மகிழ்ந்தார்.

சாமிநாதய்யர் நூலிலிருந்து சுவை மிக்க சில பகுதிகளை அவரே படித்துக் காட்டினார். சில சொற்களின் உருவத்தைக் கண்டுபிடிக்க சாமிநாதய்யர் அடைந்த கஷ்டங்களைக் கேட்டுச் செட்டியார் மிகவும் வருந்தினார்.

"இப்படிக் கேட்டு வந்த அவர், கடைசியில் ஒரு விஷயத்தைச் சொன்னார். . ." என்று சாமிநாதய்யர் துவங்குகிறார். செட்டியார் மேற்கொண்டு பேசுகிறார்: "இதில் பல பேருடைய உதவிகளைப் பற்றி எழுதியிருக்கிறீர்களே, எந்த இடத்திலாவது என் பெயர் வந்திருக்குமென்று எதிர்பார்த்தேன். நீங்கள் எழுதவில்லை. இந்த விஷயத்தில் உங்களிடத்தில் சிறிது வருத்தம்தான்."

சாமிநாதய்யர் ஒரு காரணம் உண்டு என்கிறார். அது உலகுக்குத் தெரிய வேண்டாம் என்றும் முடிவு செய்திருக்கிறார். ஆனால் சுயசரிதத்தில் வருத்தம் தெரிவித்ததோடு அவர் 'தவறு'க்கு மூன்று வகையில் ஈடு செய்ததாகக் கூறுகிறார். ஐங்குறுநூற்றுப் பதிப்பைச் செட்டியாருக்கு உரிமையாக்கினார். கும்பகோணம் கல்லூரியில் பட்டப் படிப்பில் தமிழ் படிக்கும் ஒரு சைவ மாணவனுக்கு ஆண்டு தோறும் செட்டியார் பெயரில் (அந்த நாளிலேயே) ஆண்டுக்கு நாற்பத்தெட்டு ரூபாய் நிதியுதவி பெறுவதற்கு ஏற்பாடு செய்தார். அவருடைய வீட்டிற்குத் 'தியாகராச விலாசம்' என்று பெயரிட்டார்.

சாமிநாதய்யருக்கு 19ஆம் நூற்றாண்டில் மகத்தான தமிழ் ஆசான்கள் கிடைத்தார்கள். அவரும் அவர்கள் பெருமைக்குப் பெருமை சேர்ப்பாராக விளங்கினார்.
ஒவ்வொரு கட்டத்திலும் தன் ஆசான்களையும் தன்னைப் போஷித்தவர்களையும் வணங்கியே இயங்கினார். சீடனாக இருப்பதையே சாதனையாகக் கொண்டு வாழ்ந்தார்.

சாமிநாதய்யர் சாதாரண வாசகர்களும் பங்கு கொள்ளக்கூடியதாக நிறையவே எழுதியிருக்கிறார். ஆனால் இந்தியப் பாரம்பரியம் ஒரு வித அனாமதேய உணர்வில்தான் இயங்கிவந்திருக்கிறது.
உண்மையில் மகத்தான கலைப் படைப்புகளை யார் உருவாக்குகிறார்கள் என்று இன்றுவரை நாம் உறுதியாக அறிய முடியவில்லை.
பெருமளவுக்கு நாம் இலக்கியாசிரியர்களின் சிறப்புப் பெயர்களையே அறிந்திருக் கிறோம். சாமிநாதய்யர் தன்னைப் பற்றியும் இன்னும் பலரைப் பற்றியும் எழுதியிருந்தாலும் அடிநாதமாக ஒரு அனாமதேய சுருதியிருக்கிறது.
எல்லாம் தெரிந்ததுபோலவும் இருக்கும்.
ஆனால் நிறைய ஊகங்களுக்கும் இடம் இருக்கும்.
அந்த விதத்தில் சாமிநாதய்யர் இரண்டாயிரம் ஆண்டுப் பாரம்பரியத்தில் அங்கம் வகிப்பவராகிவிடுகிறார்.

பழமொழிகள் கொஞ்சம் பார்ப்போம்!

அகத்தினழகு முகத்தில் தெரியும்.

அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.

அடியாத மாடு படியாது.

அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

அழுத பிள்ளைதான் பால் குடிக்கும்.

அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.

அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.

அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.

அறுக்க முடியாதவ இடுப்புல ஆயிறத்தெட்டு அறிவாள்.

ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.

ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.

ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.

ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

ஆயிரம் நட்சத்திரம் கூடினாலும் ஒரு சந்திரன் ஆகாது.

ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

ஆழம் தெரியாமல் காலை விடாதே.

ஆற்றிலே கரைத்தாலும் அளந்து கரை.

ஆறிலும் சாவு நூறிலும் சாவு.

ஆனைக்கும் அடிசறுக்கும்.

இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்.

இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ சர்க்கரை.

உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.

உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?

எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.

எறும்பூரக் கல்லும் தேயும்.

ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.

கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.

கணக்கறிந்த பிள்ளையிருந்தால் வீட்டில் வழக்குக்குக் குறைவில்லை.

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்.

கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?

கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.

கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.

கழுதை அறியுமா கற்பூர வாசனை?

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.

காகம் இருக்கப் பனம்பழம் விழுந்தது போல்.

காகம் திட்டி மாடு சாகாது.

காய்த்த மரம்தான் கல்லடிபடும்.

காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.

கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?

குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.

குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.

குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொம்புக்குக் கொம்பு தாவுமாம்.

குரைக்கிற நாய் கடிக்காது.

கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.

கொல்லன் தெருவில் ஊசி விற்பதுபோல்.

கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.

கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.

சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.

சாட்சிக்காரனின் காலில் விழுவதிலும் சண்டைக்காரனின் காலில் விழுவது மேல்.

சிறு பிள்ளை வேளாண்மை விளைஞ்சும் வீடு வந்து சேராது.

சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.

சொல்லிக் கொடுத்த புத்தியும்
கட்டிக் கொடுத்த சோறும்
எத்தனை நாளுக்குக் கூட வரும்?

தடியெடுத்தவன் தண்டக்காரன்.

தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.

தன் வினை தன்னைச் சுடும்.

தனிமரம் தோப்பாகாது.

தாயும் பிள்ளையுமானாலும் வாயும் வயிறும் வேறு.

தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை.

தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.

தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.

தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.

நக்குகிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?

நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு நல்ல பெண்டாட்டிக்கு ஒரு வார்த்தை.

நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.

நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.

நிறைகுடம் தளம்பாது.


பசி வந்தால் பத்தும் பறந்திடும்.

படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.

பணத்தைக் கண்டால் பிணமும் வாய் திறக்கும்.

பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.

பனை மரத்தடியில் பால் குடித்தது போல.

பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.

பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.

பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.

புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.

புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.

பூவோடு சேர்ந்த நாரும் மணம் வீசும்.

பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.

போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.

மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.

மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.

மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்பட்டது போல.

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.

யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.

யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.

விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.

விரலுக்குத் தக்கதே வீக்கம்.

விளையும் பயிரை முளையிலே தெரியும்.

வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.

வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.

வெளுத்ததெல்லாம் பாலல்ல.

வேலிக்கு ஓணான் சாட்சி.

வைக்கோற் போர் நாய் போல.

மென்பொறியாளர்களை மிரட்டும் மன அழுத்தம்


முழுவதும் குளிரூட்டப்பட்ட அலுவலகம், சோர்வை அகற்ற காண்டீன், மார்பளவு உயரமான சிறு சிறு தடுப்புச் சுவர்களுக் குள் சதாகாலமும் கணிப்பொறி முகத்தைப் பார்த்துக் கொண்டே நகரும் வாழ்க்கை இது தான் பெரும்பாலான கணிணி நிறுவனங்களில் வேலை செய்பவர்களின் உலகம். காலையில் அலுவலகத்தில் நுழைந்து நள்ளிரவு தாண்டும் வரை வேலை செய்வோர் இந்தத் துறையில் அதிகம்.


வெளி உலகிலிருந்து பெரும்பாலும் துண்டிக்கப்பட்டு கணிணிகளில் அடைகாக்கும் இவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டு நிறுவனங்களுக்குத் தேவையானவற்றை, நிர்ணயிக்கப்பட்ட நாளுக்குள் செய்து தருவதற்காக தங்கள் பெரும்பாலான நேரத்தை அலுவலகங் களிலேயே செலவிடுகிறார்கள்.


வெளிப்பார்வைக்கு பணம், புகழ், வசதியுடன் வாழும் இவர்களுடைய இன்னொரு பக்கம் வேதனை நிறைந்தது.


மென்பொருள் துறையிலிருக்கும் பலருக்கும் மன அழுத்த நோய் இருப்பதாகச் சொல்கின்றன பல்வேறு மருத்துவ ஆய்வுகள். முடிக்க வேண்டிய பணிகள், தொலை பேசி அழைப்புகள் என்று அலைந்து கொண்டிருக்கும் இவர்கள் பெரும்பாலும் தங்களு டைய மனதை ஓய்வெடுக்க வைப்பது என்று தெரியாமல் விழி பிதுங்குகிறார்கள். தங்கள் கனவில் கூட கணிணி வேலை வந்து பயமுறுத்துவதாக தன்னைச் சந்திக்க வந்த பொறியாளர்கள் பற்றிச் சொல்கிறார் சென்னையின் மனோதத்துவ மருத்துவர் ஒருவர்.


சதா காலமும் தங்கள் பணியைப்பற்றிய சிந்தனைகளையே மனதில் ஓடவிட்டுக் கொண்டிருக்கும் இவர்களுக்கு தங்களுடைய குடும்ப வாழ்க்கை இரண்டாம் பட்சமாகி விடுகிறது.


காலையில் எழுவதிலிருந்து நள்ளிரவில் வீடு சேர்வது வரை என அலுவலகமே முக்கால் வாசி நேரத்தை எடுத்துக் கொள்வதால் இவர்கள் துயில்வதற்காகவே வீடுகளுக்குச் செல்லும் நிலமை. கணவனின் அன்பை எதிர்பார்த்து ஏமாறும் மனைவி, தாயின் அன்பை எதிர்பார்த்து ஏமாறும் குழந்தை என்று கணிணி நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் குடும்ப உறவுகள் விரிசலடைகின்றன.


சமீபத்திய ஆய்வு ஒன்று கணிணி மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்வோரிடையே விவாகரத்து அதிகமாகி இருப்பதாகச் சொல்லியிருப்பதே வேலைக்கும், தனிவாழ்க்கைக்கும் இடையே நிகழ்கின்ற சமநிலையற்ற தடுமாற்ற வாழ்க்கைக் குச் சான்று எனக்கொள்ளலாம்.


கால்செண்டர்களில் பணிபுரிபவர்களின் நிலமை பல மடங்கு பரிதாபம். அவர்கள் அமெரிக்கா போன்ற நாடுகளின் பகல் நேரத்தில் வேலை செய்யும் சூழல் எழும்போது முழுக்க முழுக்க இரவிலேயே பணிபுரிய நேர்கிறது.


இதனால் அவர்களுடைய உடல்நிலை பாதிக்கப்படுவதுடன், சதா காலமும் தொலைபேசி அழைப்பு களுக்குப் பதில் சொல்வதி லும், கோபத்தை உள்ளுக் குள்ளேயே அடக்கிக் கொண்டு பணிவான குரலிலேயே பேசுவதிலும் மன அழுத்தத்தை அதி விரைவி லேயே சம்பாதித்து விடுகிறார்கள்.


இந்த நிறுவனங்களில் பெரும்பாலும் இளைஞர்களும், இளம் பெண்களும் மட்டுமே வேலை பார்ப்பதால் பாலியல் தவறுகள் தெரிந்தும், தெரியாமலும் நிகழ்வது வாடிக்கையாகி விட்டது. கால்செண்டர்களில் பணிபுரியும் இளைஞர்களும், இளம் பெண்களும் அடிக்கடி தற்கொலை செய்து கொள்வதற்கு இந்த மன அழுத்தமே மிக முக்கியமான காரணமாகி விடுகிறது.


அமெரிக்கா போன்ற வெளி நாடுகளைப் பொறுத்தவரையில் அவர்கள் காலை எட்டு மணி முதல் மாலை ஐந்து மணி வரையே வேலை செய்கிறார்கள்.


அதுவும் வார இறுதியான வெள்ளிக் கிழமைகளில் மூன்று மணியோடு மூட்டை கட்டுகிறார்கள். சனி, ஞாயிறுகளில் அங்கே வேலை பார்ப்பது என்பது ஜனாதிபதியோடு தேநீர் சாப்பிடுவது போல அபூர்வமானது.


எனவே அவர்கள் பெரும்பாலும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதில்லை.


அழுத்தம் எல்லாம் இந்திய தொழிலாளர்களுக்குத் தான்.நாற்பது மணி நேர வேலையை இரண்டு நாட்களில் முடித்தாக வேண்டும் என்று கட்டாயப் படுத்தப் படுவது இந்திய அலுவலகங்களில் மட்டுமே.


ஏதேனும் அமெரிக்க அலுவலகங்களில் வார இறுதிகளில் யாராவது வேலை பார்த்தால் அது நிச்சயம் ஏதேனும் இந்தியராகத் தான் இருக்கும் !


இந்திய அலுவலகங்களைப் பொறுத்தவரையில் இருக்கும் வாடிக்கையாளரைத் தக்கவைப்பதும், வேலையை சிறப்பாகவும், வேகமாகவும் முடித்து வாடிக்கையாளர்களைக் கவரவும் அதிகப்படியான உடல் உழைப்பை அவர்கள் செலவிட வேண்டி யிருக்கிறது. அதிகமாய் வேலை செய்பவர்களுக்கு சிறப்பான பதவி உயர்வுகளும், ஊதிய உயர்வுகளும் வழங்கப்படு வதால் ஊழியர்களும் தங்கள் வாழ்க்கை சுரண்டப்படுவதை உணராமல் இரவு பகலாக வேலை பார்க்கிறார்கள்.


பல அலுவலகங்களில் ஊழியர்களுக்கு அனுமதிக்கப்பட்ட விடுப்புகள் கூட தேவைப்படும்போது வழங்கப்படுவதில்லை. பல ஊழியர்கள் மடிக்கணிணியை வீடுகளுக்குக் கொண்டு சென்று வேலை செய்வதும், நள்ளிரவு, அதிகாலை என கால நேரம் இல்லாமல் வரும் அழைப்புகளுக்கு ஏற்ப வேலை முடித்துக் கொடுப்பதும் இங்கே வழக்கமான நிகழ்வுகள்.


அதிகப்படியான உழைப்பைச் செலுத்தியும் அங்கீகாரம் பெறாத ஊழியர்கள் அதிக மன அழுத்தத்தில் உழல்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


அதுமட்டுமன்றி அமெரிக்கா போன்ற நாடுகளில் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க தனி குழுக்கள் இயங்குகின்றன. அவர்கள் விசைப்பலகையை எப்படி இயக்குவது, மெளஸை எப்படிப் பிடிப்பது, இருக்கையில் எப்படி உட்கார்வது, எப்படிப்பட்ட உடற்பயிற்சிகள் செய்யவேண்டும் போன்றவற்றை ஊழியர்களுக்கு விளக்கி ஆரோக்கியமான சூழலை ஏற்படுத்துகின்றார்கள். இந்தியாவில் அப்படிப்பட்ட வசதிகள் இல்லை என்றே சொல்லலாம்.


ஜப்பானில் ஊழியர்களின் மன அழுத்தம் கோபம் முதலியவற்றைக் குறைக்க வித்தியாசமான வழிமுறையைக் கையாள் கிறார்கள். ஒரு தனியறையில் அலுவலகத்தில் வேலை பார்க்கும் மேலதிகாரிகளின் படங்களைத் தொங்க விட்டிருக்கி றார்கள்.


ஊழியர்கள் அங்கே சென்று அந்த படங்களை நோக்கி கத்துவதும், குத்துவதும் என தங்கள் மன அழுத் தத்தைக் குறைத்துக் கொள்கிறார்கள்.


வேடிக்கையாய் தோன்றினாலும் இது மன அழுத்தத்தைப் பெருமளவில் குறைப்பதாகவும் கோபத்தை மனதுக்குள் பூட்டி வைப்பதனால் வரும் நோய்களிலிருந்து தப்புவிப்பதாகவும் மனோதத்துவ நிபு ணர்கள் கூறுகின்றனர்.


கணிணி மென்பொருள் நிறுவனங்களில் இப்படி தங்கள் குடும்பத்தினரையே மறந்து வேலை செய்பவர்களில் பலர் மனநிலை பாதிக்கப்படுவதுமுண்டு.


சென்னையில் இன்று பல பொறியாளர்கள் மனநிலை மருத்துவர்களின் ஆலோசனை மையங்களில் வருகை புரிவது இதற்காகத் தான்.


அதிகப்படியான வேலை நேரம், அளவுக்கு மீறிய வேலைப்பழு, மறுக்கப்படும் விடுமுறைகள், மிகக் குறுகிய கால வரையறை, குறைந்து போகும் ஓய்வு நேரம், பயண நேரம், மேலதிகாரிகளின் கண் காணிப்பு, இரவில் தூக்கமின்மை, ஒரே மாதிரியான வேலை போன்றவையெல்லாம் மன அழுத் தத்தை அதிகப்படுத்தும் காரணிகளில் சில. 24/7 என்ற கண்காணிப்புப் பிரிவிலும், உதவி பிரிவிலும் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுவது தவிர்க்க இயல்வதில்லை.


அதிகப்படியான வேலை மன உளைச்சலைத் தருவது போல பல உடல்ரீதியான பாதிப்புகளையும் தருகிறது. முதுகு வலி, கை வலி, இடுப்பு வலி , பார்வை குறைபாடு போன்ற நோய்கள் இந்த சூழலில் வெகு சகஜம். தாய்மை நிலையிலிருக்கும் பெண்கள் அதிகப்படியான வேலை மன அழுத்தங்களைச் சந்திப்பதால் கருச்சிதைவுகள் கூட ஏற்படுவதுண்டு என்பது அதிர்ச்சியான தகவல்.
புள்ளி விவரக் கணக்கில் பெங்களூர் இதில் முன்னணியில் இருக்கிறது.


கணிணி மென்பொருள் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு இத்தகைய பிரச்சனைகள் இருப்பதை அறிந்தே இருக்கின்றன.
பெரும்பாலான பெரிய நிறுவனங்கள் இந்த மன அழுத்தத்தைக் குறைப்பதற்காக வருடம் ஓரிரு முறை ஏதாவது ஒரு கடலோர ஓய்வு விடுதிகளுக்குச் சென்று ஆடிப்பாடுவதும், அலுவலகத்துக்கு உள்ளேயே பல விளையாட்டு நிகழ்ச்சிகளை நடத்துவதும் என ஊழியர்களில் மனநிலையை கொஞ்சம் இலகுவாக்குகின்றன.


அலுவலகங்களிலேயே இருக்கும் பூப்பந்து, மேஜைப்பந்து, கேரம் போன்ற விளையாட்டுகள் ஊழியர் களின் மன உளைச்சலை சில வேளைகளில் மட்டுப்படுத்துகின்றன. தியானம், யோகா போன்றவற்றில் ஈடுபடுவது மன அழுத்தத்தைப் பெருமளவு குறைக்கிறது.
என்னதான் இருந்தாலும் இவை யானைப்பசிக்குக் கொடுக்கப்படும் சோளப்பொரி போல ஆகிவிடுகின்றன.


இன்னும் சில நிறுவனங்கள் ஊழியர்களுக்கு ‘பிரேக் துரூ’ என்றழைக்கப்படும் சில பயிற்சிகளையும் கொடுக்கின்றன. சுமார் நாற்பது ஐம்பது பேராக ஏதாவது ஒரு ஹோட்டலில் தங்கி இந்த பயிற்சியைப் பெறுகிறார்கள். மேன்ஃபோர்ட் அலையன்ஸ் போன்ற சர்வதேச தரத்தில் இயங்கும் பல குழுக்கள் இதற்கென்றே இருக்கின்றன.
பயிற்சியில் கலந்து கொள்ளும் ஊழியர்களுக்கு அவர்களுடைய முக்கியத்துவத்தையும், அவர்களுக்கும் சமூகத்துக்கும் உள்ள தொடர்பையும், குடும்பத்துக்கு அளிக்க வேண்டிய முன்னுரிமையையும் அவர்களுக்குப் புரிய வைத்து அவர்களை சமூகத் தோடு இணைக்கின்றன இந்த பயிற்சி நிறுவனங்கள்.


ஊழியர்களிடம் இருக்கும் ஈகோ போன்ற குணாதிசயங்களை விலக்கவும், தலைமைப்பண்பை வளர்க்க வும் இதுபோன்ற நிகழ்ச்சிகள் உதவுகின்றன. ஐம்பது பேர் கொண்ட குழுவுக்கு நான்கு நாள் பயிற்சி அளிக்க இந்த பயிற்சி நிறுவனங்கள் பெற்றுக் கொள்ளும் சம்பளம் சுமார் ஆறு இலட்சம் !.


பொருளாதாரத்தில் மட்டுமே தன்னிறைவை எட்டுவது என்பது வாழ்வின் உன்னத நிலை இல்லை.


மனதில் நிலைகொள்ளும் மகிழ்ச்சியின் அளவை வைத்தே வாழ்வின் வெற்றி கணக்கிடப் படுகிறது. சமூகத்துடனும், குடும்பத் துடனும் இயல்பான உறவை வைத்துக் கொள்ளாத நிலையில் எழும் ஆனந்தம் தற்காலிகமான சலுகைச் சாரல் போல வேர்களை நனைக்காமல் விலகிவிடும்.


கணிணி நிறுவனங்களில் பணிபுரிவோர் இதைக் கருத்தில் கொண்டு குடும்ப வாழ்க்கைக்கும் அலுவலக வாழ்க்கைக்கும் போதுமான முக்கியத்துவத்தை அளித்து சமூகத்தோடு இணைந்து வாழ்வது ஆரோக்கியமான வாழ்வுக்கு அத்தியாவசிய மாகிறது.