திராவிடர் - ஆரியர் உண்மை - தந்தை பெரியார்



தோழர்களே! நான் இந்த ஊர்களுக்கு பலதடவை வந்திருக்கிறேன். எத்தனையோ தடவை பொதுக்கூட்டங்களிலும் பேசி இருக்கிறேன். பல தடவை இந்த ஊர்த் தெருக்களில் நடந்திருக்கிறேன்.

அந்தக் காலத்திலெல்லாம் இல்லாத மாதிரி இப்பொழுது மாத்திரம் எனக்கு ஏன் இவ்வளவு ஆடம்பரமும் ஆர்ப்பாட்டமும் ஆன வரவேற்பு நடக்கவேண்டும்? நான் உங்களுக்குப் புதியவனா? வெளிநாட்டிலிருந்து விளம்பரப்படுத்திக் கொண்டு வரப்பட்டவனா? அல்ல. உங்களுக்கு இது செய்கிறேன், அது செய்கிறேன்; மழையை வரவழைக்கிறேன்; தரித்திரத்தையும் நோயையும் ஓட்டுகிறேன்; வெள்ளையனை விரட்டுகிறேன்; 8-நாள் 10-நாள்களில் சுயராஜ்யம் கொண்டு வருகிறேன் என்று ஏதாவது உங்களுக்கு ஆசை வார்த்தை கூறி மயக்கினவனா? ஒன்றும் இல்லையே.

சுயராஜ்யம் என்பது அர்த்தமற்ற பேச்சு

உங்களில் பலர் அதிருப்தி அடையும் படியும் அரசியல்,சமுக இயல் ஆகியவைகளில் உங்களுடைய பழக்கவழக்க நம்பிக்கைகளுக்கு மாறாகவும் பேசுகிறேன்; சுயராஜ்யம் என்பது அர்த்தமற்ற பேச்சு
என்கிறேன்; இந்தியா என்பது. கற்பனை என்றும் சொல்லுகிறேன்; காங்கிரஸ் என்பதும், தேசீயம் என்பதும் ஆரியருக்கு அரண் என்றும் சொல்லுகிறேன்; இந்து மதம் என்பதாக ஒரு மதமே இல்லை என்றும்,
அப்படிச் சொல்லுவது தமிழர்க்கு இழிவு என்றும் கூட சொல்லுகிறேன்; இன்னமும் பல உங்களுக்கு புதிதாயிருக்கும் படியாகவும், காதுக்கு இனிப்பைக் கொடுக்கக்கூடியதாக இல்லாததாகவும் பேசுகின்றேன்.
இப்படியெல்லாம் பேசுகிற ஒருவனை, நான் சொல்லுவதை அப்படியே ஒப்புக்கொள்ள தயங்குகிற நீங்கள் இவ்வளவு ஆடம்பரமுடன், உற்சாகத்துடன் வரவேற்பதை நான் எனக்காக என்று எண்ணமுடியுமா? ஒரு நாளும் அப்படி நான் நினைக்கவில்லை. இந்த ஆடம்பர வரவேற்புகளால் நான் பெருமை அடையவில்லை.

ஆத்திரமடைந்து ஆடும் வெறியாட்டம்.

ஆனால் பின்னை யாருக்கு? எதற்காக? என்பதை நான் சொல்ல வேண்டாமா? அதைச் சொன்னால்தானே என்னை உண்மையை அறிந்தவன் என்று நீங்கள் கருத முடியும். அதென்னவென்றால் பார்ப்பனர்கள் தேசீயத்தின் பேரால், சுயராஜ்யத்தின் பேரால், காங்கிரசின் பேரால் காந்தியைக் காட்டி உங்களிடம் ஓட்டு பெற்று மந்திரிப் பதவி அடைந்த 25 மாதத்தில், அவர்கள் உங்களுக்குச் செய்த கொடுமையையும் அட்டூழியங்களையும் பொறுக்கமாட்டாமல் உங்களுடைய வயிறு எரிந்து நெஞ்சம் குமுறி ரத்தம் கொதித்து... ஆத்திரமடைந்து ஆடும் வெறியாட்டம் என்றே கருதுகிறேன்.

இந்த வெறியாட்டம் என்னை வைத்து நீங்கள் ஆடுவதற்குக் காரணம் நான் அ.தக் காலத்தில் அதாவது நீங்கள் பார்ப்பனப் புரட்டுக்கு மயங்கி மஞ்சள் பெட்டிக்கு ஓட்டு கொடுக்கப் போகும் காலத்தில் அவர்கள் (காங்கிரஸ்காரகள்) உங்கள் ஓட்டுக்களைப் பெற்றால் இப்படியெல்லாம் செய்வார்கள் என்று புட்டுப்புட்டு விளக்கமாக விளக்கிய காலத்தில், நீங்கள் வேசியின் மையலில் மயங்கிய மைனர்களுக்குச் சொல்லும் புத்திமதியை அடையும் கதிபோல் அவற்றை அலட்சியப்படுத்தி விட்டு கண்மூடித்தனமாகய் நடந்து கொண்டதைத் தவறு என்று என்னிடம் ஒப்புக் கொள்ளும் பாவனையாய் என்னை முன்னிறுத்தி ஆத்திரம் கொண்டாடுகிறீர்கள் என்றுதான் கருதுகிறேன்.

இந்த ஆத்திரக் கொண்டாட்டத்தில் மஞ்சள் பெட்டிக்கு மக்களின் தரம் தெரியாமல் ஓட்டளித்த உங்களில் அனேகரை வெட்கப்படச் செய்திருக்கிறம் என்பதையும் நான் உணருகிறேன்.

தோழர்களே! உலகத்தில் இவ்வளவு பெரும்பான்மையான மெஜாரிட்டியாரின் ஆதரவுடன் அதிகாரம் பெற்றவர்கள் இவ்வளவு சீக்கிரத்தில் பொதுமக்களின் மனக் கொதிப்புக்கு ஆளாகி பொது ஜனஆதரவிழந்து வீழ்ச்சியடைந்ததாக சரித்திரத்தில்கூட பார்ப்பது அரிதாகும்.

ஆணவம் எங்கே?

இன்று அவர்களுடைய, காங்கிரஸ்காரர்களுடைய, பார்ப்பனர்களுடைய ஆணவம் எங்கே? அகம்பாவம் எங்கே?
சட்டசபைகளில் நம் தலைவர்களை சிறிதுகூட மதிக்காமல் "எங்களைஅனுப்பிய பொது ஜனங்களைப் போய்க் கேளுங்கள்" என்று அவர்கள் கூறிய திமிரான பேச்சு எங்கே? இன்றைய வீழ்ச்சி எங்கே? என்று
பாருங்கள்.

என்ன வீழ்ச்சி என்று யாராவது தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? சொல்லுகிறேன் கேளுங்கள்.

தமிழ்நாட்டுத் தலைவரென்றவரும், காங்கிரஸ் முதன் மந்திரியும், காந்தியாரின் அடுத்த பதவியில் இருப்பவருமான தோழர் கனம் ராஜகோபாலாச்சாரியார் செல்லுமிடங்களிலெல்லாம் பல நூற்றுக்கணக்கான கறுப்புக் கொடியும், போலீஸ் உதவியில்லாமல் நடக்க முடியாத நிலையும், காவலோடு காரிலிருந்து இறங்கி காவலோடு காரில் ஏற்றி மூடாக்குப் போட்டு காரை ஓட்ட வேண்டிய
நிர்ப்பந்தமும் ஏற்பட்டு இருப்பதும் - காங்கிரசுக்கு எதிரி, தேசத்துக்கு எதிரி, மனித சமுகத்திற்கு எதிரி, காந்தீயத்துக்கு எதிரி என்று தப்பட்டை மூலம் பறை அறிவிக்கப்பட்ட எனக்கு இப்படி 50ஆயிரம் பேர், லட்சம் பேர் வரை கூடி ஊர்வலம் செய்வதும், வானம். இடிபட வாழ்த்துக் கூறுவதும், நூற்றுக்கணக்கான வரவேற்புப் பத்திரங்கள் வாசித்தளிப்பத்தும், அய்ந்நூற்றுக்கணக்கான மாலைகள் போடுவதும்,
ஆயிரக்கணக்கான ரூபாய்கள் கொடுப்பதுமான இந்தக் காரியங்கள் காங்கிரஸ் வீழ்ச்சிக்கும் பார்ப்பனீய வீழ்ச்சிக்கும் அறிகுறியல்லவா என்று கேட்கின்றேன்.

எதைக் குறிக்கிறது?

நீங்கள் வாசித்தளிக்கும் வரவேற்பின் ஒவ்வொரு எழுத்தும், புள்ளியும், கமா குறியும் எதைக் குறிக்கின்றன? "இந்தப் பார்ப்பன ஆதிக்கத்தை, காங்கிரசை, காந்திப் புரட்டை உடையுங்கள்; அழியுங்கள்; அழித்து கொளுத்திப் புதையுங்கள்" என்று கட்டளை இடுகிறது போலல்லவா காணப்படுகின்றன. நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் காசும் என்ன கூறுகின்றன? "அய்யனே! இந்தப் பார்ப்பனீயக் கொடுமையிலிருந்தி. எங்களை விடுதலை செய்தி, மனிதத் தன்மையோடு வாழ்வதற்கு வகை செய்யுங்கள்" என்று கெஞ்சி, அபயம். கொள்ளுவது போலல்லவா வந்து குவிகின்றன.

உங்கள் வாழ்த்திப் பேரொலிகள் எதைக் குறிப்பிடுகின்றன?

என்னை வாழ்த்துக் கூறுவதன் மூலமே உங்கள் எதிரிகள் ஒழிந்தேபோய்விட்டதாகக் கருதி. வெற்றி முழக்கம் செய்வது போலவே காணப்படுகின்றன.

இவைகளுக்காக நான் உங்களுக்குச் சொல்லவேண்டிய பதில் என்ன?

தோழர்களே! இந்த 15 வருஷ காலமாக நான் கூறி வந்ததை இப்பொழுதாவம் நீங்கள் மெய் என்றும், சரி என்றும் கருதுவதற்கு ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டதே என்கின்ற மகிழ்ச்சிப் பெருக்கோடு உங்களுடைய ஆசைக்கும் எதிர் நோக்கத்திற்கும் ஒரு உண்மையான - மெய்யான தொண்டனாக இருந்து, நீங்கள் சிறிதும் மனக்குறை அடையாத வண்ணம் என்னாலான தொண்டைச் செய்கிறேன் என்று வாக்களிப்பதுதான் என்று கருதுகிறேன்.

நம்மை மிருகமாக நடத்த காரணம் என்ன?

தோழ.களே! இன்று நாம் அதாவது, இந்நாட்டுப் பழங்குடி மக்களாகிய நாம், இந்நாட்டை ஆண்டுவந்த அரச பின்வழியாகிய நாம், உலகத்தில் எந்த நாட்டினர்க்கும் பின்வாங்காத வீரம், மானம், அறிவு, ஆற்றல், கலை, நாகரீகம் ஆகியவைகளில் சிறந்த மக்களாகிய நாம், இன்று ஒரு சிறு கூட்டத்தாராகிய, அதுவும் இந்நாட்டுக்கு மலைக் காடுகளில் இருந்து கால்நடைகளுடன் பிழைக்கவந்த கூட்டமாகிய, பாடுபடாத வர்க்கத்தாராகிய ஆரியர்களாலும் பிறராலும் ஆயிரக்கணக்கான வருஷங்களாக அடிமைப்படுத்தப்பட்டு, அடக்கி ஒடுக்கி மிருகமாய் நட.தப்படுகிற காரணம் என்ன என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

வெள்ளையர் நம்மை அரசியலில் ஆளுகிறார் என்றால், அதற்காகவது ஏதோ ஒரு காரணம் இருக்கலாம். அதாவது, இந்தச் சூழ்ச்சியால் நாம் தமிழர்கள் - திராவிடர்கள் பல்வேறு சமயமாகவும்,
பல்வேறு மேல்-கீழ் ஜாதி வகுப்புகளாகவும், பல்வேறு லட்சியமுடையவர்களாகவும் ஆக்கப்பட்டு, கல்வி இல்லாமல்,தன்முயற்சி இல்லாமல் நசுக்கப்பட்டு விட்டபடியால் கத்தி, துப்பாக்கி உள்ளவருக்கெல்லாம் பயந்து அடிமையாகி, ஆரியரால் நம் நாட்டிற்கு கூட்டி வரப்படுபவருக்கெல்லாம் குடி ஆகி அல்லல்பட்டு வருகிறோம்.

ஆனால், கத்தி இல்லாத, துப்பாக்கி இல்லாத, உடல் வலிகூட இல்லாத இந்த ஆரியர்களுக்கு, அரசியல், சமுக இயல், சமய இயல், பொருளாதார இயல், ஞான இயல் முதலாகியவைகளுக்கெல்லாம் நாம் உரிமை இல்லாமல் அடிமைப்பட்டு உழல்வதற்குக் காரணம் கண்டுபிடிக்க வேண்டாமா என்று உங்களைக் கேட்கிறேன். அல்லது நம் நிலை தமிழ்நாடு தோன்றியது முதல், தமிழர் தோன்றியது முதல் இப்படித்தான் இருந்ததா என்று கேட்கிறேன்.

உண்மையைப் பாருங்கள்

சரித்திரத்தைப் பாருங்கள்; ஆராய்ச்சியாளர் கூறுவதன் உண்மையைப் பாருங்கள் உலகிலேயே முதல் முதல் தோன்றிய நாடு தமிழ்நாடு என்றும், உலகிலேயே மனித வர்க்கம் தோன்றிய இடம் நம் தென்னாடு என்றும் கூறப்படவில்லையா? இந்த மாதிரிப் பூர்வீகப் பெருமைகளால், பழங்கதைகளால் நமக்கு ஆவது ஒன்றும் இல்லை என்றாலும், இப்படிப்பட்ட தமிழர்கள் ஏன் உலகில் இவ்வளவு கீழான நிலையிலும், இழிவான தன்மையிலும் இருக்கவேண்டும் என்று சிந்தித்துப் பார்க்கவேண்டாமா என்பதற்காகவே இவற்றைக் கூறினேன்.

தமிழன் தன்னை இந்தியன் என்று கருதியதால், தமிழ் நாட்டையும், தமிழர் வீரத்தையும், கலையையும் நாகரீகத்தையும் மறந்தான். தமிழன் தன்னை இந்து என்று கருதியதால், தனது மானத்தையும், ஞானத்தையும், பகுத்தறிவையும் உரிமையையும் இழந்தான்.

இப்போது, தமிழன் தன்னை இந்தியன் என்பதையும் இந்து. என்பதையும் மறப்பதாலேயே அக்கட்டுகளிலிருந்தும் கூட்டுகளிலிருந்தும் விடுபட்டு விலகுவதாலேயே தன்னை ஒரு மனிதன் என்றும், ஞானத்துக்கும்,வீரத்துக்கும், பகுத்தறிவுக்கும், மானத்துக்கும் உரிமை உடையவன் என்றும், இவைகளுக்கு ஒரு காலத்தில் உறைவிடமாக இருந்தவன் என்றும் உணருவானாவான்.

இந்த உணர்ச்சி ஆரியர்களுக்கு விரோதமாகக் காணப்படுவதில் ஆச்சரியமில்லை. அவர்களது கூலிகளில் பலர் இவ்வுணர்ச்சிகளைப் பரிகசிப்பவர்கள்போல் நடிப்பதில் அதிசயமில்லை. ஆனாலும் அதைப்
பற்றி நாம் கவலைப்படவேண்டியதில்லை. நான் கூறி வந்தவை களும், இப்போது. கூறுவனவற்றிற்கும் ஆதாரமாகச் சரித்திரமும், அரிய ஆராய்ச்சி ஞானம் பெற்ற சரித்திர ஆசிரியர்களும் கூறி இருப்பதில்
சிலவற்றை மாத்திரம் எடுத்துக் காட்டிவிட்டு, இதுபற்றிய என் பேச்சை முடிக்கிறேன். மற்றவர்களைப் பிறிதொரு சமயம் பார்த்துக் கொள்ளுகிறேன்.

ஆராய்ச்சியாளர் அபிப்பிராயம்

"தென்னிந்தியாவில் வசித்துவந்த ஆரியரல்லாதார்களையே குரங்குகள் என்றும், அசுரர்கள் என்றும், ராமாயணக் கதையில் எழுதி.வைக்கப்பட்டிருக்கிறது."

இது ரோமேஸ் சந்திரடட் C.I.E.C.S எழுதிய "புராதன இந்தியா" என்னும் புத்தகத்தில் 52வது பக்கத்தில் இருக்கிறது.

"திராவிடர்கள் தங்கள் மீது.. படையெடுத்து வந்த ஆரியர்களோடு கடும்போர் புரியவேண்டி இருந்தது. இந்த விஷயம் ரிக் வேதத்திலிருந்து அநேக சுலோகங்களாக இருக்கின்றன."

இது டாக்டர் ரோமேஷ் சந்திர மஜும்தார், எம்..ஏ., யின் "பூர்வீக இந்திய சரித்திரமும், நாகரீகமும்" என்னும் புத்தகத்தின் 22ஆவது பக்கத்தில் இருக்கிறது.

"ராமாயணக் கதை என்பது ஆரியர்கள் தென் இந்திய தஸ்யூக்கள் அல்லது திராவிடர்கள் மீது படையெடுத்து வெற்றி பெற்றதைச் சித்தரித்துக் காட்டுவதாகும்"

இது பி.சிம்பரம்பிள்ளை எழுதிய "திராவிடரும் ஆரியரும்" என்னும் புத்தகத்தின் 24 வது பக்கத்தில் இருக்கிறது.

"ராமாயணக் கதையானது புரோகித வகுப்பாருக்கும் யுத்த வீரர்களுக்கும் நடந்த போரைக் குறிப்பதாகும். ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென் இந்தியாவில்
உள்ளவர்களை ஆரியரால்லாதவர்களைக் குறிப்பதாகும்"

இது ரோமேஷ் சந்திரடட் எழுதிய "பண்டைய இந்தியாவின் நாகரீகம்" என்ற புத்தகத்தின் 139-141வ. பக்கங்களில் இருக்கிறது.

"தென்னிந்தியாவில் இருந்த மக்களேதான் ராமாயணத்தின் குரங்குகள் என்றும் அரக்கர்கள் என்றும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள்."

இது "சுவாமி விவேகானந்தர் அவர்களது சொற்பொழிவுகளும் கட்டுரைகளும்" என்ற புத்தகத்தில் "ராமாயணம்" என்னும் தலைப்பில் 587-589வ. பக்கங்களில் இருக்கின்றது.

"ஆரியன் என்கின்ற பதம் இந்தியாவின் புராதன குடி மக்களிடமிருந்து தங்களைப் பிரித்துக் காட்டுவதற்காக ஆரியர் ஏற்படுத்திக் கொண்ட பதம்"


தஸ்யூக்கள் என்பது இந்திய புராதன குடிமக்களுக்கு அவர்கள் (ஆரியர்கள்) கொடுத்த பெயராகும்
.
இது 1922 ஆம் வருஷம் பிரசுரிக்கப்பட்ட கேம்பிரிட்ஜ் "பழைய இந்தியாவின் சரித்திரம்" என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

பகைமைக்குக் காரணம்.

"ஆரியரல்லாதவர்களை ரிக் வேதத்தில் தாசர் (சூத்திரர்)கள் என்றும் தஸ்யூக்கள் அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

ஆரியருக்கும் ஆரியரல்லாதாருக்கும் இருஎது கொண்டிருந்த அடிப்படையான பகைமையைப் பற்றி ரிக் வேதத்தில் பல இடங்களில் காணலாம். இரு வகுப்பாருக்கும் இருந்த கலை வேற்றுமையும் அரசியல் வேற்றுமையுமே இந்தப் பகைமைக்குக் காரணமாகும்."

இது டாக்டர் ராதா குமுத் முகர்ஜீ, எம்.ஏ.,பிஎச்.டி., எழுதிய "இந்து நாகரீகம்" என்னும் புத்தகத்தில் 69வது பக்கத்தில் இருக்கிறது.

"ராமாயணக் கதையின் உட்பொருள் என்னவென்றால் ஆரிய நாகரீகத்திற்கும் ஆரியரல்லாத நாகரீகத்திற்கும் (அவற்றின் தலைவர்களான ராமன் - ராவணன் ஆகியவர்களால் ) நடத்தப்பட்ட
போராகும்."

இது ராதா குமுத் முக்கர்ஜீ எழுதிய "இந்து நாகரீகம்" என்னும் புத்தகத்தில் 141வது பக்கத்தில் இருக்கிறது.
"தமிழர்கள் என்பவர்கள் இந்தியாவின் தென்கிழக்கிலும் இலங்கையின் சில பாகத்திலும் வசிக்கும் ஆரியரல்லாத திராவிட மக்கள் ஆவார்கள். தமிழ் என்பது மேற்படியார்களால் பேசும். பாஷை".

இது சர்.ஜேம்ஸ் மர்ரே எழுதிய புதிய "இங்கிலீஷ் அகராதி"யின் பக்கம் 67 இல் இருக்கிறது.

"ஆரியர்கள் தங்கள் மொழியை ஆரியரல்லாதாருக்குள் புகுத்த முயற்சித்து முடியாமல் போனதால் ஆரியரல்லாதாருடைய பாஷைகளைக் கற்றுக் கொண்டு அவர்களது. நாகரீகத்தையும் பின்பற்ற வேண்டிவந்தன".

இது பண்டர்காரின் கட்டுரைகள், வால்யூம் 3, பக்க. 10இல் இருக்கிறது.

"தமிழர்கள் ஆரியர்களை வடவர், வடநாட்டார் என்று அழைர்தார்கள். ஏனெனில், ஆரியர்கள் வடக்கே இருந்து வந்தவர்களானதால்,"

இத் டாக்டர் கிருஷ்ணசாமி அய்யங்கார், எம்.ஏ.,பி.எச்.டி., அவர்கள் எழுதிய "தென் இந்தியாவும் இந்திய கலையும்" என்ற புத்தகத்தின் 3வது பக்கத்தில் இருக்கிறது.

"ராமாயணத்தில் தென்னிந்தியா (திராவிட தேசம்) தஸ்யூக்கள் என்ற ராட்சதர்களுக்குச் சொந்தமாக இருந்தது. இவர்கள் (தென் இந்தியர்கள்) வட இந்தியாவில் இருந்து வந்த ஆரியர்களைப் போலவே
நாகரீகமடைந்தவர்களாய் இருந்தார்கள்."

இது பி.டி.சீனிவாசய்யங்கார் எழுதிய "இந்திய சரித்திரம்" முதல் பாகம் என்னும் புத்தகத்தில் 10வது பக்கத்தில் இருக்கிறது.

"ராவிடர்களை ஆரியர்கள் வென்றுவிட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், கரடிகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்தே (திராவிடர்களிடமிருந்தே) பல நாகரீகங்களை இந்தப் பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்."

இது ஷோஷி சந்தர்டட் எழுதிய "இந்தியா அன்றும் இன்றும்" என்னும் புத்தகத்தின் 15-வது பக்கத்தில் இருக்கிறது.

அசுரர்கள் யார்?

"ஆரிய கடவுள்களாகிய இந்திரனையும் இதர கடவுள்களையும் பூசித்தவர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களும் தேவர்கள் என்று சொல்லிக் கொண்டார்கள். இந்த ஆரியக் கடவுள்கள் வணக்கத்தை எதிர்த்தவர்களை அசுரர்கள் என்று அழைத்தார்கள். இந்த இரு கூட்டத்தாருக்கும் விடாப் பகை இருந்து கொண்டே வந்தது".

இது ஏ.ஸி.தாஸ், எம்.ஏ.,பி.எல்., எழுதிய "ரிக் வேதகாலத்து இந்தியா" என்னும் புத்தகத்தில் 151-வது பக்கத்தில் இருக்கிறது.

"ஆரியர்கள் தங்களால் தோற்கடிக்கப்பட்ட எதிரிகளாகிய திராவிடர்களைத் தங்களுடைய புத்தகங்களில் திராவிடர்கள் தஸ்யூக்கள்

என்றும், தானவர்கள் என்றும், ராட்சதர்கள் என்றும் குறிப்பிட்டிருக் கிறார்கள்".

"ஆரியக் கவிகள் திராவிடர்கள் மீது கொண்டிருந்த வெறுப்பை இது காட்டுகிறது. ஏனெனில் ஆரியர்கள் திராவிட நாட்டில் சிறுகச் சிறுக நுழைந்து ஆடிக்கம் பெறுவதில் அடைந்த கஷ்டத்தினால் இப்படி
எழுதினார்கள்".

இது C.S.சீனிவாசாச்சாரி, M.A., & M.S. ராமசாமி அய்யங்கார்,M.A ஆகிய சரித்திரப் போதகர்கள் எழுதிய "இந்திய சரித்திரம் முதல் பாகம்" என்னும் புத்தகத்தில் "இந்து இந்தியா" என்னும் தலைப்பில்
16,17-வது பக்கங்களில் இருக்கிறது.

"ஆரியர்களில் சமஸ்கிருதம் பேசியவர்கள் மட்டும் இந்தியாவின் மேற்குக் கணவாய் வழியாக நுழைந்து வட இந்தியாவை அடைர்தார்கள். அங்கு தங்களைவிட முன்னேற்றமான திராவிடர்களைக் கண்டு அவர்களிடமிருந்து பல நாகரீகங்களைக் கற்றுக் கொண்டார்கள்".

இது ஏ.எ. வெல்ஸ் எழுதிய "உலகத்தின் சிறு சரித்திரம்" என்னும் புத்தகத்தின் 105ஆவது பக்கத்தில் இருக்கிறது.

"ஜாதிப் பிரிவுகள் நான்கில் அதாவது பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என்பவர்களில் முதல் மூன்று பிரிவினர்கள் ஆரிய சம்பந்தப்பட்டவர்கள். கடைசி வகுப்பார் (சூத்திரர்கள்) இந்தியாவின் புராதனக் குடிகள்".

இது "New Age Encyclopedia"(wiyuu ஏஜ் என்சைக்ளோபீடியா Vol.II (1925) பக்கம். - 273ல் இருக்கிறது.)

இராமாயணம் எதைக் காட்டுகிறது?

"இராமாயணம், தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் நூல்".

இது முன்பு கல்வி மந்திரியாய் இருந்த கனம் C.J.வர்க்கி, M.A., எழுதிய "இந்திய சரித்திர பாகுபாடு" என்னும் புத்ததகத்தின் 15-வது பக்கத்தில் இருக்கிறது.

சுருங்கக் கூறவேண்டுமானால், பிராமணர்கள் கல்வியைத் தங்களுக்கே சொந்தமாக ஆக்கிக்கொண்டு அந்த நிலைமையைத் துஷ்பிரயோகப்படுத்தித் தங்கள் இஷ்டம் போல் எல்லாம் தங்களுக்கு அனுகூலமான சகல விஷயங்களையும் உட்படுத்திக் கட்டுக்கதைகளை எழுதி வைத்துக் கொண்டார்கள். இந்தக் கற்பனைக் கதைகள் அனைத்தும் வேண்டுமென்றே கெட்ட எண்ணத்திடன் சாமர்த்திய மாகப் பிறரை அழுத்தி அடிமைப்படுத்தி தங்களுடைய நிலையை உயர்த்திக் கொள்வதற்காகவே எழுதப்பட்டவைகளாகும்".

இது "பார்ப்பன துவேஷி" ராமசாமியால் எழுதப்பட்டதல்ல. பிரபல சரித்திர ஆசிரியரான ஹென்றி பெரிட்ஜ் என்பவர் 1865இல் எழுதின புவிரிவான இந்திய சரித்திரம் முதற் பாகம்" என்னும் புத்தகத்தில் 15-வது பக்கத்தில் இருக்கிறது.

"விஷ்ணு என்கின்ற கடவுள் ஆரியக் கூட்ட.தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கருதப்பட்டது."

இது கி.பி. 1918இல் ஹாவெல் எழுதிய "இந்தியாவில் ஆரியர் ஆட்சியின் சரித்திரம்" என்னும் புத்தகத்தின் 32-வது பக்கத்தில் இருக்கிறது.

"பாரத ராமாயணங்கள் முதலிய இதிகாசங்களில் காட்டுமிராண்டிகளும், அசுரர்களும், ராட்சதர்களும், தஸ்யூக்களும் வசிக்கும் நெருக்கமான காடுகள் கொண்ட நாடு என்று குறிப்பிடப்பட்டிருப்பதெல்லாம் தென்னிந்தியாவை (திராவிட நாட்டை)ப் பற்றியேயாகும்."

இது ஜி.எச். ராபின்சன், சி.அ..ஈ. யால் எழுதின "இந்தியா" என்னும் புத்தகத்தின் 155வது. பக்கத்தில் இருக்கிறது.

வட இந்திய திராவிட கலை

"வட இந்தியாவில் இருந்த திராவிடக் கலை, நாகரீகம் முதலியவை யாவும் ஆரியர்களால் அழிக்கப்பட்டுவிட்டன. ஆனால் தென்னிந்தியாவில் அவ்விதம் நடக்கவில்லை."

இது தமிழ்ப் பேராசியர் கே.என்.சிவராஜ் பிள்ளை, பி.ஏ., எழுதிய "பண்டைத் தமிழர்களின் வரலாறு" என்னும் புத்தகத்தின் 11 12 4ஆம் பக்கத்தில் இருக்கிறது.

"பாரதத்தில் இடும்பி என்று ஒரு ஆரியரல்லாத பெண் மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதித்துவேஷத்தால் ராட்சஸி என்று எழுதி இருக்கிறான். ராட்சதர் என்கிற பயங்கர புரளி வார்த்தை வைதிகப் பார்ப்பனனின் மூளையில் தோன்றிய கற்பனையேயாகும்."

இது நாகேந்திரநாத்கோஷ், பி.ஏ., பி.எல்., எழுதிய "இந்திய ஆரியரின் இலக்கியமு கலையும்" என்ற புத்தகத்தின் 194ஆவது பக்கத்தில் இருக்கிறது.

"ராமாயணத்தில் குடிகாரர்கள் சுரர்கள் என்றும் குடியை வெறுத்தவர்களை அசுரர்கள் என்றும் பிரித்துக் கூறப்பட்டிருக்கிறது"

இது ஹென்றி ஸ்மித் வில்லியம், எல்.எல்.டி., எழுதிய "சரித்திரக்காரர்களின் உலக சரித்திரம்" வால்யும். 2இல் பக்கம் 521இல் இருக்கிறது.

"இந்தியாவின் தென்பாகத்திலுள்ள நாடுகளைப் போல 'பிராமணர்கள்' வெற்றியோடு வரும்போது ஆந்திரர், சேரர், சோழர்,பாண்டியர் ஆகிய நாடுகள் மிக்க நாகரீகமான நிலையில் இருப்பதைக் கண்டார்கள்."

இது வின்சென்ட் ஏ.ஸ்மித் ஆக்ஸ்போர்ட் எழுதிய "இந்திய சரித்திரம்" 14வது. பக்கத்தில் இருக்கிறது.

"இந்தியாவிலுள்ள ஆரியர்களிடம் மனிதனைக் கொன்று யாகம் செய்யும் வழக்கம் இருந்திருக்கிறதென்று நிச்சயமாகச் சொல்லலாம்."

இது இம்பீரியல் இந்தியன் கெஜட்டியர் 1909ஆம் வருஷத்திய பதிப்பு வால்யூம் 1இல் 405வது பக்கத்தில் இருக்கிறது.

ஆரியரல்லாதார் பட்ட பாடு

"ஆரியரல்லாத இந்நாட்டு பழங்குடி மக்கள் ஆரியர்களால் காட்டுக்கும் துரத்தப்பட்டார்கள். இதுவும் போதாதென்று அவர்களை ராட்சதர்கள், அசுரர்கள் என்றும் ஆரியர்களும் ஆரிய புரோகிதர்களும் நூல் எழுதி வைத்தார்கள். ஆரியரல்லாதார்களுக்கு இவர்கள் ஆதியில் இட்ட தஸ்யூ., ஆரிய எதிரி என்ற பெயர்கள்தான் நாளடைவில் பிசாசு, பூதம், ராட்சதன் பெயர்களாக மாறிவிட்டன".

இது சர்.வில்லியம் வில்சன் ஹண்டர் K.C.S.I.C.I.E., M.A., ஆக்ஸ்ன்,L.L.T., எழுதிய "இந்திய மக்களின் சரித்திரம்" என்னும். நூலின் 41வது பக்கத்தில் இருக்கிறது.

"ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் காட்டவும் எழுதப்பட்ட நூலாகும்"

இது பண்டித. டி.பொன்னம்பலம் பிள்ளையால் எழுதப்பட்ட "மலபார் குவார்ட்டர்லி ரிவ்யூ" என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

"நம்மைச் சுற்றி நாலு பக்கங்களிலும் தஸ்யூ.க் கூட்டத்தார் (திராவிடர்கள்) இருக்கிறார்கள். அவர்கள் யாகங்களைச் செய்வதில்லை, ஒன்றையுமே நம்புவதில்லை, அவர்களுடைய பழக்க வழக்கங்களே
வேறாக இருக்கின்றன. ஓ! இஎதிரனே அவர்களைக் கொல்லும் தாசர். வம்சத்தை அழித்து விடுவாயாக."

இது "ரிக் வேதம்" அதிகாரம் 10 சுலோகம். 22.......8 இல் இருக்கிறது.

"ஆரியர்களின் ஒழுக்க ஈனமான காரியங்களில் எல்லாம் சிறந்த காரியங்கள் மதுவருந்துவதும். சூதாடுவது.மாகும். ரிக் வேதத்தில் இதற்கு ஏராளமான ஆதாரங்கள் இருக்கின்றன."

இது ராகோசின் எழுதின "வேதகால இந்தியா" என்னும் புத்தகத்தில் இருக்கிறது.

"இந்திய அய்ரோப்பியர்களால் (அதாவது ஆரியர்களால்) தோற்கடிக்கப்பட்ட கறுப்பு. மனிதர்களை (திராவிடர்களை) தஸ்யூக்கள் என்றும் கொள்ளைக்காரர்கள் என்றும், அடிக்கடி பிசாசுகளாக மாறக் கூடியவர்கள் என்றும், வேத இலக்கியங்களில் கூறப்பட்டிருக்கின்றது".





இது பால்மாசின் அவர்கள் எழுதிய "புராதன இந்தியாவும் இந்தியாவின் நாகரிகமும்" என்ற புத்தகத்தில் 19வது பக்கத்தில் இருக்கிறது.

"மேற்கு திபேத்தையும் ஆப்கானிஸ்தானத்தையும் தாண்டி முதல் முதல் இந்தியாவிற்குள் வந்த ஆரியர்கள் சமஸ்கிருதத்தைப் போன்ற ஒரு பாஷையைப் பேசினார்கள். இந்தியாவிற்குள் ஆதியில்
நுழைந்த இவ்வெள்ளையர்கள் தங்கள் கொள்கைகள், பழக்க வழக்கங்கள், கவிதைகள், மத நம்பிக்கைகள் முதலியவைகளை அப்பாஷையிலேயே எழுதி வைத்துக் கொண்டார்கள்".

இது சர்.ஹென்றி ஜான்ஸ்ட்டன், ஜி.சி.எ..ஜி., கெ.சி.இ., 1913 இல் எழுதி.ய "இந்தியாவில் அன்னியர்கள்" என்ற புத்தகத்தின் 19வது. பக்கத்தில் இருக்கிறது.

நிச்சயம்

தோழர்களே! இந்த மாதிரியாகவே ஆரியர் வேறு, தமிழர். வேறு என்பதற்கும், இந்தியாவென்பதற்கும் தமிழ் நாட்டிற்கும் சம்பந்தமில்லை என்பதற்கும், ஆரியர். சமயத்திற்கும் மதத்திற்கும் அவர்களது. கடவுள்; வேதம், புராணம், இதிகாசம், ஸ்மிருதி, சாஸ்திரங்களுக்கும் அவர்களது பழக்க வழக்க நாகரீகம் ஆகியவைகளுக்கும் தமிழர்களுடைய சமயம், கலை, பழக்க வழக்க நாகரீகம் முதலியவற்றிற்கும் சம்பந்தமும், ஒற்றுமையும் இல்லை என்பதற்கும் ஆரியர்கள் தமிழ் மக்களாகிய திராவிட மக்களை இழித்து தாழ்த்தி அடக்கி ஆதிக்கம் செய்து வந்தார்கள், வருகிறார்கள் என்பதற்கும், தமிழர் பழக்க வழக்கங்கள் வீரமெல்லாம் ஆரியரால்
அழிக்கப்பட்டுவிட்டன என்பதற்கும் இனியும் இவை போன்ற ஆயிரக்கணக்கான ஆதாரங்களையும், ஆராய்ச்சியாளர் கருத்துக்களையும், சரித்திரச் சான்றுகளையும் ஏராளமாக எடுத்துக் காட்டக்கூடும்.
இவைகளை பொய் என்றோ, மாறுபடுத்தியோ, திருத்தியோ
கூறப்பட்டவை என்றும் சொல்லுவதற்கோ, மெய்ப்பிப்பதற்கோ நாளது.
வரை எந்த ஆராய்ச்சியாளரும் எந்தப் பார்ப்பனரும் முன் வந்தவர்கள்
அல்ல என்பதோடு நாம் மேலே எடுத்துக் காட்டிய அனேக
விஷயங்களை ஆதரிக்க, மெய்பிக்க இன்றும் ஆரிய
பார்ப்பனர்களாலேயே எழுதப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு பாடமாக
வைக்கப்பட்ட சரித்திர புத்தகங்கள் ஏராளமாய் இருக்கின்றனவென்று.,
அவைகள் இன்றும் முதல் பாரம் முதல் காலேஜ் வகுப்புகள் ஈறாக
பாடமாக வைக்கப்பட்டு பிள்ளைகள் படிப்பிக்கப்படுகிறார்கள் என்றும்.
துணிவோடு கூறுவேன். ஆனால் இவைகளை நான் கூறும்போது.
மாத்திரம்தான் நம். எதிரிகளுக்கு வகுப்புத் துவேஷமாயும், ஜாதி
.வேஷமாயும் காணப்படுவதுடன் நம் தமிழர்களுக்குக்கூட ஏதோ
வெறும் குற்றம் குறை கூறுபவனாகவும் காணப்படுகிறேன். அவர்கள்
நடுநிலைமையில் இருந்து ஆராராய்ந்து. பார்ப்பார்களேயானால் தங்கள்
தவறுதல்களை உணர்வார்கள் என்ற நம்பிக்கை நிச்சயம் எனக்கு உண்டு.

நான் ஏன் இவைகளை எடுத்துக் காட்டுகிறேன் என்பதை எனது
தமிழ் மக்கள் யோசித்துப் பார்க்க வேண்டும்.

நான் கூறுவதெல்லாம் இந்தியா, இந்துமதம், இந்தியர்கள்
என்பது நம் நாடும், நம் சமயமும்., நம் சமுகமும் அல்ல வென்பதற்கும்ர்.
ஆரியர் வேறு, தமிழர் வேறு இவ்விருவர்களுடைய நலனும்
லட்சியமும் வேறு வேறு என்பதற்கும் ஆகவே இவற்றை இவ்வளவு
வலியுறுத்திக் கூறுகிறேன். இவற்றை இன்று மாத்திரம் நான்
கூறவரவில்லை. 1926ஆம் வருஷம் முதல் "குடி அரசில்" வால்யூம்
வால்யூமாக எழுதி வந்திருக்கிறேன். மேடைகளிலும். கூறி
வந்தி`ருக்கிறேன்.

இந்த விஷயங்கள் தெளிவுபட்டு ஒரு நிலை ஏற்பட்டாலொழிய
தமிழனுக்கு விடுதலை இல்லை, உரிமை இல்லை, மானம் இல்லை
என்பதை உண்மையாக உணர்கிறேன். ஆதலாலேயே இவற்றைக்
கூர்ந்து. கவனிக்கும்படி உங்களை வேண்டுகிறேன்.

( தமிழ்நாட்டுச் சுற்றுப் பிராயணத்தில் திருச்சி, சேலம். முதலிய பல
இடங்களில் பெரியாருக்கு வரவேற்பும், பணமுடிப்பும் அளிக்கப்பட்ட
கூட்டங்களில், வரவேற்புகளுக்கும் பணமுடிப்புகளுக்கும் தந்தை பெரியார்
அளித்த பதில்களின் தொகுப்பு.)