தமிழ்ப் பணியாளர் - முனைவர் கு.கல்யாணசுந்தரம்




திரு. கு. கல்யாணசுந்தரம்


தமிழ் ‌டிஜிட்டல் ‌‌‌நூலக துறைக்கு பிள்ளையார் சு‌ழி ‌‌‌‌போட்டவர். இணைத்தில் புகழ் பெற்ற மதுரைத்திட்டத்தின் முன்னோ‌டி. சென்னை மாநகரில் ஆரம்பக் கல்வி முதல் கல்லூரி படிப்புவரை பயின்றவர். சென்னை லயோலா கல்லூரியில் இரசாயனத் துறையில் பி.எஸ்ஸி மற்றும் எம்.எஸ்ஸி பட்டப் படிப்பு மு‌டித்த பிறகு அ‌மெரிக்க ஐக்கிய நாட்டில் இந்தியானா மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகத்தில் இரசாயனத் துறையில் ஆராய்ச்சி மேற்க்கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர்.
அதைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் இங்கிலாந்தில் லண்டன் மாநகரில் மேல்நிலை ஆராய்ச்சியில் பங்கு ‌பெற்ற பின், 1979ல் தற்போது வசித்து வரும் ஸ்விஸ் நாட்டுக்குச் சென்றார். அங்குள்ள லுசான் நகர் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்தில் முதுநிலை விரிவாளராகவும் ஆராய்ச்சியாளராகவும் தற்‌போது பணிபுரிந்து வருகிறார்.


பாஷா இணையத் தளத்திற்காக முனைவர் கு.கல்யாணசுந்தரத்தின் வெற்றி ‌‌‌உரைகளை தொகுத்த ‌போது ‌‌‌...


இணையத்தில் நூல்களை தொகுக்கும் ஆர்வம் தங்களுக்கு எப்படி உருவானது?


பத்து ஆண்டுகளுக்கு முன் மக்கின்டாஷ், வின்டோஸ் கணினிகளில் தமிழிலேயே நேரிடையாக உள்ளிட மயிலை என்னும் தமிழ் எழுத்துரு தயாரித்து அதை பல நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதை எப்படி பயன்படுத்தலாம் என்பதை காண்பிக்க திருக்குறள் 1330 குறள்களை உள்ளிட்டு மின்அஞ்சல் மூலம் உலகில் பல பகுதிகளில் உள்ளவர்களுக்கு அனுப்பினேன்.அதை தொடர்ந்து பாரதியார் பாடல்கள், அவ்வையார் பாடல்கள் போன்றவற்றை உள்ளிட்டு அனுப்பினேன்.


1997 ம் ஆண்டு பாலா பிள்ளை ஆரம்பித்து நடத்தும் தமிழ்.நெட் என்னும் மின்னஞ்சல் குழுவில் ‌இணைந்‌தேன். இக்குழு முறையில் தழிழ் இலக்கியங்களை உலகில் உள்ளவர்கள் ஒன்றுகூடி தயாரித்து பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஒரு கேள்வி எழுந்தது.


அதை தொடர்ந்து 1998ம ஆண்டு பொங்கல் திருநாளன்று மதுரைத் தமிழ் இலக்கிய மின்பதிப்பு தொகுப்புத் திட்டம் என்ற ஒரு தன்னார்வு‌ திட்டத்தை ஆரம்பித்து நடத்த ஆரம்பித்தோம்.


நூல்கள் காகிதப்பதிப்பு, இணையப்பதிப்பு வெற்றி தோல்விகள் என்ன?


காகிகப் பதிப்புக்கு தேவையான அச்சுயந்திரங்கள் 19-ம் நூற்றாண்டிலேயே இருந்த போதிலும், பாரதியார் போன்றவர்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பயன்படுத்தக்கூடும் என்ற ஒரு அச்சத்தினால் தமிழ் அச்சுயந்திரங்கள் 20-ம் நூற்றாண்டின் பின்பாதி வரை அதிகமாக பயன்படுத்தப் படவில்லை. தமிழ் நூல்கள் சங்ககால நூல்கள் முதல் ஆயிரக் கணக்கி்ல் இருந்தபோதிலும் பெரும் பாலானவை புத்தக வடிவில் அதிக அளவில் அச்சிடப்படவில்லை.


அதோடு மட்டுமில்லாமல், 20ம் நூற்றாண்டின் பின் பகுதியில் புதினங்கள் பெருமளவில் வந்து பொது மக்களை கவர்ந்தது.


இதனால் தமிழ் இலக்கிய நூல்கள் காகிதப்பதிப்பாக வருவது தற்காலத்தில் பெருமளவு குறைந்துவிட்டது. இணையத்தில் இந்திய மொழிகளில் தமிழ் ஒரு முக்கிய இடத்தைப் ‌பெற்றுள்ளது. இணையத்தில் மின்னஞ்சல் மடலாடற்குழு மூலம் தகவல் ‌‌‌தொடர்பு, கருத்துப் பறிமாற்றம் செய்வதில் தமிழ் முன்னோடியாக உள்ளது.


அதேபோல் இணைய தளங்கள் எண்ணிக்கைகளிலும் , பிளாக் தளங்கள் மூலம் கருத்தைப் பறிமாற்றம் செய்வதில் தமிழ் ‌‌‌மொழி இந்திய மொழிகளிலே முதலிடம் ‌பெற்றுள்ளது.இணையம் வழியே விநியோகிக்கப் படும் தமிழ் நூல்களின் மின்பதிப்புகள் எண்ணிக்கை மிகக் குறைவானதே. தமிழ்நாட்டில் உள்ள பல தமிழ்நூல் பதிப்பாளர்கள் மின்பதிப்புகள் காகிதப் பதிப்புகள் விற்பனையை ெபருமளவில் பாதிக்கும் என்ற ஒரு தவறான கருத்தைக் கொண்டுள்ளார்கள்.


மின்பதிப்புகள் இணையம் வழியாக உலகில் பல நாட்டில் உள்ள தமிழர்கள் தமிழ் நூல்களைப் பற்றி முதன்முறையாக தெரிந்துகொள்ள வாய்ப்பளிக்கிறது.மதுரைத் திட்டம் போன்றவை காப்புரிமை காரணமாக பழங்கால தமிழ்நூல்களின் மூல செய்யுள்கள்/பாடல்களை மட்டுமே மின்பதிப்பாக வெளியிடுகின்றன. இந்நூல்களின் உரைகளை காகிதப்பதிப்பு மூலமே முழுமையாக படித்து ‌தெரிந்து கொள்ளமுடியும்.


தங்களுடைய மதுரை திட்டத்தின் பணிகள், இலக்கு ஆகியவற்றை விவரிக்கவும்.


மதுரைத் திட்டம் என்பது தமிழர்களும் தமிழ்மொழிமேல் பற்றுள்ள மேலைநாட்டவரும் அவரவர் தங்களது கணினி கொண்டு கிடைக்கும் நேரங்களில் ஒன்றுகூடி தமிழ் இலக்கியங்களை உள்ளிட்டு, பிழைதிருத்தி பிறகு இம்மின்பதிப்புகளை இணையம் வழியாக உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் இலவசமாக இறக்கிக்கொள்ள வசதி செய்வதே. www.projectmadurai.org, இத்திட்டத்தில் இன்றுவரை 300க்கு மேற்பட்ட தமிழ் நூல்களை இலவச மின்பதிப்புகளாக வெளியிட்டுள்ளது.


குறைவான விற்பனை காரணமாக பெரும்பான தமிழ்நூல்கள் காகிதப் பதிப்பாக வெளிவராமல் இன்றும் ஓலை வடிவிலேயே இருக்கின்றன.யாழ்ப்பாண நூல் நிலையம் தீயில் எரிந்து போன பொழுது ஈழத் தமிழர் படைத்த தமிழ் நூல்கள் அனைத்தும அழிந்துவிட்டன. பெரும்பாலான ஈழத் தமிழர்கள் நாடு புலர்ந்து வெளிநாடுகளில் வாழ்வதால் ஈழத் தமிழர் இலக்கியம் சிதைந்த போகக்கூடிய நிலையில் உள்ளது.


பணவசதி குறைவு காரணமாக தமிழ்நாட்டு நூலகங்களில் நூல்களும் ஒலைச்சுவடிகளும மோசமான நிலையில் காக்கப்பட்டு வருகின்றது. இன்னும் 50 ஆண்டுகள் அவை அனைத்தும் செல்லரித்து பாழடையும் நிலையில் உள்ளது.


மதுரைத்திட்டத்தின் இலக்கு காலம்,நாடு,மதம்/சமயம் போன்ற எந்தஒரு வேறுபாடின்றி, பல்விதமான தமிழ இலக்கியங்களை மின்வடிவத்தில் உள்ளிட்டு,உலகெங்கும் உள்ள தமிழர்களுக்கும் தமிழ் மொழிமேல் பற்றுளர்களுக்கும் அடையச் செய்வதே ஆகும்.


தமிழ் தகவல் தொழிற்நுட்பம் எந்த அளவிற்கு பின்தங்கியுள்ளது?


நீங்கள் இதில் எதிர்பார்க்கும் வளர்ச்சிகள் என்னென்ன?


உலகில் பல லட்சக்கணக்கான தமிழர்கள் கிட்டத்தட்ட பத்தாண்டுகளாக கணினியில் பல விதமான தொகுப்புகளை தயாரித்து இணையம் வழி பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். ஆனால் ஆங்கில மொழியில் உள்ளதுபோல் அனைவரும் ஒரு தகுதரம் கொண்டு தயாரிக்கப்பட்ட எழுத்துருக்களையோ அல்லது மென்பொருள்களையோ பயன்படுத்தும் நிலையில் இல்லை.முன்பு கூறியது போல் இணையத்தில் தமிழ் மொழி தகவல் தொடர்பு. கருத்துப் பறிமாற்றம், இணைய தளங்கள எண்ணிக்கை போன்றவற்றில் முதலிடம் வகிக்கிறது.


ஆனால் அவை அனைத்தும் தகுதரங்களை பயன்படுத்தாததால் இவற்றின் பயன் ‌பெருமளவில் பாமர மக்களை அடையாமல் இருக்கிறது. இன்றும் பலர் பாமினி போன்ற ஒருமொழி 8-பிட் எழுத்துருக்களை பயன்படுத்துகின்றனர். பன்மொழி முறையில் அமைக்கப்பட்ட யூனிகோடு தமிழர்களிடையே இன்றும் முழுமையாக ஏற்கப்படவில்லை. இந்நிலை மாறவேண்டும். மாறினால் தான் கணினியில் தமிழ் பிற தொழில்நுட்ப முன்னேற்றங்களை உள்ளிட்ட வாய்ப்புகளை அதிகரிக்கும்.


உத்தமம் அமைப்பு பற்றியும் அதில் தங்களது பங்கு என்ன என்பது பற்றியும் கூறமுடியுமா?


உத்தமம் என்று அைழக்கப்படும் “உலகத் தகவல் தொழில்நுட்ப மன்ற” அமைப்பு www.infitt.org ஆரம்பிக்கப்பட்டு ஆறு ஆண்டுகளாகின்றன.உத்தமத்தின் குறிக்கோள்கள் உலகெங்கிலும் உள்ள தமிழ் ெமன்பொறி தயாரிப்பாளர்களும் கணினியில் தமிழைப் பயன்படுத்துவர்களுக்கும் இன்றியமையாத தகுதரங்கள் வளர்ப்புக்கு வசதி ‌செய்து தருவதே.


இதற்காக மின்னஞ்சல் குழு வசதி ‌செய்துகொடுப்பதோடு ஆண்டுதோறும் இவர்கள் ஒன்றுகூடி நேரிடையாக ‌கருத்துப்பறிமாற்றம் ‌செய்ய வசதியாக தமிழ் இ‌ணைய மாநாடுகளை உலகில் வேறுவேறு மாநகர்களில் நடத்திவருகிறது. சென்னை, சிங்கப்பூர், கோலாலம்பூர் (மலேசியா), சான் பிரான்சிஸ்கோ (கலிபோர்னியா, அமெரிக்கா) போன்ற நகர்களில் நடை‌பெற்ற தமிழ் இணைய மாநாடுகளில் தமிழர்கள் கலந்துகொண்டு பயனடைந்துளளார்கள்.


ஆரம்ப காலத்திலிருந்து உத்தமத்தின் நிர்வாகக் குழுவில் பங்குகொண்டு வருகிறேன். தமிழ் இணைய மாநாடுகளுக்கு கருத்தரங்கு அமைப்புக்குழு தலைவராகப் பணியாற்றியுள்ளேன்.தற்போது உத்தமத்தின் நிர்வாகக்குழு தலைவராகப் ‌பொறுப்பேற்றுள்ளேன்.


தமிழ் அறிவியல் உலகில் நீங்கள் சாதிக்க விரும்புவது என்ன? தங்கள் சொந்த இலக்கு என்ன?


ஆரம்பத்தில் கூறியதுபோல இரசாயனத் துறையில் பல்கலைக்கழக அளவில் கல்வி கற்பிப்பதும் இரசாயனத் துறையில் ஆராய்ச்சியில் பங்கு‌‌பெறுவதுமே எனது முழுநேர முயற்சிகள். இருப்பினும் கடந்த பத்து ஆண்டுகளுக்குமேல் என்னால் முடிந்தளவு கணினி, இணைய வழியில் தமிழ் ‌மொழி வளர, உலகெங்கிலும் உள்ள தமிழர்களை சென்றுடைய என்னால் முடிந்ததை செய்து வருகிறேன். மதுரைத் திட்டத்தில் பங்குபெறுவது மனதிற்கு பெருமளவில் திருப்தியை கொடுத்துவருகிறது. தமிழ் இலக்கிய நூல்களின் ‌மொத்த எண்ணிக்கைப் பார்த்தால் இதுவரை 300 முக்கிய நூல்களுக்கு மின்பதிப்பு தயாரிப்பது ஒரு சிறு துளியே.


பாதுகாக்கப்பட வேண்டிய நூல்கள் ஆயிரக்கணக்கில் உள்ளன. குறிப்பபாக காகிதவடிவ புத்தகமாக வராமலேயே மடிந்துகொண்டிருக்கும் நூல்கள் பல ஆயிரக்கணக்கில் உள்ளன. கணினியில் ‌தொழில் நுட்ப முன்னேற்றங்கள் தமிழ் மொழியில் விரைவில் பெற உத்தமம் போன்ற அைமப்புகள் இன்றியமையாதவை என்பது எனது தாழ்மையான கருத்து. அதனால் உத்தமம் மேலும் விரிவடைந்து உலகளவில் ஒரு பெருமைப்படக் கூடிய அமைப்பாக ஆவேண்டும் என்பது எனது அவா. அதற்கு என்னால் முடிந்த அளவு பணி ‌செய்வேன்.


தமிழ் மரபு அறக்கட்டளை www.tamilheritage.org முனைவர் கண்ணன் தலைமையில் தமிழரது கலாசாரம் சம்பந்தப்பட்டவைகளை பல்லூடக மின்வடிவில் பாதுகாக்க முயன்றுவருகிறது. இதிலும் இயக்கத்தின் துணைதலைவராக என்னால் முடிந்த உதவிகளை ெசய்துவருகிறேன்.


பாஷா இந்தியா வாசகர்களூக்கு வாழ்த்துகள்.

நாட்டார் வழக்காற்றியல் வழி தமிழர் பண்பாட்டின் அடையாளங்கள் -- முகில்

பண்பாடு என்ற சொல் விரிந்த பொருளுடையது. பல அறிஞர்கள் இதற்கு பல்வேறு விளக்கங்கள் வழங்கி செழுமைப் படுத்தியுள்ளனர்.ஒரு குறிப்பிட்ட பகுதி மக்கள் ஒரே சூழலில் தொடர்ந்து வாழ்ந்ததின் விளைவாய் கற்றுக் கொண்ட மொழி,கலை, இலக்கியம், அறிவு, சிந்திக்கும் முறை, பழக்க வழக்கங்கள், மதிப்பீடுகள் உள்ளிட்ட அனைத்தும் பண்பாடு என்கின்றனர். உணவு, உடை,திருமணம் செய்கிற முறை, இறந்தவர்களை அடக்கம் செய்யும் சடங்கு, ருந்தோம்பல், குழந்தை வளர்ப்பு போன்றவையும் இவற்றில் அடங்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், பண்பாட்டின் வரையறைக்குள் வராத எதுவும் வாழ்வில் இல்லையென்று கூறலாம்.
பண்பாடுகளை வெகுஜனப் பண்பாடு, செவ்வியல் பண்பாடு, மற்றும் நாட்டார்பண்பாடு என்று பிரித்துப் பார்க்கிற முறைமை ஆய்வாளர்களால்முன்வைக்கப்படுகிறது. ஒரே பண்பாடுள்ள மக்கள் குழுவை நாட்டார் என்றுஅழைக்கிறார்கள். இவர்களிடம் புழங்குகிற அல்லது புழங்கிய பாடல்கள், நிகழ் கலைகள், வாய்மொழி இலக்கியங்கள், பழமொழிகள், சொலவடைகள், நாட்டார் தெய்வங்கள், சடங்குகள் போன்றவற்றை உற்று நோக்குவதன் மூலம் தமிழர் வாழ்வியலின் அடிப்படை அடையாளங்கள் சிலவற்றையும் நம்மால் கண்டு கொள்ள முடியும். 'ஒடுக்கப்பட்டவர்களின் கூக்குரல்' என்று அழைக்கப்படும் வாய்மொழி இலக்கியங்களில் மக்களின் ஏக்கங்கள்,எதிர்பார்ப்புகள், கோபங்கள்... எல்லாம் பட்டுத் தெறிக்கின்றன.


பத்துகாணி நஞ்ச புஞ்ச இங்க இருக்க
பண்ருட்டிக்கி போனானாம் ஒண்ணுக்கிருக்க

வாய்த்திருக்கிற சூழலில் வாழத் தெரிய வேண்டும். அதை விட்டுவிட்டு வேறுஇடம் போவது ஏற்புடையதல்ல என்பதைக் கிண்டலாகச் சொல்கிற வாய்மொழி இலக்கியம்இது.

கூரையேறி கோழி பிடிக்கத் தெரியாதவன்
வானமேறி வைகுந்தம் போனானாம்.

அறுக்க மாட்டாதவன் இடுப்புல
அம்பத்தெட்டு அருவாளாம்

புள்ள தெரத்த பேலவுட்டுப் பாத்தா
புல்ல புடிச்சிகிட்டு தர்ருபுர்ருங்குதாம்


போன்ற சொலவடைகளும் இதே மதிப்பீட்டை வெவ்வேறு வார்த்தைகளில் பதிவுசெய்துள்ளன. காலம்காலமாய் சொல்லப்படுவதைப் பழமொழி என்கிறார்கள்.

போன்ற சொலவடைகளும் இதே மதிப்பீட்டை வெவ்வேறு வார்த்தைகளில் பதிவுசெய்துள்ளன. காலம் காலமாய் சொல்லப் படுவதைப் பழமொழி என்கிறார்கள்.

இது எல்லோருக்கும் தெரிந்த பழமொழி. வளரும் வயதிலேயே நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் அது காலத்துக்கும் நின்று நிலைக்கும் என்ற எதிர்பார்ப்பு இதில் வெளிப்படுகிறது.

நடு ஏரியில சண்ட
வெலக்கப் போன வெறா மீனுக்கு
ஒடஞ்சி போச்சாம் மண்ட

சம்மந்தமில்லாதவற்றில் தலையிட்டால் கேடு வந்து சேரும் என்பதை அழகாகச் சொல்கிறது இந்தச் சொலவடை.

தாலாட்டுப் பாடல், ஒப்பாரிப் பாடல், நலுங்குப் பாடல், நடவுப் பாடல், விளையாட்டுப் பாடல், வண்டிக்காரன் பாடல், கும்மிப் பாடல், ஒயில் பாடல்,வாழ்த்துப் பாடல், பிரச்சனைப் பாடல்... இப்படி பலவகைப் பாடல்கள் இருக்கின்றன.

கொம்பூதிக் கொட்டடிச்சி குனிஞ்சி கும்மியடிப்போம்
கொலவ போட்டு பாட்டுப் பாடி ஒயிலாட்டம் நடிப்போம்.
நம்மூரு அய்யனாருக்கு அர்ச்சன பண்ணப் போவோம்
எல்லா பேரும் நல்லாருக்க ஏகவிரதம் இருப்போம்


ஒயில் பாடலில் மகிழ்ச்சி மட்டும் பொங்க வில்லை; எல்லோரும் நல்லாயிருக்க வேண்டுமென்ற ஆசையும் பொங்கி வழிகிறது. நாட்டார் கலைகளின் சிறப்புகளில் ஒன்று கூட்டாக நிகழ்த்தப் படுவதாகும். அனைத்துத் தரப்பு மக்களின் அபிலாஷைகளை அனைவரும் புரிந்து கொள்ளும் பாங்கைக் கீழ்க்கண்ட கும்மிப்பாடலில் காணலாம்:


கத்தரிக்கா அண்ணாவே
கூடையில அண்ணாவே
கொண்டுவந்தேன் அண்ணாவே
ஓம்பந்தலுக்கு அண்ணாவே
எனக்குன்னுதான் அண்ணாவே
பொறந்த பொண்ண அண்ணாவே
எதிராளிக்கி அண்ணாவே,
நீதரலாமோ அண்ணாவே,
நீ தாரும் நல்ல அண்ணாவே,
பணமும் சரி அண்ணாவே
ஏந்தலகடத்தான் அண்ணா
வேகல்லுஞ்சரி அண்ணாவே
எண்ண கொடம் அண்ணாவே
றான் ரெண்டெடுத்து அண்ணாவே
எல்லையில அண்ணாவே
நான் போட்டுடைப்பேன் அண்ணாவே
ஓடையில ஏம்மாமா,
நான் அறுப்பறுத்து ஏம்மாமா
ஒழுங்கியில ஏம்மாமமா,
நான் கட்டு கட்டி ஏம்மாமா
கட்டு கட்டி ஏம்மாமா,
நான் தூக்கையிலே ஏம்மாமா
கண்ண கண்ண ஏம்மாமா,
நீ காட்டுறியே ஏம்மாமா


ஒரு பெண் தன் மகனுக்குப் பெண் கொடுக்காத தன் அண்ணன் மீதுள்ள வருத்தத்தைப்பாடுகிறாள். இன்னொரு பெண் தன் மாமன் மீதுள்ள காதலைப் பாடுகிறாள்.இரண்டுசெய்திகளையும் பார பட்சமின்றி கும்மியடிக்கும் பெண்கள் பகிர்ந்துகொள்கின்றனர்.
'ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டவர் வருவதில்லை மாநிலத்தில்'என்றொரு பழைய பாடல் உண்டு.அழுவதால் இழந்தது எதுவும் திரும்ப வராது.ஆனால் இழப்பினால் ஏற்படும் துயரத்திற்கான மிகப்பெரிய வடிகால் அழுகையாகத் தான் இருக்கிறது.தமிழில் உள்ள ஒப்பாரிப் பாடல்கள்,துயரத்தோடுதமிழர் வாழ்வு சார்ந்த செறிவான மதிப்பீடுகளை இனங்காட்டுகின்றன. இறந்ததாயின் முகத்தைக் காண மகள் ஓடோடி வருகிறாள். அவள் வருவதற்குள் பிணத்தைஎடுத்து விடுகிறார்கள். இதையறிந்து மகள் கதறியழும் ஒப்பாரிப்பாடல்:

தங்க அரிசி கொண்டு
தனியா ரயிலேறி
தங்க மக வரும் வரைக்கும்
சவமிருந்தால் ஆகாதோ
பொன்னு அரிசி கொண்டு
புதுசா ரயிலேறி
பொன்னுமக வரும் வரைக்கும்
பொணமிருந்தால் ஆகாதோ


பிறந்த பெண் வரும் வரை இறந்தவர்களை இடுகாட்டுக்கு எடுத்துப் போகக் கூடாது என்று இன்றைக்கும் வலியுறுத்தப் படுவதைக் காணலாம். அது பிறந்த பெண்ணுக்கு இந்த சமூகம் தரும் மரியாதையின் அடையாளம். பிறந்து வளர்ந்த வீட்டை விட்டு, றங்காலிலிருந்து பிடுங்கி நட்ட பயிரைப் போல் புருஷன் வீட்டுக்குப் போன பெண்ணுக்கு உயிர்ப்பின் தொடர்ச்சியாக மிச்சமிருப்பது தாயும் தந்தையும். ஆகவே அவர்களது மரணம் ஈடுசெய்ய முடியாத வெற்றிடத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதை இட்டு நிரப்ப முடியாத இயலாமையின் வெளிப்பாடாகத்தான் பிறந்த பெண் தனது ஒப்பாரியில் உலகத்து சோகங்களை யெல்லாம் அள்ளிக் கொண்டு வந்து கொட்டுகிறாள்.

கண்ணுக்கெதிரே நடக்கும் அநியாயத்தைக் கண்டு நேரடியாகவும் மறைமுகமாகவும்கோபப்படுவதும் கொதித்தெழுவதும் தமிழ் வாழ்வின் வீரியமிக்க அடையாளங்களில்ஒன்றாகும்.


பத்துமூட அரிசி வந்தா பாதிதானே போடுறாக
அஞ்சி மூட அரிசியத்தான் ராசாக்கா - மக்களுக்கு
அடையாளமே காட்டலியே அய்யாக்கா.

அதிகாரிங் கமிசன்தானே கமிசந்தானே
நம்ம ஊரு கணக்கப்புள்ளையுங்
கமிசன்தானே ராசாக்கா மக்களுக்கு
கடமையோடு ஒழைப்பாரில்ல அய்யாக்கா.
முயற்சியெடுக்க வேணும் முடிவு பண்ணி பாக்க வேணும்
மக்களெல்லாம் ஒண்ணா சேந்து ராசாக்கா - மந்திரிகிட்ட
மனுகொடுத்து பேச வேணும் அய்யாக்கா


திருநெல்வேலி மாவட்டத்தில் பால்-வண்-ணத் தேவருடைய மகள் பாலம்மாளின் அழகைப் பார்த்து மயங்கி அவளைத் தனது கோட்டைக்குத் தூக்கிவரச் சொல்கிறார், பாளையக்காரர். பதறிப்போன பாலம்மாளின் தந்தையும் சகோதரர்களும் பாளையக்காரரால் பாலம்மாள் சூறையாடப் படுவதை அனுமதிக்கக் கூடாது என்றுவீட்டுக்குள்ளேயே ஒரு குழி தோண்டி பாலம்மாளை உயிரோடு புதைத்து விட்டார்கள். அவளை இன்றைக்கும் மக்கள் பாலம்மாள் தெய்வம் என்று வழி படுகிறார்கள். பெண்களின் ஒழுக்கத்தை உயர்த்திப் பிடிக்கிற பண்பாட்டின் அடையாளம் இது. மகாபாரதத்தின் சரடாய் புதிதுபுதிதாய் உருவான அல்லி அரசாணி, ஆரவல்லி சூரவல்லி, பவளக்கொடி போன்ற ஏராளமான கிளைக் கதைகள் பெண்களின் ஆளுமையை உயர்த்திப் பிடிக்கின்றன.


அநியாயத்தை எதிர்த்தவர்களை மக்களுக்காகப் போராடி உயிர் நீத்தவர்களை வீரமரணமடைந்தவர் களை,மரபு மீறிய காதலில் ஈடுபட்டதால் கொலையுண்டவர்களை சிறுதெய்வங்களாக மக்கள் வழி படுகிறார்கள். பெருந் தெய்வங்களை விட சிறு தெய்வங்களோடு தான் தமிழ் மக்கள் வாழ்வு பின்னிப் பிணைந் திருக்கிறது. சிறு தெய்வங்களை நன்மை செய் தெய்வங்ளென்றும் தீமைசெய் தெய்வங் களென்றும் மக்கள் தரம் பிரித்து வைத்திருக்கிறார்கள்


தங்கள் வாழ்வை ஒத்த தன்மைகளோடுதான் தங்கள் தெய்வங்களையும் மக்கள் உருவாக்கி யிருக்கிறார்கள். அதனால்தான் சிறு தெய்வங்களுக்கு கறி, சாராயம், சுருட்டு போன்றவைகள் படைக்கப் படுகின்றன. இப்படிப்பட்ட பண்பாட்டுக் கூறுகள் மக்களிடம் ஊடாடியிருப்பதால்தான் தெய்வங்களை வணங்குகிற அதேநேரத்தில் நடைமுறை வாழ்வுக்கு உதவாத தெய்வங்களை கிண்டலடிக்கிற பாடல்களையும் காணமுடிகிறது.உதாரணத்திற்கு ஒரு பாடல்,


நூத்தப் பத்த செலவு செஞ்சி
நூதனமா குதர செஞ்சி
தூக்கி தூக்கி தோளசந்து போனோமே - சாமி
தொரத்தியே சவாரி செய்ய காணோமே
காணி மண்ணு கல்லு மரம்
தன்னால் ஒரு பொம்ம செஞ்சி
கட்டடமும் வீடும் கட்டி வச்சோமே - ஒரு
காலணாவும் வாடகையக் காணோமே
கண்ட கண்ட இடமெல்லாம்
கையெடுத்து கும்புட்டாலும்
கல்லுசாமி புள்ள தருமா - ராத்திரிக்கி
கணவனாக மாறி வருமா


உழைப்புதான் போற்றப்பட வேண்டிய உன்னதமான விஷயம் என்பது நம் உயர்ந்தமதிப்பீடுகளில் ஒன்று. இதை அழகாகச் சொல்லுகிற பாடல் ஒன்றைக் கீழேபாருங்கள்:


மழ வருது மழ வருது
நெல்ல வாருங்க
முக்காப்படி அரிசி போட்டு
முறுக்கச் சுடுங்க
ஏறு ஓட்டுற மாமனுக்கு
எண்ணி வையிங்க
சும்மாருக்குற மாமனுக்கு
சூடு வையிங்க


சடங்குகளின் தொகுப்புதான் மதம் என்பார்கள். ஆனால் மதம் சாராதகணக்கிலடங்கா சடங்குகள் தமிழ் மக்கள் வாழ்வில் இருக்கின்றன. இவற்றில் சிலகாலமாற்றத்தால் வீரியம் இழந்துள்ளன. புதிய சடங்குகளும் சிலஉருவாகியுள்ளன. ஆனால் எல்லா சடங்குகளிலும் மரபும் மூடநம்பிக்கையும்பின்னிப் பிணைந்துள்ளன.

நன்றி : கீற்று
நன்றி : புத்தகம் பேசுது

கோவை மாநகரில் தொழில் நுட்ப பூங்கா!















தாய்மையை விலை பேசும் உலகமயம்

"புதிய வேலைவாய்ப்பு;
`
இது, நீங்கள் இதுவரை அறிந்திராத புத்தம் புதிய வேலை வாய்ப்பு. இது ஒரு புதிய உற்பத்தித் துறை. இங்கு பணியாற்ற உயர்கல்வியோ பயிற்சியோ அவசியமில்லை. இளம் பெண்கள் ஓராண்டு காலத்தில் ரூ. 50,000 முதல் ரூ. 2 இலட்சம் வரை சம்பாதிக்கலாம்."
`
இப்படியொரு விளம்பரத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பகிரங்கமாக அறைகூவி அழைக்கிறது. குஜராத்தின் மருத்துவ செயலாளர், இது புதிய வகைப்பட்ட தொழில் வேலை வாய்ப்பு என்றும், அனைவருக்கும் எப்போதுமே ஆதாயம் தரும் சூழல் நிலவுவதாகவும், எல்லா மாநிலங்களுக்கும் இதனைப் பரவலாக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார். பெருநகரங்களில் இப்புதிய வேலை வாய்ப்பைப் பயன் படுத்திக் கொள்ளுமாறு நாளேடுகளில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. குறிப்பாக, மும்பை மற்றும் குஜராத்தின் ஆனந்த் நகரிலுள்ள பல தனியார் மருத்துவ மனைகள் கிராமப் புறங்களுக்குச் சென்று இப்புதிய வேலைக்காக ஆட்களைத் திரட்டத் தொடங்கிவிட்டன.
`
அது என்ன புதிய வேலை வாய்ப்பு? தாய்மையையே வணிக மயமாக்கும் வாடகைத் தாய் என்பதுதான் இப்புதிய வேலைவாய்ப்பு!
`
குழந்தைப் பேறு இல்லாத வெளிநாட்டுத் தம்பதியினருக்காக, ஒரு இந்தியப் பெண் கருவைச் சுமந்து, பத்து மாதங்களில் குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, அதற்காக கணிசமான தொகையை வாங்கிக் கொள்வது தான் வாடகைத் தாய் எனும் புதிய வேலைவாய்ப்பு.
`
"இன் விட்ரோ கருத்தரிப்புமுறை'' (IVF) எனும் புதிய தொழில் நுட்பம் மருத்துவ அறிவியலில் வளர்ச்சியடைந்துள்ளது. ஒரு பெண்ணின் கரு முட்டையையும், ஒரு ஆணின் விந்தணுவையும் தனித்தனியே சேகரித்து, அவற்றை உரிய முறையில் சோதனைக் குழாயில் கருத்தரிக்கச் செய்து, பின்னர் அக்கருவை பெண்ணின் கருப்பையிலிட்டு வளர்த்து தாய்மையடையச் செய்வதே இப்புதிய தொழில் நுட்ப முறையாகும். குழந்தைகள் இல்லாத உள்நாட்டு வெளிநாட்டுத் தம்பதிகளில், மனைவிக்கு தாய்மை யடைய உடற்கூறு ரீதியாக வாய்ப்பில்லாத நிலையில், கணவன் தனது விந்தணுவைக் கொடுத்து வேறொரு பெண் மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இத்தொழில் நுட்பத்தால் கிடைத்துள்ளது. இதைப் பயன் படுத்திக் கொண்டு, வாடகைத் தாய் எனும் புதிய வேலை வாய்ப்பை பல தனியார் நிறுவனங்கள் இந்திய ஆட்சியாளர்களின் பேராதரவோடு உருவாக்கியுள்ளன.
`
இதன்படி, வாடகைத் தாயின் கருமுட்டையும் உள்நாட்டு வெளிநாட்டுத் தந்தையின் விந்தணுவும் தனித் தனியே சேகரிக்கப்பட்டு, சோதனைக் குழாயிலிட்டு வளர்த்து பின்னர் வாடகைத் தாயின் கருப்பை யிலிடப்படும்; வாடகைத்தாய் அக்கருவைச் சுமந்து குழந்தையைப் பெற்றுக் கொடுத்துவிட்டு, அதற்கீடாக உரிய தொகையைப் பெற்றுக் கொள்வார். இதுதான் ஆரவாரமாக அறிவிக்கப்பட்டு விளம்பரப் படுத்தப்படும் புதிய வேலை வாய்ப்பு. தாய்மை அடைவது என்பது இதர வேலைகளைப் போன்றதல்ல; அது வேலைவாய்ப்புத் துறையுமல்ல. தாய்மை என்பது மிகவும் சிக்கலானது; உணர்ச்சிப் பூர்வமானது. அது தாயின் வாழ்வு முழுவதிலும் நினைவில் நிற்கக் கூடியது. தாய்மைக் காலத்தில் எண்ணற்ற ஹார்மோன்கள் உருவாக்கும் உணர்வுகள் தாயிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிரசவத்திற்குப் பின் கைக்குழந்தைக்கும் தாய்க்குமிடையிலான உறவு உணர்ச்சிகள் நிறைந்தது. வாடகைத்தாய் எனும் வியாபார மானது, அறவியல் மதிப்பீடுகளுக்கு எதிராகஇத்தகைய உணர்ச்சிபூர்வ உறவுகள் அனைத்தையும் வெட்டிச் சிதைத்து, தாயை வெறும் மனித எந்திரமாகச் சிதைத்து விடுகிறது. இதுவொருபுறமிருக்க, அறவியல் மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு, வாடகைத் தாயின் உயிருக்கும் உடலுக்கும் ஏற்படும் அபாயங்கள், குழந்தைபிறந்த பின்னர் ஏற்படும் உளவியல் மற்றும் உணர்ச்சிபூர்வ பாதிப்புகள்பற்றி இந்தப் புதிய வேலைவாய்ப்பு அக்கறை கொள்வதில்லை. மேலும், ஏழை நாடுகளில் பெண்களுக்கு பிரசவத்தின்போது சிக்கல்களும் அபாயங்களும் பெருமளவில் உள்ளன. மருத்துவ சேவை என்பது ஏழை நாடுகளில் பெயரளவுக்கே உள்ளது. ஏழை நாடுகளில் நிலவும் வறுமையும், ஊட்டச்சத்து இல்லாமையும் தாய்மார்களுக்கு பிரசவ காலத்தில் பெரும்பாதிப்பை விளை விக்கின்றன. இருப்பினும், இத்தகைய ஏழ்மை நிலையிலுள்ள பெண்கள்தான். பிழைப்புக்கான வேறு வழியில்லாத நிலையில் வாடகைத் தாய்களாகிறார்கள்.
`
தாய்மையை வியாபாரமாக்கும் இப்புதிய தொழிலை சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ்,ஜெர்மனி முதலான பல மேற்கத்திய நாடுகள் தடை செய்துள்ளன. அனுமதிக்கப் பட்ட பல முதலாளித்துவ நாடுகளிலும் கடுமையான கட்டுப் பாடுகள் உள்ளன. கருத்தரிப்பு முறையில் ஏற்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தை வணிகமயமாக்கக் கூடாது என்று வாடகைத் தாய்க்கு சம்பளம் கொடுப்பதை கனடா நாட்டு அரசு தடைசெய்துள்ளது;
`
சுய விருப்பத்தின் அடிப்படையில் ஒரு பெண் இதனை ஏற்பதை மட்டுமே அந்நாடு அங்கீகரித்துள்ளது. பிரிட்டனில் இத்தகைய விவகாரங்களைப் பரிசீலிக்க சிறப்புக் கமிட்டிகள் நிறுவப்பட்டு, தன் ஒப்புதலின் அடிப்படையிலேயே வரம்புக்குட்பட்ட முறையில் வாடகைத் தாய் முறை அனுமதிக்கப் பட்டுள்ளது.வாடகைத் தாய் முறையை அனுமதிக்கும் பல ஏழை நாடுகளில் கூட, கடுமையான விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. அர்ஜெண்டினா, தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளில் ஒவ்வொரு வாடகைத் தாய் விவகாரத்தையும் பரிசீலிக்க சிறப்புக் கமிட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் பெயரளவுக்குக் கூட விதிகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) பொதுவில் சில வழி காட்டுதல்களை மட்டுமே கொடுத்துள்ளது. இவற்றைக் கொண்டு தாய்மையை வணிக மயமாக்கும் தனியார் மருத்துவ நிறுவனங்களையோ, வாடகைத் தாயை தேடி பேரம் நடத்தும் தரகு நிறுவனங்களையோ கட்டுப்படுத்த முடியாது;
`
பாதிப்பு ஏற்பட்டால் தண்டிக்கவும் முடியாது. குழந்தை பிறந்தபின், குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைத் தாயின் பொறுப்பில் குழந்தையை விடுவதற்குக் கூட விதிகளையும் கட்டுப் பாடுகளையும் இத்தகைய முறையை அனுமதிக்கும் நாடுகள் பின்பற்றுகின்றன. ஆனால் இந்தியாவில் இத்தகைய பிரச்சினைகள் குறித்த அக்கறையோ, வாடகைத் தாய் முறைக்கான விதிகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை.
`
அறவியல் மதிப்பீடுகள், வாடகைத் தாயின் உடல் நலப்பாதிப்புகள், இத்தொழிலை முறைப் படுத்துவதற்கான சட்டங்கள், உணர்ச்சி பூர்வபிரச்சினைகள் குறித்த முறைப் படுத்தல்கள் முதலான எதுவுமே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், வாடகைத் தாய்க்கு சட்டபூர்வ பாதுகாப்போ, பாதிப்புகளுக்கு நிவாரணமோ எதுவுமே இந்தியாவில் இல்லை. இவற்றைச் சாதகமாக்கிக் கொண்டு ஏழ்மையும் ஏழைகளும் நிறைந்த இந்தியாவில் வாடகைத் தாய்முறை வேகமாகப் பரவி வருகிறது. இதற்கேற்ப தனியார் ஐந்து நட்சத்திர மருத்துவ மனைகளும் தரகு நிறுவனங்களும் பெருகத் தொடங்கியுள்ளன. குறைந்த செலவில் சிகிச்சையும் குறைந்த விலைக்குப் பெண்களும் கிடைக்கும் என்ற விளம்பரங்களுடன் ""மருத்துவச் சுற்றுலா''க்களை நடத்தும் தரகு நிறுவனங்கள் அதிகரித்து வருகின்றன.
`
குழந்தைப் பேறு இல்லாதவெளிநாட்டுத் தம்பதிகள் இந்தியாவுக்குப் படையெடுக்கின்றனர். வாடகைத்தாயிடம் ரூ. 50,000 முதல் ரூ. 2 லட்சம் வரை பேரம் பேசப்படுகிறது. அதாவது, குறைந்தபட்சம் 1000 அமெரிக்க டாலர். அதேசமயம், இதுபோன்ற வாடகைத் தாய் முறைக்கு அமெரிக்காவில் குறைந்தபட்சம் 20,000 முதல் 30,000 டாலர் வரை", பரிசீலிக்க சிறப்புக் கமிட்டிகள் நிறுவப்பட்டு, அதன் ஒப்புதலின் அடிப்படையிலேயே வரம்புக்குட் பட்ட முறையில் வாடகைத் தாய் முறை அனுமதிக்கப் பட்டுள்ளது.
`

விந்தணுவும் தனித்தனியே சேகரிக்கப்பட்டு, சோதனைக் குழாயிலிட்டு வளர்த்து பின்னர் வாடகைத் தாயின் கருப்பை யிலிடப்படும்; வாடகைத் தாய் அக்கருவைச் சுமந்து குழந்தையைப் பெற்றுக் கொடுத்து விட்டு, அதற்கீடாக உரிய தொகையைப் பெற்றுக் கொள்வார். இதுதான் ஆரவாரமாக அறிவிக்கப் பட்டு விளம்பரப்படுத்தப் படும் புதிய வேலை வாய்ப்பு.
`
தாய்மை அடைவது என்பது இதர வேலைகளைப் போன்றதல்ல; அது வேலை வாய்ப்புத் துறையுமல்ல. தாய்மை என்பது மிகவும் சிக்கலானது; உணர்ச்சிப் பூர்வமானது. அது தாயின் வாழ்வு முழுவதிலும் நினைவில் நிற்கக் கூடியது. தாய்மைக் காலத்தில் எண்ணற்ற ஹார்மோன்கள் உருவாக்கும் உணர்வுகள் தாயிடம் பெருந்தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. பிரசவத்திற்குப் பின் கைக்குழந்தைக்கும் தாய்க்கு மிடையிலான உறவு உணர்ச்சிகள் நிறைந்தது. வாடகைத்தாய் எனும் வியாபாரமானது, அறவியல் மதிப்பீடுகளுக்கு எதிராக இத்தகைய உணர்ச்சிபூர்வ உறவுகள் அனைத்தையும் வெட்டிச் சிதைத்து, தாயை வெறும் மனித எந்திரமாகச் சிதைத்து விடுகிறது.
`
இது வொருபுறமிருக்க, அறவியல் மதிப்பீடுகளுக்கு அப்பாற்பட்டு, வாடகைத் தாயின் உயிருக்கும் உடலுக்கும் ஏற்படும் அபாயங்கள், குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் உளவியல் மற்றும் உணர்ச்சிபூர்வ பாதிப்புகள் பற்றி இந்தப் புதிய வேலை வாய்ப்பு அக்கறை கொள்வதில்லை. மேலும், ஏழை நாடுகளில் பெண்களுக்கு பிரசவத்தின்போது சிக்கல்களும் அபாயங்களும் பெருமளவில் உள்ளன. மருத்துவ சேவை என்பது ஏழை நாடுகளில் பெயரளவுக்கே உள்ளது. ஏழை நாடுகளில் நிலவும் வறுமையும், ஊட்டச்சத்து இல்லாமையும் தாய்மார்களுக்கு பிரசவ காலத்தில் பெரும் பாதிப்பை விளைவிக்கின்றன. இருப்பினும், இத்தகைய ஏழ்மை நிலையிலுள்ள பெண்கள்தான். பிழைப்புக்கான வேறு வழியில்லாத நிலையில் வாடகைத் தாய்களாகிறார்கள்.
`
தாய்மையை வியாபாரமாக்கும் இப்புதிய தொழிலை சுவீடன், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி முதலான பல மேற்கத்திய நாடுகள் தடை செய்துள்ளன. அனுமதிக்கப் பட்ட பல முதலாளித்துவ நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. கருத்தரிப்பு முறையில் ஏற்பட்டுள்ள புதிய தொழில் நுட்பத்தை வணிக மயமாக்கக் கூடாது என்று வாடகைத் தாய்க்கு சம்பளம் கொடுப்பதை கனடா நாட்டு அரசு தடைசெய்துள்ளது; சுய விருப்பத்தின் அடிப்படையில் ஒரு பெண் இதனை ஏற்பதை மட்டுமே அந்நாடு அங்கீகரித்துள்ளது.
`
பிரிட்டனில் இத்தகைய விவகாரங்களைப் பரிசீலிக்க சிறப்புக் கமிட்டிகள் நிறுவப்பட்டு, அதன் ஒப்புதலின் அடிப்படையிலேயே வரம்புக்குட் பட்ட முறையில் வாடகைத் தாய் முறை அனுமதிக்கப் பட்டுள்ளது. வாடகைத் தாய் முறையை அனுமதிக்கும் பல ஏழை நாடுகளில் கூட, கடுமையான விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. அர்ஜெண்டினா, தென் ஆப்பிரிக்கா முதலான நாடுகளில் ஒவ்வொரு வாடகைத் தாய் விவகாரத்தையும் பரிசீலிக்க சிறப்புக் கமிட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. ஆனால் இந்தியாவில் பெயரளவுக்குக் கூட விதிகளோ, கட்டுப்பாடுகளோ கிடையாது. இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) பொதுவில் சில வழி காட்டுதல்களை மட்டுமே கொடுத்துள்ளது. இவற்றைக் கொண்டு தாய்மையை வணிக மயமாக்கும் தனியார் மருத்துவ நிறுவனங்களையோ, வாடகைத் தாயை தேடி பேரம் நடத்தும் தரகு நிறுவனங் களையோ கட்டுப்படுத்த முடியாது; பாதிப்பு ஏற்பட்டால் தண்டிக்கவும் முடியாது. குழந்தை பிறந்தபின், குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைத்தாயின் பொறுப்பில் குழந்தையை விடுவதற்குக் கூட விதிகளையும் கட்டுப்பாடுகளையும் இத்தகைய முறையை அனுமதிக்கும் நாடுகள் பின்பற்றுகின்றன. ஆனால் இந்தியாவில் இத்தகைய பிரச்சினைகள் குறித்த அக்கறையோ, வாடகைத் தாய் முறைக்கான விதிகளோ, கட்டுப் பாடுகளோ இல்லை.
`
அறவியல் மதிப்பீடுகள், வாடகைத்தாயின் உடல் நலப்பாதிப்புகள், இத்தொழிலை முறைப் படுத்துவதற்கான சட்டங்கள், உணர்ச்சி பூர்வ பிரச்சினைகள் குறித்த முறைப் படுத்தல்கள் முதலான எதுவுமே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், வாடகைத் தாய்க்கு சட்டபூர்வ பாதுகாப்போ, பாதிப்புகளுக்கு நிவாரணமோ எதுவுமே இந்தியாவில் இல்லை.
`
குழந்தை பிறந்தபின், குறிப்பிட்ட காலத்திற்கு வாடகைத்தாயின் பொறுப்பில் குழந்தையை விடுவதற்குக் கூட விதிகளையும் கட்டுப்பாடுகளையும் இத்தகையமுறையை அனுமதிக்கும் நாடுகள் பின்பற்றுகின்றன. ஆனால் இந்தியாவில் இத்தகைய பிரச்சினைகள் குறித்த அக்கறையோ, வாடகைத் தாய்முறைக்கான விதிகளோ, கட்டுப்பாடுகளோ இல்லை. அறவியல் மதிப்பீடுகள், வாடகைத்தாயின் உடல்நலப்பாதிப்புகள், இத்தொழிலை முறைப் படுத்துவதற்கான சட்டங்கள், உணர்ச்சி பூர்வ பிரச்சினைகள் குறித்த முறைப்படுத்தல்கள் முதலான எதுவுமே இல்லை. சுருக்கமாகச் சொன்னால், வாடகைத் தாய்க்கு சட்டபூர்வ பாதுகாப்போ,பாதிப்புகளுக்கு நிவாரணமோ எதுவுமே இந்தியாவில் இல்லை. இவற்றைச் சாதகமாக்கிக் கொண்டு ஏழ்மையும் ஏழைகளும் நிறைந்த இந்தியாவில் வாடகைத் தாய்முறை வேகமாகப் பரவி வருகிறது.
`
மேலும்,இந்த வாடகைத் தாய், வெளிநாட்டு தம்பதிகள் போடும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுச் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகிறார். கோடிகோடியாய் அந்நியச் செலாவணி கிடைக்கும் துறையாகச் சித்தரிக்கப்படும் மருத்துவச் சுற்றுலாத்துறை, இப்போது மறுஉற்பத்திச் சுற்றுலாத் துறையாக மாறிவிட்டது. இதனால்தான், அடுத்த சில ஆண்டுகளில் 600 கோடி டாலர் அளவுக்கு வாடகைத் தாய் முறையில் வியாபாரம் பெருகும் என்று பெருமிதத்தோடு அறிவிக்கிறது, இந்தியமருத்துவ ஆராய்ச்சிக் கழகம். ஏராளமாக அந்நியச் செலாவணி கிடைக்கும்; மருத்துவர்கள், தாதிகள், தொழில் நுட்பவாதிகள், பரிசோதனைக் கூடப் பணியாளர்கள் எனப் பலருக்கு வேலை வாய்ப்புப் பெருகும் என்று ஆளும் வர்க்கங்களும் மருத்துவத் துறையினரும் வாடகைத்தாய் தொழிலை ஆரவாரத்துடன் வரவேற்கின்றனர்.
`
ஏற்கெனவே நடந்துவரும் சிறுநீரக விற்பனைத் தொழிலை வாடகைத் தாய் தொழில் விஞ்சிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர். குஜராத்தின் ஆனந்த் நகரிலுள்ள அகான்க்ஷா கருத்தரிப்பு மையத்தின் தலைவரான டாக்டர் நயனாபடேல், கால் சென்டர் பி.பி.ஓ.க்களில் வெளிநாட்டு வேலைகளை ஒப்பந்த அடிப்படையில் செய்து தருவதைப் போல, வாடகைத் தாய் எனும் புதியவணிகம் வேகமாக வளர்ந்து வருவதாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார்.
`
வாடகைத்தாய் மார்களைக் கொண்டு வியாபாரம் செய்யும் இவர், 1970களில் ஆனந்த் நகரில் அமுல் நிறுவனம் நடத்திய வெண்மைப் புரட்சிக்குப் (பால் பெருக்குத்திட்டம்) பிறகு இப்போது இந்நகரில் வாடகைத்தாய் புரட்சி நடப்பதாகக்கூறுகிறார். மும்பையிலுள்ள மல்பானி கருத்தரிப்பு மையத்தின் டாக்டர்அஞ்சலி மற்றும் அனிருத்தா ஆகியோர், கடந்த ஈராண்டுகளில் தமது சிகிச்சை மையத்திற்கு வாடகைத் தாயைத் தேடிவரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளதாக பூரித்துப் போகின்றனர். "அவன் அவள் அது'' கதைபோல இத்தொழில் இரகசியமாக நடை பெறுவதில்லை. கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் வெளிப் படையாகவே நடக்கத் தொடங்கி விட்டது. புனே நகரிலுள்ள ஒரு கருத்தரிப்பு சிகிச்சை மையம், குழந்தையில்லா வெளிநாட்டுத் தம்பதிகளை அழைப்பதோடு, இளம் இந்தியப் பெண்களை இம்மையத்தின் உறுப்பினராகச் சேர்ந்து பயனடையுமாறு பல்வேறு சிறப்புப் பரிசுகளுடன்", கொடுக்கப்படுகிறது. ஏழ்மை காரணமாகவும் கட்டுப்பாடுகள் இல்லாததாலும்இந்தியாவில் வாடகைத் தாய்க்கான ஒப்பந்தக்கூலி மிக மலிவாக உள்ளது. மேலும்,இந்த வாடகைத்தாய், வெளிநாட்டு தம்பதிகள் போடும் எல்லா நிபந்தனைகளையும் ஏற்றுச் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்கும் ஆளாகிறார். கோடி கோடியாய் அந்நியச் செலாவணி கிடைக்கும் துறையாகச் சித்தரிக்கப்படும் மருத்துவச் சுற்றுலாத்துறை, இப்போது மறு உற்பத்திச் சுற்றுலாத் துறையாக மாறிவிட்டது.
`
இதனால்தான், அடுத்த சில ஆண்டுகளில் 600 கோடி டாலர் அளவுக்கு வாடகைத்தாய் முறையில் வியாபாரம் பெருகும் என்று பெருமிதத்தோடு அறிவிக்கிறது, இந்தியமருத்துவ ஆராய்ச்சிக் கழகம். ஏராளமாக அந்நியச் செலாவணி கிடைக்கும்;மருத்துவர்கள், தாதிகள், தொழில்நுட்பவாதிகள், பரிசோதனைக்கூடப்பணியாளர்கள் எனப் பலருக்கு வேலைவாய்ப்புப் பெருகும் என்று ஆளும் வர்க்கங்களும் மருத்துவத்துறையினரும் வாடகைத்தாய் தொழிலை ஆரவாரத்துடன்வரவேற்கின்றனர். ஏற்கெனவே நடந்துவரும் சிறுநீரக விற்பனைத் தொழிலைவாடகைத்தாய் தொழில் விஞ்சிவிடும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
`
குஜராத்தின் ஆனந்த் நகரிலுள்ள அகான்க்ஷா கருத்தரிப்பு மையத்தின் தலைவரான டாக்டர் நயனாபடேல், கால் சென்டர் பி.பி.ஓ.க்களில் வெளிநாட்டு வேலைகளைஒப்பந்த அடிப்படையில் செய்து தருவதைப் போல, வாடகைத்தாய் எனும் புதியவணிகம் வேகமாக வளர்ந்து வருவதாகப் பெருமையுடன் குறிப்பிடுகிறார். வாடகைத்தாய்மார்களைக் கொண்டு வியாபாரம் செய்யும் இவர், 1970களில் ஆனந்த் நகரில் அமுல் நிறுவனம் நடத்திய வெண்மைப் புரட்சிக்குப் (பால் பெருக்குத்திட்டம்) பிறகு இப்போது இந்நகரில் வாடகைத்தாய் புரட்சி நடப்பதாகக்கூறுகிறார். மும்பையிலுள்ள மல்பானி கருத்தரிப்பு மையத்தின் டாக்டர்அஞ்சலி மற்றும் அனிருத்தா ஆகியோர், கடந்த ஈராண்டுகளில் தமது சிகிச்சை மையத்திற்கு வாடகைத்தாயைத் தேடிவரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை நான்குமடங்கு அதிகரித்துள்ளதாக பூரித்துப் போகின்றனர்.
`
"அவன் அவள் அது'' கதைபோல இத்தொழில் இரகசியமாக நடைபெறுவதில்லை.கவர்ச்சிகரமான விளம்பரங்களுடன் வெளிப்படையாகவே நடக்கத் தொடங்கி விட்டது. புனே நகரிலுள்ள ஒரு கருத்தரிப்பு சிகிச்சை மையம், குழந்தையில்லா வெளிநாட்டுத் தம்பதிகளை அழைப்பதோடு, இளம் இந்தியப் பெண்களை இம்மையத்தின் உறுப்பினராகச் சேர்ந்து பயனடையுமாறு பல்வேறு சிறப்புப் பரிசுகளுடன் அழைக்கிறது. பல்வேறு தனியார் மருத்துவ நிறுவனங்களும் தரகு நிறுவனங்களும் "நீங்கள் வாழ்நாள் முழுக்க சம்பாதிப்பதைவிட மிக அதிகமாகச் சம்பாதிக்கமுடியும்'' என்று கிராமப்புறப் பெண்களை வெளிப்படையாக ஆசைகாட்டிஅழைக்கின்றன. மகளின் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக வாடகைத் தாயாகிய குஜராத்தின் வீணா ராவத்,கடன் சுமை யிலிருந்து மீள்வதற்காக வாடகைத் தாயாகிய மும்பையின் சேத்னா ஜாதவ் என ஏழைப் பெண்கள் வேறு வழியின்றி தமக்காகவும் தமது குடும்பத்துக்காகவும் தமது உடலைமறுஉற்பத்திக் கூடமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள். குழந்தையில்லா வெளிநாட்டுத் தம்பதிகள் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்து தமது வாரிசாக வளர்க்க முடியும். ஆனால், எனது இரத்தவழி வாரிசுஎன்ற ஆணாதிக்க சொத்துடைமை வர்க்கத் திமிரும் பணத்திமிரும் சேர்ந்து கொள்ள, அனைத்தையும் பண உறவாக்கியுள்ள உலகமயம் இப்புதிய அடிமைத் தொழிலை ஏழை நாடுகளில் வேர்விட்டுப் பரவச் செய்துள்ளது.
`
இந்திய ஏழைத் தாய்மார்கள்இந்த வக்கிரத் தொழிலின் கூலி அடிமைகளாக்கப் பட்டுள்ளார்கள். ஒரு வெளிநாட்டுத் தம்பதியினர், ஆண் வாரிசை எதிர்பார்த்து வாடகைத் தாயைஒப்பந்தக் கூலியாக அமர்த்திக் கொண்டு, அத்தாய்க்கு பெண் குழந்தைபிறந்தால், அந்தக் குழந்தைக்கு யார் பொறுப்பு என்பதற்கான விதிகளோ, சட்டங்களோ இந்தியாவில் இல்லை. கருவிலுள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணாஎன்று கண்டறிந்து, பெண் குழந்தை எனில் கருக்கலைப்பு செய்ய வாடகைத் தாயை நிர்பந்தித்தால் அல்லது ஒப்பந்தப்படி கூலி தர மறுத்தால் அதை விசாரிக்கவோ தண்டிக்கவோ எவ்வித சட்டப் பாதுகாப்பும் இந்தியாவில் இல்லை. மேலும், ஒருவாடகைத் தாய் எத்தனை முறை இவ்வாறு செயற்கை முறையில் கருத்தரிக்கலாம், அதனால் தாயின் உடல்நலத்திற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பற்றிய அக்கறையோ, விதிகளோ கட்டுப்பாடோ எதுவுமில்லை. வாடகைத்தாய் முறையை அனுமதித்துள்ள இதர ஏழை நாடுகளில் கூட, இவ்வாறு 2 முறை மட்டுமே கருத்தரிக்கலாம் என்று விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. ஆனால் இந்தியாவில் 5 முறை இவ்வாறு கருத்தரிக்க தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. அதற்கு மேலும் கருத்தரித்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் வாடகைத் தாய்மார்களுக்கு ஆட்சியாளர்கள் சிறப்புப் பரிசுகள் அளித்தாலும்",1]

`
அழைக்கிறது. பல்வேறு தனியார் மருத்துவ நிறுவனங்களும் தரகு நிறுவனங்களும் ""நீங்கள் வாழ்நாள் முழுக்க சம்பாதிப்பதைவிட மிக அதிகமாகச் சம்பாதிக்கமுடியும்'' என்று கிராமப்புறப் பெண்களை வெளிப்படையாக ஆசைகாட்டிஅழைக்கின்றன. மகளின் உயர்கல்விச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக வாடகைத் தாயாகிய குஜராத்தின் வீணா ராவத், கடன் சுமையிலிருந்து மீள்வதற்காக வாடகைத் தாயாகிய மும்பையின் சேத்னா ஜாதவ் என ஏழைப் பெண்கள் வேறு வழியின்றி தமக்காகவும் தமது குடும்பத்துக்காகவும் தமது உடலை மறு உற்பத்திக் கூடமாகப் பயன் படுத்திக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.
`
குழந்தையில்லா வெளிநாட்டுத் தம்பதிகள் இந்தியாவின் ஏழைக் குழந்தைகளைத் தத்தெடுத்து தமது வாரிசாக வளர்க்க முடியும். ஆனால், எனது இரத்தவழி வாரிசுஎன்ற ஆணாதிக்க சொத்துடைமை வர்க்கத் திமிரும் பணத்திமிரும் சேர்ந்து கொள்ள, அனைத்தையும் பணஉறவாக்கியுள்ள உலகமயம் இப்புதிய அடிமைத் தொழிலை ஏழைநாடுகளில் வேர்விட்டுப் பரவச் செய்துள்ளது. இந்திய ஏழைத் தாய்மார்கள் இந்த வக்கிரத் தொழிலின் கூலி அடிமைகளாக்கப் பட்டுள்ளார்கள்.
`
ஒரு வெளிநாட்டுத் தம்பதியினர், ஆண் வாரிசை எதிர்பார்த்து வாடகைத் தாயை ஒப்பந்தக் கூலியாக அமர்த்திக் கொண்டு, அத்தாய்க்கு பெண் குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தைக்கு யார் பொறுப்பு என்பதற்கான விதிகளோ,சட்டங்களோ இந்தியாவில் இல்லை. கருவிலுள்ள குழந்தை ஆணா அல்லது பெண்ணாஎன்று கண்டறிந்து, பெண் குழந்தை எனில் கருக்கலைப்பு செய்ய வாடகைத் தாயை நிர்பந்தித்தால் அல்லது ஒப்பந்தப்படி கூலி தர மறுத்தால் அதை விசாரிக்கவோதண்டிக்கவோ எவ்வித சட்டப் பாதுகாப்பும் இந்தியாவில் இல்லை.
`
மேலும், ஒருவாடகைத் தாய் எத்தனை முறை இவ்வாறு செயற்கை முறையில் கருத்தரிக்கலாம்,அதனால் தாயின் உடல் நலத்திற்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதைப் பற்றிய அக்கறையோ, விதிகளோ கட்டுப்பாடோ எதுவுமில்லை. வாடகைத்தாய் முறையை அனுமதித்துள்ள இதர ஏழைநாடுகளில் கூட, இவ்வாறு 2 முறை மட்டுமே கருத்தரிக்கலாம் என்று விதிகளும் கட்டுப்பாடுகளும் உள்ளன. ஆனால்இந்தியாவில் 5 முறை இவ்வாறு கருத்தரிக்க தாராள அனுமதி தரப்பட்டுள்ளது. அதற்கு மேலும் கருத்தரித்து அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் வாடகைத் தாய்மார்களுக்கு ஆட்சியாளர்கள் சிறப்புப் பரிசுகள் அளித்தாலும் ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு முன்னர் கும்பினி ஆட்சியின்கீழ் நமது முன்னோர்கள் இலங்கை, மலேயா, மொரீசியஸ் முதலான நாடுகளுக்குக் கட்டி இழுத்துச் செல்லப்பட்டு, பாம்பும் அட்டையும் கொடிய விலங்குகளும் நிறைந்த காடுகளில் தள்ளப்பட்டு, தோட்டத் தொழில் செய்யும் அடிமைகளாக்கப் பட்டார்கள். அது காலனியாதிக்கம். இன்று நம்நாட்டு இளம் பெண்கள் வாடகைத்தாய் எனும் மறு உற்பத்தி அடிமைகளாக மாற்றப்பட்டு வருகிறார்கள்.
`
இது மறுகாலனியாதிக்கம். தொழில் நுட்பவாதிகள் ஏற்றுமதி, கூலித் தொழிலாளர்கள் ஏற்றுமதி என்று தொடங்கி இப்போது இந்தியத் தாய்மார்களின் கருவறையும் வர்த்தகப் பண்டமாக மாற்றப்பட்டு விட்டது. இதுதான் மறுகாலனியாக்கம் நாட்டுக்கு அளித்துள்ள "பரிசு'! இம்மறு காலனியாக்கத்தை வீழ்த்தாமல் பெண் விடுதலை என்பது ஒருக்காலும் சாத்தியமில்லை என்பதை நாட்டுக்கு உணர்த்திவிட்டு, வாடகைத் தாய்மார்கள்நவீன அடிமைகளாக உழன்று கொண்டிருக்கிறார்கள்.
`
***********************************************
`
தோழமையடன்\-க.அருணபாரதி-- \முத்தமிழ் குழுமம்\
`
"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு." -- பாவேந்தர்.

உயிர்ப்பற்றுப் போன தமிழ்ப்பல்கலைக்கழகம்!?

உயிர்ப்பற்றுப் போன தமிழ்ப்பல்கலைக்கழகம்!?செப்டம்பர் 15 - தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகம் துவங்கிய நாள்

`
-------- தெ.மதுசூதனன்
`

1925- -ல் திருச்சியிலிருந்து 'தமிழன்' எனும் பத்திரிகை வெளி வந்துகொண்டிருந்தது. −அப் பத்திரிகையில் எம்.எஸ். பூரணலிங்கம் பிள்ளை என்பவர்கட்டுரைகள் பல எழுதி வந்தார்.
`
தமிழ் மொழிக்கென்று ஓர் தனித்துவமானபல்கலைக்கழகம் வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி கட்டுரை ஒன்றுஎழுதியிருந்தார்.
`
தமிழ்ச்சூழலில் −அக் கோரிக்கையின் நியாயப்பாடு பல்வேறு தமிழபிமானிகளால் வரவேற்கப் பட்டது.
`
இந்த நூற்றாண்டின் முதல் முப்பது ஆண்டுகளில் சென்னைப் பல்கலைக்கழகஆட்சிக் குழுவிலிருந்த பெரும்பாலோர் தமிழை முழுமையாகப் புறக்கணித்துவரக்கூடிய சூழலும் அப்போது நிலவியது. ஆகவே அத் தருணத்தில் தமிழ்மொழிக்கென்று தனிப் பல்கலைக் கழகக் கோரிக்கை ஏற்புடையதாகவேயிருந்தது.
`
எம்.எஸ். முன் வைத்த கோரிக்கை அன்றைய சைவ அறிஞர்கள் பலராலும் தீவிர பிரச்சாரப் படுத்தும் கோரிக்கையாகவே யிருந்தது.
`
பல முனைகளிலும் தமிழ்ப் பல்கலைக்கழகக் கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டிருந்தனர். அன்றைய சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழுவிலிருந்த சில அங்கத்தவர்களும் −இக் கோரிக்கையை வலியுறுத்தினர்.
`
−இதனால் ஆட்சிக்குழுவிலிருந்த தெலுங்கர்கள் சிலர்ஆந்திரப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையையும்முன்வைத்தனர்.தமிழ் மொழிக்கான முழுமையான பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டுமென்றகோரிக்கை வலுப்பட்டு வந்தாலும் அன்றைய ஆங்கிலேய அரசு அங்கீகாரம் கொடுக்கபின் நின்றது.
`
அதே நேரம் 1928- −ல் ஆந்திராவில் ஆந்திரப் பல்கலைக்கழகம்உருவாக்குவதற்கான அனுமதியை பிரிட்டிஷ் அரசு கொடுத்தது. இப்போக்கு தமிழுக்கும் நிச்சயம் தனித்த பல்கலைக்கழகம் உருவாவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்தது.
`
அத் தருணத்தில் சிதம்பரத்தில் அண்ணாமலைச் செட்டியாரால் நடத்தப்பட்டு வந்த ஸ்ரீ மீனாட்சிகல்லூரி போன்ற சில கல்லூரிகளை −இணைத்துப் பல்கலைக்கழகமாக உருவாக்கும்முயற்சியில் ஈடுபட்டார்.
`
1929-களில் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. தமிழ்ப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை படிப்படியாகவலுவிழந்து போகும் சூழல் உருவானது.
`
−இதற்கு அண்ணாமலைச் செட்டியாரின் முயற்சியே காரணம் என்ற குற்றச்சாட்டு கூட சில மட்டங்களில் உள்ளது.எவ்வாறாயினும் தமிழ்ப் பல்கலைக்கழகம் ஒன்று உருவாக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கையும் கரைந்து போனது.
`
அவ்வப்பொழுது ஒரு சிலரால் தமிழ்ப் பல்கலைக்கழகக் கோரிக்கை மேற்கிளம்பும்.

இருப்பினும் 1980-களில் எம்.ஜி.ஆர். முதலமைச்சராகயிருந்த பொழுது தமிழ்ப் பல்கலைக் கழகக் கோரிக்கை மறு பிறப்பு எடுத்தது. எம்.ஜி.ஆரும் இக்கோரிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்க முற்பட்டார். 1981 செப்டம்பர் 15- இல்தஞ்சையில் 'தமிழ்ப் பல்கலைக் கழகம்' உருவாக்கப்பட்டது.
`
தமிழ் மொழிக்கென்று தனித்த பல்கலைக்கழகம் உருவாக்கப்பட வேண்டுமென்ற நீண்டகாலக் கோரிக்கை எம்.ஜி.ஆரால் தீர்த்து வைக்கப்பட்டது. தஞ்சாவூர் திருச்சி சாலையில் வல்லம் என்ற ஊருக்கருகே ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்உருவாக்கப்பட்டது.
`
வானத்திலிருந்து பார்த்தால் தமிழ் எழுத்து தெரியும்வகையில் பல்கலைக்கழக கட்டடம் கட்டவும் தீர்மானிக்கப்பட்டது.தமிழகத்தில் உள்ள ஏனைய பல்கலைக்கழகங்களிலிருந்து 'தமிழியல்' சார்ந்தஉயர்நிலைக் கல்வி ஆய்வு மையமாகத் திகழவே வடிவமைக்கப்பட்டது.
`
இப்பல்கலைக் கழகத்தின் முதல் துணை வேந்தராகப் பேராசிரியர். வி.ஐ.சுப்பிரமணியம் அவர்கள் நியமிக்கப்பட்டார். அவரது ஆளுமையிலும் ஆற்றலிலும் பல்கலைக்கழகம் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்றால் மிகையாகாது.'தமிழியல்' ஆராய்ச்சிப் பரப்பின் வகை மாதிரியாகத் திகழும் வகையில் கல்விப்புலம் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டது.
`
அவை : 1. கலைப்புலம் 2.மொழிப்புலம் 3. சுவடிப்புலம் 4. வளர் தமிழ் புலம் 5. அறிவியல் புலம்ஒவ்வொரு துறைக்கும் துறைபோகிய புலமையாளர்கள் வரவழைக்கப்பட்டு பல்கலைக் கழகத்துக்குத் தக்க தளம் அமைக்கப்பட்டது. மேல்நாட்டு ஆராய்ச்சிப் புலமைச் செழுமையைத் தக்கவாறு தமிழுக்குக் கொண்டு வந்து சேர்த்திட வி.ஐ.சுப்பிரமணியம் திட்டமிட்டுப் பணியாற்றினார்.
`

எம்.ஜி.ஆர். தக்க ஒருவரைதுணை வேந்தராக நியமித்தமை பாராட்டத்தக்கது. வி.ஐ. சுப்பிரமணியம் கண்ணும்கருத்துமாகயிருந்து சிறந்த பல்கலைக்கழகமாக வளர்ந்திட அரும்பாடுபட்டார். தனது பணிகளில் எவரது குறுக்கீடுகள் எதனையும் விரும்பாதவர். கண்டிப்பானவர். அதனால் எவர் தலையிட்டாலும் உடனே தனது பதவியை ராஜினாமா செய்து விடுவேன் என்றும், அதற்காக எப்போதுமே ராஜினாமா கடிதத்தைத் தயாராகவே வைத்திருந்தார் என்றும் கூறுவர்.
`
பல்வேறு வெளிநாட்டுப் புலமையாளர்கள் வருகை தரு பேராசிரியர்களாகவும் ஆராய்ச்சியாளர்களாகவும் பல்கலைக்கழகத்துக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
`
ஜெர்மன், சுவிட்சர்லாந்து, ஈழம், போலந்து போன்ற நாடுகளிலிருந்து பலர் வருகை தரு பேராசிரியர்களாக −இருந்துள்ளனர்.
`
−இங்குள்ள ஆசிரியர்கள் பலர் வெளிப் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று ஆராய்ச்சியில் ஈடுபடவும், பயிற்சிபெறவும் அதற்கான வாய்ப்புக்களை பல்கலைக்கழகம் அமைத்துக் கொடுத்தது.
`
சிலதுறைகளில் உயராய்வு மையங்களும் உருவாக்கப்பட்டன. மண்டபத்தில் நிகழாய்வு மையம், உதகமண்டலத்தில் மலையின மக்கள் ஆய்வு மையம், காஞ்சிபுரத்தில் தத்துவ ஆய்வு மையம், பல்கலைக்கழகத்தில் பேரகராதித் துறை, வாழ்வியல்களஞ்சிய மையம், அறிவியல் களஞ்சிய மையம் போன்றவை உருவாக்கப்பட்டு ஆராய்ச்சிச் செல்நெறியில் புதிய அத்தியாயங்களைத் தோற்றுவிக்க முற்பட்டன.
`
பல்வேறு நூல்கள், நூலடைவுகள், ஆவணப்படுத்தல்கள் எனத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் பணிகள் குறுகிய காலத்தில் வளர்ந்தன. ஆராய்ச்சிக்கருத்தரங்குகள் பல திட்டமிட்டு முன்னெடுக்கப்பட்டன.வி.ஐ.சுப்பிரமணியத்தின் காலத்தில் பல்கலைக்கழகச் சூழல் திட்டமிட்டுஉருவாக்கி வளர்க்கப்பட்டது.
`
−இதன் பின்னர் வந்த துணை வேந்தர்கள் காலத்தில் எந்த நோக்கத்துக்காகப் பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை ஈடேற்றம் காணும் வகையில் சிதைவை நோக்கி நகரத் தொடங்கியது.
`
−இன்று பல்கலைக்கழகச் சூழலில் தொடர்ந்து போராட்டங்களும் நிதிப்பற்றாக்குறையும் நிர்வாகச் சீர்கேடுகளும் எனத் தொடர்கதையான பல்கலைக்கழகமாகமாறிவிட்டது.
`
அரசு தலையீடுகள் பல்கலைக்கழகத்தின் கலாசாரத்தையே ஆட்டம் காணவைக்கிறது. நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க அறக்கட்டளைகள் பலவற்றை அடகுவைத்துக் கடன் வாங்கும் நிலைமைகள் கூட உருவாகியுள்ளது.
`
தமிழ்ப் பல்கலைக்கழகம் பெயருக்கு மாத்திரமே பல்கலைக்கழகமாக அதன்கட்டடங்கள் மட்டும் நிமிர்ந்து நிற்கிறது. வி.ஐ.சுப்பிரமணியத்தின்காலத்தில் பிரகாசிக்கத் தொடங்கிய பல்கலைக்கழகம் அவருக்குப் பின்னால்மங்கத் தொடங்கியது. தமிழ் மொழி, தமிழர்
`
−இவற்றின் உயர் கல்வி ஆய்வுநிறுவனமாகத் திகழ வேண்டிய பல்கலைக்கழகம் −இன்று உயிர் வாழ்வதற்கே போராடவேண்டியுள்ளது.
`
பல்கலைக்கழகத்தின் ஆத்மாவைச் சிதைக்கும் துணைவேந்தர்களின் வருகை, அரசுத் தலையீடு, பொறுப்பற்ற ஆசிரியர்களின் புகலிடம்என யாவும் கூட்டுச் சேர்ந்து 'தமிழ்ப் பல்கலைக் கழகத்தின்' உயிர்ப்பை நிறுத்தி வருகின்றன.தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் எதிர்காலம் தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கும்பிரச்சினைப்பாடுகளின் சமிக்ஞைகளில் ஒன்று எனலாம்.
`