அறிவிப்பு

இனிய நண்பர்களே!

தமிழ் மன்றத்தில் செயற்பாடுகள் அனைவர்க்கும் மகிழ்ச்சி அளிக்கக் கூடிய வகையில் இருப்பதை அறிவீர்கள். தமிழ் மன்றம் ஆயிரக்கணக்கான நூல்களைக் கொண்ட நூலகத்தைக் கொண்டுள்ளது. அதனைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது! இது எங்களது செயற்பாட்டிற்குச் சான்றாகும்.
நூலகத்தைக் கொண்ட மட்டும் கொண்டது தமிழ் மன்றமாகாது என்பதைக் கருத்திற் கொண்டு, நண்பகல் சொற்பொழிவைத் தொடங்கினோம். பல் வேறு தலைப்பு களில் சொற்பொழிவுகள் நிகழ்ந்தன. தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. அந் நிகழ்ச்சிக்கு அன்பர்களிடையே ஆதரவு பெருகியது. சிறப்பான முறையில் நூறாவது நிகழ்ச்சியை நிறைவு செய்தோம். இப்பொழுது, இருநூறாவது நிகழ்ச்சியை நோக்கி வீறு நடை போட்டு சென்று கொண்டிருக்கிறோம்.
இந்திய ரிசர்வ் வங்கி வரலாற்றில் ஒரு மைல் கல் போல சென்ற ஆண்டு "தமிழ் மன்றத்தின் வெள்ளி விழா" கொண்டாடினோம். அதேபோல் இவ்வாண்டு, "பொங்கல் விழா" வைக் கொண்டாடினோம். தமிழ் மன்றத்தின் நீண்ட கால நோக்கத்தைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டோம். அதன் பயனாக வெளி மாநிலத்திலிருந்து வருகை புரிந் திருக்கும் அதிகாரிகளுக்கும் பிற ஊழியர்களுக்கும் "தமிழ்மொழிப் பயிற்சி" அளிக்கிறோம். தமிழ்மொழியைப் பேசவும் எழுதவும் பயிற்றுவிக்க 'அமெரிக்கப் பல்கலைக் கழகம்' தயாரித்துள்ள பாடங்களை அடிப்படையாகக் கொண்டு பயிற்சி யளிக்கிறோம்.
வங்கியில், இரண்டு வெண்பலகைகள் நிறுவியுள்ளோம். அதில் 'தினம் ஒரு திருக்குறள்' வரைகின்றோம். திருக்குறள் கருத்துகள் அனைவர்க்கும் சென்றடையுமாறு 'தமிழ்' 'ஆங்கிலம்' ஆகிய இரு மொழிகளில் G.U.போப் உரையை வரைகின்றோம். ரிசர்வ் வங்கியின் துறை தோறும் தமிழ்ப் பெயர்ப் பலகைகளை நிறுவும் முயற்சிகளை மேற்கொண்டு செயல்படுத்திக் கொண்டு வருகின்றோம்.
தற்போது தமிழ் மன்றம், 'இந்திய ரிசர்வ வங்கி' இணைய தளத்திலிருந்து வங்கி ஊழியர்கள் பயன்படும் விதத்தில் அரிய தகவல்களை வழங்க முன்வந்துள்ளது! என்பதை மகிழ்ச்சியுடன்தெரிவித்துக் கொள்கிறோம்.வாரந்தோறும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரிய சொற்பொழிவைப் போல வாரந்தோறும் அரிய தகவல்களை இணையத்தில் பதிந்து வைக்க எண்ணியுள்ளோம். வங்கி ஊழியர்கள் தங்கள் படைப்பு களைத் தமிழ் மன்ற நிருவாகிகளிடம் அளிக்க முன்வந்தால் அவை இணையத்தில் வெளியிடப்படும்.
தமிழ் மன்றத்தின் சிறப்புக்கும் செயற்பாட்டிற்கும் வங்கி நிருவாகமும் உறுப்பினர்களும் அளித்துவரும் ஆதரவுமே காரணம்!என்று கூறிப் பெருமை கொள் கின்றோம். தமிழ் மன்றத்தின் வளர்ச்சிக்குத் துணைபுரியும் அனைவர்க்கும் எங்களது பணிவான நன்றியையும் வணக்கத்தையும் உரித்தாக்குகிறோம்.
வாழ்க தமிழ்! வளர்க உறவு!