திருவானைக் கோயில் – சித்தர் தத்துவ விளக்கம்.

திருவானைக் கோயில் – சித்தர் தத்துவ விளக்கம்.
காவிரி தோன்றுமிடம் குடகுமலை. காவிரி இரண்டாகப் பிரியுமிடம் 'முக்கொம்பு'. பிரிந்த காவிரி மீண்டும் கூடுமிடம் 'கல்லணை'. கல்லணையிலிருந்து ஐந்து கிளைகளாகப் பிரிந்து பல பெயர்களைக் கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறது, காவிரி. காவிரியின் முதற்பெயர் பொன்னி. பின்பு காவிரி எனப்பெயர் பெற்றது. கல்லனைக்கு அருகில் காவிரி நதித்தீவில் அமைந்துள்ளது, திருவானைக் கோயில்.
தத்துவம்: குடகுமலை பிரம்ம நிலையைக் குறிக்கும். பிரம்மம் என்பது ஒன்றே. முக்கொம்பில் இரண்டாகப் பிரிவது ஒன்று இடகலை. மற்றொன்று பிங்கலை. நடுவிலுள்ள தீவு சுழிமுனை. கல்லணையில் ஐந்தாகப் பிரிவது ஞானேந்திரியங்கள், ஐந்து. இவை நம்மை நோக்கிச் செலுத்துவதால் ஆற்றோடு போகாது நாம் எதிர் நீச்சலிட்டு மேலே சென்று பிரம்மத்துடன் கலக்க வேண்டும் என்பதை விளக்குவதே திருவானைக் கோயில்.
திருச்சியிலிருந்து சென்னை செல்லும் சாலையில், திருச்சிக்கு வடக்கே நான்கு கல் தொலைவில் கீழ்நோக்கி இறங்கி, கிழக்கு முகமாகச் சென்றால் கோயில் நுழைவாயிலுக்கு முன், நான்கு கால் மண்டபம் ஒன்று உள்ளது. இந்த மண்டபம், நாம் விடுகின்ற வாசியானது நான்கு அங்குலம் நம்மை விட்டுப் பிரிந்து செல்வதை நாம் கட்டுப் படுத்த வேண்டும் என்பதை குறிக்கிறது.
நாம் உள்ளே இழுக்கும் போது பன்னிரண்டு அங்குலம் உள்ளே செல்கிறது. மூச்சை வெளியே விடும்போது நான்கு அங்குலம் வெளியேறுகிறது. நான்கு அங்குலம் வீணாகிறது. ஒவ்வொருமுறையும் நான்கு அங்குலக் காற்று வீணாவதனால், ஆயுள் குறைவு ஏற்படுகிறது. நான்கு அங்குலம் வெளியேறி வீணாவதைத்தடுத்தால் ஆயுள் கூடும் என்பதால், வீணாவதைத் தடுத்து அது உடலோடு சேர்க்கச் சொல்லிக் காட்டுவதுதான் நான்குகால் மண்டபம்.
அதை அடுத்து, மூன்று கோபுரங்கள் உள்ளன. அவை, மும்மலங்களைக் கடந்து உள்ளே செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கின்றன.
முதல் கோபுரத்தைக் கடந்து இரண்டாவது கோபுரம் நுழையும் போது ஒரு படி இறங்கிச் செல்லவேண்டும். அது, நமது மனம் யோக நிலையில் கீழிறங்கிச் செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கும். அக்கோபுரத்தின் இரண்டு பக்கமும் வினாயகர் சுப்பிரமணியர் உள்ளனர்.
இடப்பக்கமுள்ள வினாயகர் என்பது பிரணவம் என்னும் ஓங்காரத்தையும், வலது பக்கமுள்ள சுப்பிரமணியர் பாம்பின் மீது மயில் வாகனத்தில் வேலாயுதத்துடன் உள்ளார். அது, பிரணவத்தைப் பிடித்து அப்பியாசம் செய்தால் மயில் என்ற மாயை யோகமாகிய வேலாயுத்த்தால் வெல்லலாம் என்பதைக் குறிக்கிறது. பாம்பு என்பது வாசியைக் குறிக்கிறது. சுப்பிரமணியன் வென்ற சூரபதுமன் நமது உடலில் உள்ள 96 வகை த்த்துவன்fகளைக் குறிக்கிறது. சுப்பிரமணி என்பது நமது உடலில் விளையக்கூடியது. அது விளைய ஆரம்பித்தால் காரியங்கள் யாவற்றையும் செய்யலாம். இதுவே காமதேனு கற்பம் எனப்படுகிறது. இதனைத்தான் பழனியில் கோவண தீர்த்தம் எனக் காலையில் கொடுக்கிறர்கள்.
மூன்றாவது கோபுரம் கடந்து ஒருபடி இறங்கியதும் வலப்புறம் சுந்தரேசர், மீனாட்சி சன்னதி தனித்தனியே உள்ளது. இடப்புறம் சம்புகேசர், அகிலாண்ட நாயகி சன்னதி தனித்தனியே உள்ளது. அடுத்து ஊஞ்சல் மண்டபம் உள்ளது. வடபகுதியில் ஒரு தூணில் காளை, யானை சிற்பம் உள்ளன. ஒரே நேரத்தில் அவை இரண்டையும் காண முடியாது. ஏதேனும் ஒன்றைத்தான் காண முடியும். காளையைக் காணும் போது யானை தெரியாது. யானையைக் காணும் போது காளையைக் காண முடியாது.
தெற்குப் பக்கத்தில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரும் லிங்கவடிவில் உள்ளனர். மூவரும் ஒருவரே என்பது இதன் கருத்து.
கோவில்கள் எல்லாம் தரை மட்டத்திற்கு மேல் படிப்படியாக உயர்ந்து செல்வதுபோல் இருக்கும். ஆனால், திருவானைக்காவல் சிவன் நீரில் இருக்கிறது. இக்கோயில் படிகளில் இறங்கிச் சென்றால் காவிரி நீர் மட்டத்திற்குச் சென்று விடலாம். அங்கே லிங்கம் இருக்கிறது. மழைக்காலங்களில் லிங்கம் நீரில் மூழ்கிவிடும். ஆகவே, இக்கோயில், ' சுவாதிட்டானம்' கோயில் என்பர்.
அது ஏன்? நம் உடலில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும் பகுதி சுவாதிட்டானம் ஆகும்.
ஒவ்வொரு கோயிலிலும் தலவிருட்சம் இருக்கும். அதுபோல், இக்கோயிலில் இருக்கும் தலவிருட்சம் 'வெண்நாவல்' மரம். அது, ஜெம்பு மகரிஷி என்னும் முனிவர் அடக்கமான இடத்தில், சுமார் 500 ஆண்டுகளாக உள்ளது! என்பர். யோகம் செய்பவர்கள், தங்கள் உடலில் ஏற்படுகின்ற வெப்பத்தைத் தணிக்க வில்வம் சாப்பிட வேண்டும் என்பதைக் குறிக்க இங்கே விலவம் தலமரமாக இருக்கிறது.
இக்கோயில், சோழன் கோச் செங்கண்ணனால் கட்டப்பட்டது. இக்கொயிலுள் யானை நுழைய முடியாத அளவுக்கு வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மனம் என்பது மதம்கொண்ட யானை போன்றது. இக்கோயில் அமைந்துள்ள முறையில் வழிபட்டால் மனம் அடங்கிவிடும் என்பது பொருள்.
இக்கொயிலில் முக்கிய கோபுரங்கள் ஐந்து. அவை 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைக் குறிக்கிறது. உயிர்க்குறிய குணங்கள் ஐந்து. அவை, அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் ஆகியவை. இவற்றையும் இக்கோபுரங்கள் குறிக்கின்றன.
அகிலாண்டேஸ்வரி சன்னதிக்குச் செல்லும் வழியில் 12 தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது. இது சூரிய கலையைக் குறிக்கிறது. அடுத்து, 16 தூண்களைக் கொண்ட மண்டபம் உள்ளது. இது, சந்திர கலையைக் குறிக்கிறது.
அம்மன் சன்னதிக்கு முன் உள்ள இரு கதவுகளில் ஒவ்வொரு கதவிலும் 48 + 48 = 96 குமிழ்கள் உள்ளன. அவை உடம்பிலுள்ள 96 தத்துவங்களைக் குறிக்கின்றன. யோகம் செய்பவர் 96 தத்துவங்களைக் கடந்து செல்லவேண்டும் என்பதற்கு இவை அடையாளமாக விளங்குகின்றன.
யோகமும் வாகனமும்
காளை வாகனம். இது தருமத்தைக் குறிக்கும். உழைப்பின் சின்னம்.
சூரிய பிரபை வாகனம். அக இருளை நீக்கும் என்பதாகும்.
சந்திர பிரபை வாகனம். குளிர்ச்சியைக் குறிக்கும்.
அன்ன வாகனம். பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும் நீரை நீக்கிவிட்டு தண்ணீரை அருந்தும் அன்னத்தைப் போல, உலக பந்தங்களுக்கு அடிமையாகாது யோகத்தினால் கிடைக்கும் இன்பமாகிய அமுதப்பாலை மட்டுமே அருந்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கைலாச வாகனம். இராவணன் சாமகானம் (பிராணாயாம்ம்) பாடி இறைவன் அருளைப் பெற்றான். அது போல் நாமும் பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பூதவாகனம். யோகத்தினால் உலகப்பற்று நடுங்கும் என்பதாகும்.
சர்ப்பவாகன. குண்டலினி சக்தியால் யோக நிலையில் சித்தி அடைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
யானை வாகனம். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அடக்கினால், அகப்பற்றும் புறப்பற்றும் நீங்கும் என்பதைக் குறிக்கும்.
சிம்ம வாகனம். ஆணவத்தை அடக்கு என்பதைக் குறிக்கிறது.
குதிரை வாகனம். பஞ்ச இந்திரியங்களின் (பூதங்கள்) வேகத்தைக் குறிக்கிறது. குதிரையை அடக்குவது போல புலன்களை அடக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பல்லக்கு. மனிதர்கள் நன்னிலை அடைய வேண்டுமானால், மனதை அலைய விடக்கூடாது என்பதைக் குறிக்கிறது.
தெப்பம். நீரில் மிதப்பது போல வாழ்க்கையின் கரை தெரியாமல் தத்தளிப்பவர்கள் பிராணாயாமம் செய்தால், கரை சேர்வார்கள் என்பதைக் குறிக்கிறது.
தேர். உலகத்தையே அடக்கிக் காட்டுகிறது. அதில் சிற்றின்ப பேரின்ப துன்பக் காட்சிகள் சிற்பமாக இருக்கும். புருவமாகிய தேரில் ஏறினால், இறைவனைக் காணலாம். புருவமே பத்தாவது வாசலாகும். இந்த வாசலைத் திறக்க யோக அக்னியாகும். இந்த சாவியை உடையவரே இறைவன் காட்சி அளிக்கும் வாசலைத் திறக்க முடியும்.
பலி பீடத்திலிருந்து முருகன் சன்னதிக்குச் செல்லும் வழியில், வலப்புறம் நான்கு தூண்கள். ஒவ்வொரு தூணிலும் பேரின்பத்தை உண்டு பண்ணக்கூடிய சிற்பங்கள். சிற்றின்பச் சிற்பங்கள். விந்து தத்துவத்தை மேல் நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்பதைக் குறிக்கும் முறையில் அமைந்துள்ளது. விந்துவை மேல் நிலைக்குக் கொண்டுவருபவன் தெய்வமாகலாம்! என்று விளக்கப்பட்டுள்ளது. தூண்களுக்கு மேல் 12 இராசிகள் அமைந்துள்ளன.
இதன் விளக்கமாக, ஓக சாதகர் மும்மலத்தையும் கடந்து முதுகுத் தண்டின் வழியாக சுழிமுனை நாடி வழியாக பிராண சத்தியை மேலேற்றி உச்சியை அடைந்தால், அதன் பின் நாளும் கோளும் ஒன்றும் செய்யாது என்று பொருள்.
அடுத்து, பலிபீடம். அது, மும்மலத்தை பலியிடவேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கொடிமரம், முதுகுத் தண்டைக் குறிக்கும். கொடிக்கம்பத்தில் 32 அங்கங்கள் உள்ளன. முதுகுத் தண்டிலும் 32 பகுதிகள் உள்ளன.
முதுகுத் தண்டினுள் உள்ள துவாரத்தில் ஈக முறையில் உயிர்மூச்சைச் செலுத்தினால், மரணமற்ற வாழ்வு கிட்டும்.
ஆறுநிலைகளைக் கடந்து ஏழாவது நிலையை அடைந்தால் தெய்வ நிலையை அடையலாம் என்பதைக் குறிக்க, ஆறு படிகளைக் கடந்து ஏழாவது நிலையில் சம்புகேசர் உள்ளார்.
சம்புகேசர் முன்பு ஒன்பது துவாரங்களைக் கொண்ட கல் சன்னல் உள்ளது. ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. இந்த ஒன்பது துவாரங்களும் ஒன்பது தீர்த்தங்களும் நம் உடலில் உள்ளன.
ஒன்பது துவாரங்களின் வழியாக வெளியேறும் உயிர்காற்றை (பிராணன்) வெளியேறாமல் நிறுத்தினால், நாம் பறக்க முடியும். இவ்வாறு பிராண சத்தியை நிறுத்தி காற்றுபோல வானில் பறந்து செல்வதைக் குறிக்கிறது, ஆஞ்சநேயர்.
இந்த நிலையை அடைய நடுவிடமாகிய ஆக்ஞை பூட்டிக் கிடக்கிறது. அதைத் திறந்துவிட்டால், பல அதிசயங்களைக் காணலாம்.
கோவில்கள் எல்லாம் தரை மட்டத்திற்கு மேல் படிப்படியாக உயர்ந்து செல்வதுபோல் இருக்கும். ஆனால், திருவானைக்காவல் சிவன் நீரில் இருக்கிறது. இக்கோயில் படிகளில் இறங்கிச் சென்றால் காவிரி நீர் மட்டத்திற்குச் சென்று விடலாம். அங்கே லிங்கம் இருக்கிறது. மழைக்காலங்களில் லிங்கம் நீரில் மூழ்கிவிடும். ஆகவே, இக்கோயில், ' சுவாதிட்டானம்' கோயில் என்பர்.
அது ஏன்? நம் உடலில் எப்போதும் நீர் நிறைந்திருக்கும் பகுதி சுவாதிட்டானம் ஆகும்.
ஒவ்வொரு கோயிலிலும் தலவிருட்சம் இருக்கும். அதுபோல், இக்கோயிலில் இருக்கும் தலவிருட்சம் 'வெண்நாவல்' மரம். அது, ஜெம்பு மகரிஷி என்னும் முனிவர் அடக்கமான இடத்தில், சுமார் 500 ஆண்டுகளாக உள்ளது! என்பர். யோகம் செய்பவர்கள், தங்கள் உடலில் ஏற்படுகின்ற வெப்பத்தைத் தணிக்க வில்வம் சாப்பிட வேண்டும் என்பதைக் குறிக்க இங்கே விலவம் தலமரமாக இருக்கிறது.
இக்கோயில், சோழன் கோச் செங்கண்ணனால் கட்டப்பட்டது. இக்கொயிலுள் யானை நுழைய முடியாத அளவுக்கு வாயில் அமைக்கப்பட்டிருக்கிறது. அதாவது, மனம் என்பது மதம்கொண்ட யானை போன்றது. இக்கோயில் அமைந்துள்ள முறையில் வழிபட்டால் மனம் அடங்கிவிடும் என்பது பொருள்.
இக்கொயிலில் முக்கிய கோபுரங்கள் ஐந்து. அவை 'நமசிவாய' என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தைக் குறிக்கிறது. உயிர்க்குறிய குணங்கள் ஐந்து. அவை, அன்னம், பிராணன், மனம், விஞ்ஞானம், ஆனந்தம் ஆகியவை. இவற்றையும் இக்கோபுரங்கள் குறிக்கின்றன.
அகிலாண்டேஸ்வரி சன்னதிக்குச் செல்லும் வழியில் 12 தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்று உள்ளது. இது சூரிய கலையைக் குறிக்கிறது. அடுத்து, 16 தூண்களைக் கொண்ட மண்டபம் உள்ளது. இது, சந்திர கலையைக் குறிக்கிறது.
அம்மன் சன்னதிக்கு முன் உள்ள இரு கதவுகளில் ஒவ்வொரு கதவிலும் 48 + 48 = 96 குமிழ்கள் உள்ளன. அவை உடம்பிலுள்ள 96 தத்துவங்களைக் குறிக்கின்றன. யோகம் செய்பவர் 96 தத்துவங்களைக் கடந்து செல்லவேண்டும் என்பதற்கு இவை அடையாளமாக விளங்குகின்றன.

யோகமும் வாகனமும்
காளை வாகனம். இது தருமத்தைக் குறிக்கும். உழைப்பின் சின்னம்.
சூரிய பிரபை வாகனம். அக இருளை நீக்கும் என்பதாகும்.
சந்திர பிரபை வாகனம். குளிர்ச்சியைக் குறிக்கும்.
அன்ன வாகனம். பாலையும் தண்ணீரையும் கலந்து வைத்தாலும் நீரை நீக்கிவிட்டு தண்ணீரை அருந்தும் அன்னத்தைப் போல, உலக பந்தங்களுக்கு அடிமையாகாது யோகத்தினால் கிடைக்கும் இன்பமாகிய அமுதப்பாலை மட்டுமே அருந்த வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
கைலாச வாகனம். இராவணன் சாமகானம் (பிராணாயாம்ம்) பாடி இறைவன் அருளைப் பெற்றான். அது போல் நாமும் பெற வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பூதவாகனம். யோகத்தினால் உலகப்பற்று நடுங்கும் என்பதாகும்.
சர்ப்பவாகன. குண்டலினி சக்தியால் யோக நிலையில் சித்தி அடைய வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
யானை வாகனம். ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அடக்கினால், அகப்பற்றும் புறப்பற்றும் நீங்கும் என்பதைக் குறிக்கும்.
சிம்ம வாகனம். ஆணவத்தை அடக்கு என்பதைக் குறிக்கிறது.
குதிரை வாகனம். பஞ்ச இந்திரியங்களின் (பூதங்கள்) வேகத்தைக் குறிக்கிறது. குதிரையை அடக்குவது போல புலன்களை அடக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது.
பல்லக்கு. மனிதர்கள் நன்னிலை அடைய வேண்டுமானால், மனதை அலைய விடக்கூடாது என்பதைக் குறிக்கிறது.
தெப்பம். நீரில் மிதப்பது போல வாழ்க்கையின் கரை தெரியாமல் தத்தளிப்பவர்கள் பிராணாயாமம் செய்தால், கரை சேர்வார்கள் என்பதைக் குறிக்கிறது.
தேர். உலகத்தையே அடக்கிக் காட்டுகிறது. அதில் சிற்றின்ப பேரின்ப துன்பக் காட்சிகள் சிற்பமாக இருக்கும். புருவமாகிய தேரில் ஏறினால், இறைவனைக் காணலாம். புருவமே பத்தாவது வாசலாகும். இந்த வாசலைத் திறக்க யோக அக்னியாகும். இந்த சாவியை உடையவரே இறைவன் காட்சி அளிக்கும் வாசலைத் திறக்க முடியும்.

கபிலர் அகவல்

நான்முகன் படைத்த நானாவகை உலகில்
ஆன்ற சிறப்பின் அரும்பொருள் கூறுங்கால்

ஆண்முதிதோ பெண்முதிதோ அன்றி அலிமுதிதோ
நாள்முதிதோ கோண்முதிதோ நல்வினை முதிதோ
தீவினை முதிதோ

செல்வச் சிறப்போ அறிவு சிறப்போ
தொல்லை மாஞாலம் தோற்றமோ படைப்போ

எல்லாப் பிறப்பும் இயற்கையோ செயற்கையோ
காலத்தால் சாவரோ பொய்ச்சாவு சாவரோ

நஞ்சுறு தீவினை துஞ்சுமோ துஞ்சாதோ
துஞ்சும்போது அந்தப் பஞ்சேந்திரியம்

என்செயா நிற்குமோ எவ்விடத்து ஏகுமோ
ஆற்ற லுடையீர் அருந்தவம் புரிந்தால்

வேற்றுடம்பு ஆகுமோ தமது உடம்பாகுமோ
உண்டியை உண்குவது உடலோ உயிரோ

உலகத் தீரே உலகத் தீரே
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறைந்து

சாற்றக் கேண்மின் சாற்றக் கேண்மின்
மனிதர்க்கு வயது நூறுஅல்லது இல்லை

ஐம்பது இரவில் அகலும் துயிலினால்
ஒட்டிய இளமையால் ஓர் ஐந்து நீங்கும்

ஆக்கை இளமையில் ஐம்மூன்று நீங்கும்
எழுபது போக நீக்கு இருப்பன முப்பதே.

அவற்றுள்

இன்புறு நாளும் சிலவேயதா அன்று
துன்புறு நாளும் சிலவே யாதலால்

பெருக்காறு ஒத்தது செல்வம் பெருக்காறு
இடிகரை யொத்தது இளமை இடிகரை

வாழ்மரம் ஒத்தது வாழ்நாள் ஆதலால்
ஒன்றே செய்யவும் வேண்டும் ஒன்றும்

நன்றே செய்யவும் வேண்டும் நன்றும்
இன்றே செய்யவும் வேண்டும் இன்றும்

இன்னே செய்யவும் வேண்டும் இன்னும்
நாளை நாளை என்பீராகில்

நமனுடை முறைநாள் ஆவதும் அறியீர்
நம்முடை முறைநாள் ஆவதும் அறியீர்

எப்போது ஆயினும் கூற்றுவன் வருவான்
அப்போது அந்த கூற்றுவன் தன்னைப்

போற்றவும் போகான் பொருளொடும் போகான்
சாற்றவும் போகான் தமரொடும் போகான்

நல்லார் என்னான் நல்குரவு அறியான்
தீயார் என்னான் செல்வர் என்று உன்னான் 40
தரியான் ஒருகணம் தருகணாளன்

உயிர்கொடு போவான் உடல்கொடு போகான்
ஏதுக்கு அழுவீர் ஏழை மாந்தர்காள்

உயிரினை இழந்தோ உடலினை இழந்தோ
உயிர் இழந்து அழுதும் என்று ஓதுவீராகில்

உடலினை அன்றுஅலாது இன்றும் காண்கிலீர்
உயிரினை இழந்த உடலது தன்னைக்

களவுகொண்ட கள்வனைப் போலக்
காலும் ஆர்த்துக் கையும் ஆர்த்துக்

கூறை களைந்து கோவணம் கொளுவி
ஈமத்தீயை எரி எழ மூட்டிப்

பொடிபடச் சுட்டுப் புனலிடை மூழ்கிப்
போய்த் தமரோடும் புந்தி நைந்து அழுவது

சலம் எனப் படுமோ சதுர் எனப்படுமோ.
பார்ப்பன மாந்தர்காள் பகர்வது கேண்மின்

இறந்தவராய் உமை இல்லிடை இருத்திப்
பாவனை மந்திரம் பலபட உரைத்தே

உமக்கு அவர் புத்திரர் ஊட்டின போது
அடுபசியால் குலைந்து ஆங்குஅவர் மீண்டு 60.

கைஏந்தி நிற்பது கண்டதுயார் புகலீர்
அருந்திய உண்டியால் ஆர் பசி கழிந்தது?

ஒட்டிய மிலேச்சர் ஊணர் சிங்களர்
இட்டிடைச் சோனகர் யவனர் சீனத்தர்

பற்பலர் நாட்டினர் பார்ப்பார் இலையால்
முற்படைப்பு அதனில் வேறாகிய முறைமையால்

நால் வகைச் சாதி இந்நாட்டினில் நாட்டினீர்
மேல்வகை கீழ்வகை விலங்குவது ஒழுக்கால்

பெற்றமும் எருமையும் பிறப்பினில் வேறே
அவ்விரு சாதியில் ஆண்பெண் மாறிக் 70

கலந்து கருப்பெறல் கண்டது உண்டோ?
ஒருவகைச் சாதியா மக்கட் பிறப்பில் ஈர்

இரு வகையாக நீர் இயம்பிய குலத்து
ஆண் பெண் மாறி அணைதலும் அணைந்த பின்

கருப்பொறை உயிர்ப்பதும் காண்கின்றிலீரோ?
எந்நிலத்து எந்தவித்து இடப்படுகின்றதோ

அந்நிலத்து அந்தவித்து அங்கு உரித்திடும் அல்லால்
மாறி வேறாகும் வழக்கம் இன்றில்லையே

பூசுரர் புணர்ந்து புலைச்சியர் ஈன்ற
புத்திரர் ஆயினோர் பூசுரர் அல்லரோ 80

பெற்றமும் எருமையும் பேதமாய்த் தோன்றல் போல்
மாந்தரில் பேதமாய் வடிவு எவர் கண்டுளார்

வாழ்நாள் உறுப்புமெய் வண்ணமோடு அறிவினில்
வேற்றுமை ஆவதும் வெளிப்படல் இன்றே

தெந்திசைப் புலையன் வடதிசைக்கு ஏகில்
பழுது அற ஓதிப் பார்ப்பான் ஆவான்

வடதிசைப் பார்ப்பான் தெந்திசைக்கு ஏகின்
நடையது கோணிப் புலையன் ஆவான்

அது நிற்க,

சேற்றில் பிறந்த செங்கழுநீர் போலப் பிரமற்குக்
கூத்தி வயிற்றில் பிறந்த வசிட்டரும், வசிட்டர்க்குச்
சண்டாளி வயிற்றில் பிறந்த சத்தியரும், சத்தியர்க்குப்
புலைச்சி தோள் சேர்ந்து பிறந்த பராசரும், பராசருக்கு மீன்
வாணிச்சி வயிற்றில் பிறந்த வியாசரும் இந்நால்வரும்

வேதங்கள் ஓதி வேன்மைப் பட்டு
மாதவராகி வயங்கினர் அன்றோ?

அருந்தவ மாமுனியாம் பகவற்குக்
கருவூர்ப் பெரும்பதிக் கண்பெரும் புலைச்சி

ஆதி வயிற்றினில் அன்று அவதரித்த
கான்முளை யாகிய கபிலனும் யானே 100

என்னுடன் பிறந்தவர் எத்தனை பேர் எனில்
ஆண்பால் மூவர் பெண்பால் நால்வர்

யாம்வளர் திறம் சிறிது இயம்புவல் கேண்மின்
ஊற்றுக்காடு எனும் ஊர் தனில் தங்கியே

வண்ணார் அகத்தில் உப்பை வளர்ந்தனள்
காவிரிப்பூம் பட்டினத்தில் கள்விலைஞர் சேரியில்

சான்றார் அகம்தனில் உறுவை வளர்ந்தனள்
நரம்புக் கருவியோ ந்ண்ணிடு சேரியில்

பாணர் அகத்தில் ஔவை வளர்ந்தனள்
குறவர் கோமான் கொய்தினைப் புனஞ்சூழ்

வண்மலைச் சாரலில் வள்ளி வளர்ந்தனள்
தொண்டை மண்டலத்தில் வண்டமிழ் மயிலைப்

பறையர் இடத்தில் வள்ளுவர் வளர்ந்தனர்
அரும்பார் சோலைச் சுரும்பார் வஞ்சி

அதிகன் இல்லிடை அதிகமான் வளர்ந்தனன் 115
பாரூர் நீர் நாட்டு ஊர் தன்னில்

அந்தணர் வளர்க்க யானும் வளர்ந்தேன்.
ஆதலால்,

மாரிதான் சிலரை வரைந்து பெய்யுமோ?
காற்றும் சிலரை நீக்கி வீசுமோ 110

மாநிலம் சுமக்க மாட்டேன் என்னுமோ
கதிரோன் சிலரைக் காயேன் என்னுமோ

வாழ்நான்கு சாதிக்கு உணவு நாட்டிலும்
கீழ்நான்குச் சாதிக்கு உணவு காட்டிலுமோ

திருவும் வறுமையும் செய்தவப் பேறும்
சாவதும் வேறிலை தரணியோர்க்கே

குலமும் ஒன்றே குடியும் ஒன்றே
இறப்பும் ஒன்றே பிறப்பும் ஒன்றே

வழிபடு தெய்வமும் ஒன்றே ஆதலால்
முன்னோர் உரைத்த மொழி தவறாமல் 120

எந்நாள் ஆயினும் இரப்பவர்க்கு இட்டுப்
புலையும் கொலையும் களவும் தவிர்த்து

நிலைபெற அறத்தில் நிற்பதை அறிந்து
ஆணும் பெண்ணும் அல்லதை உணர்ந்து

பேணி உரைப்பது பிழைஎனப் படாது

சிறப்பும் சீலமும் அல்லது

பிறப்பு நலம் தருமோ பேதையீரே! 127