அருளுரை - 1
சிரித்துப் பழகு!
சிரித்துப் பழகு
நாளும் நீ
சிரித்துப் பழகு!
சிரிப்பு ஓர்சிறந்த வரம்!
மானுடப் பிறவிக்கு!
கவலைகள் அதிகமா!
கவலைப் படாதே!
சிரிக்கப் பழகு!
துன்பங்கள் வரும்போதும்
துவளாமல் சிரி!
உள்ளத்து விசனங்களை
வெளியிலே எறி!
சிரித்துப் பழகு
நாளும் நீ சிரித்துப் பழகு!
தினமும் சில நிமிடம்
சிரிக்கும் நேரம்அதிகமாக்கு!
அதுவே பாதிச் சுமை
உன்னிடத்தில் குறைக்கும்!
உன்னைச் சுற்றி
ஒளிவட்டம் தோன்றும்!
தேஜஸ் கண்டுஉன்
பின்னே கூட்டம்
வரக் கூடும்!
திரும்பிப் பார்!
அவர்களும் திரும்பிடுவர்!
அச்சத்தில் அல்ல!
உன் தேஜஸ்கண்டு
தடுமாறுவர்!
சிலர்
உன்மேல்கல்லெறியக் கூடும்!
உன்னைப் போல்கவலையின்றி
இருக்கஇயலாமையின்
பொறாமை!
மனதார மன்னித்து விடு!
அவர்களையும்பார்த்துச் சிரி!
புரிந்தாலும் ஒதுங்கிக்கொள்வர்!
புரியாவிட்டாலும் கூட!
இப்படியேசில நாள்
பயிற்சியில்சிரிப்பு
உனக்குகை கைகூடிவிடும்!
உன் பொறுப்புகளும்
வாழ்க்கைச் சுமையும்
உன்னைதொந்தரவு
செய்யாது!
சுதந்திரமாக உணர்வாய் நீ!
இப்போது இன்னும்
அதிக நேரம் சிரிக்கலாம் நீ!அப்புறமென்ன ?
வந்துவிடு எங்களுடன்!
சேர்ந்து சிரிப்போம்!
நீ
மறுத்தாலும் நாங்கள்காத்துக்
கொண்டிருப்போம்!
வந்துவிடுவாய் என்று!
அருளுரை 2 :
நீ நீயாகவும்,
நான் நானாகவும்...!
நீநீயாக இரு!
நான்நானாகஇருக்கிறேன்!
நாம்நாமாகவேஇருப்போம்!
இவர்கள்
இவர்களாகவேஇருக்கட்டும்!
அவர்கள்
அவர்களாகவேஇருக்கட்டும்!
நீநானாக வேண்டாம்!
நான்நீயாக வேண்டாம்!
நாம்நாமாகவேஇருப்போம்!
எவரோஎவராகவோஇருக்கட்டும்!
நமக்கென்ன?
ஒருகுழப்பமும்இல்லை!
நீநானாகவும்நான்நீயாகவும்மாற எண்ணாதவரை!
அருளுரை 3 :
இறைவன்கொடுத்துள்ளான்!
இலவசம் தேடிஓடிடும் மானிடரே!
கிடைக்காமல் போனாலோ
வருந்துகிறீர் வேதனையால்!
இறைவன்கொடுத்தானே
இனியதொருஇலவசத்தை!
யாருக்கும்இன்னலில்லை!
யாருடனும்சண்டையில்லை!
அடுத்தாரைப்பார்க்கையிலே
அன்பாய்ப்புன்னகைக்க
கல்
மனதுஎன்றாலும்
கரைந்திடுமேஅன்பினில்தான்!
இறைவன்கொடுத்துள்ளான்
இலவசமாய்ப்புன்னகையை!
அடுத்தார்க்குக்கொடுப்பதனால்
நமக்கொன்றும்நஷ்டமில்லை!
வீசிடுங்கள்புன்னகையை!
எல்லோர்க்கும்இலவசமாய்!
சுவாமி பித்தானந்தா
கீழ்ப்பாக்கம்.
வியாழன், நவம்பர் 09, 2006
சுவாமி பித்தானந்தாவின் அருளுரைகள்.
இட்டவர்
முனைவர் இர.வாசுதேவன், 'தமிழ் மன்றம்'
நேரம்
மாலை 4:28
Subscribe to:
Post Comments (Atom)
0 மறுமொழிகள்:
நீங்களும் சொல்லுங்கள்...