சமையல் குறிப்புகள்

காரா பூந்தி

தேவையான பொருள்கள்:

கடலை மாவு – கால் கிலோ
அரிசி மாவு – நூறு கிராம்
உப்பு – ஒரு டீ ஸ்பூன்
உடைத்த நிலக்கடலைப் பருப்பு – ஐம்பது கிராம் கறிவேப்பிலை – மூன்று கொத்து மிளகாய் (அல்லது) மிளகு பொடி – ஒரு டீ ஸ்பூன் எண்ணை – அரை லிட்டர்



கடலை மாவு, அரிசி மாவு, உப்பு மூன்றையும் இட்லி மாவு பதத்திற்கு கரைக்கவும் அடுப்பில் கடயை வைத்து எண்ணையை ஊற்றி சூடாக்கவும்.

மாவை ஒரு சிறிய கிண்ணத்தில் எடுத்துக் எண்ணைக்கு நேராக பூந்திக் கரண்டி அல்லது ஏதாவது கண் உள்ள அரிகரண்டியைப் பிடித்துக் கொண்டு அதில் ஊற்றவும். பூந்தி மேலே எழும்பி நன்றாக வெந்ததும் (அமுக்கிப் பார்த்தால் அமுங்கக் கூடாது) அரித்து எடுக்கவும்.

பூந்தி உருண்டையாக விழவில்லயென்றால் சிறிது கடலை மாவு சேர்க்கவும்.பூந்தி முழுதும் தயாரானதும் ஒரு பாத்திரத்தில் வைத்து கறிவேப்பிலை, நிலக்கடலையை எண்ணையில் பொரித்து அதில் போடவும். பிறகு மிளகாய் தூளைப் போட்டு நன்றாக குலுக்கி வைக்கவும்.

நல்ல கரகரப்பான பூந்தி தயார்.

பூந்தி ரெய்தா

தேவையான பொருள்கள்:

காரா பூந்தி – நூறு கிராம்
எண்ணய் – ஒரு டீ ஸ்பூன்
கடுகு & உளுந்து – ஒரு டீ ஸ்பூன்
பெருங்காயம் – ஒரு சிட்டிகை
கறிவேப்பிலை – இரண்டு கொத்து
வெங்காயம் – ஒன்று
ப. மிளகாய் – ஒன்று
தயிர் – கால் லிட்டர்
உப்பு – ஒரு டீ ஸ்பூன்
நறுக்கிய மல்லி இலை – இரண்டு டேபிள் ஸ்பூன்


மிளகாய், வெங்காயத்தை மிகப் பொடியாக நறுக்கி வைக்கவும். அடுப்பில் கடாயை வைத்து எண்ணை ஊற்றி காய்ந்ததும் கடுகு & உளுந்து தாளித்து மிளகாய் போடவும். வாசனை வந்ததும் கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயம் போட்டு தயிரை ஊற்றி அடுப்பை அனைக்கவும்.

பூந்தியை ஒரு பாத்திரத்தில் போட்டு தயிர் கலவையை அதில் உற்றவும்.
வெங்காயம் போட்டு கிண்டி விட்டு மேலே மல்லி இலை தூவவும்.